இதயப் பூவும் இளமை வண்டும் – 128

(Tamil Sex Stories - Idhayapoovum Ilamaivandum 128)

Raja 2016-01-20 Comments

This story is part of a series:

Pundai Thadavum Tamil Sex Stories – கண்களை மூடிப் படுத்த.. சசியின் தலை ‘கிர்’ ரெனச் சுற்றியது.
சட்டென கண்களை விழித்து.. தலையை ஒரு உதறு.. உதறிக்கொண்டான்.!
தலையைத் தூக்கிப் பார்த்தான்..

புவி போய்விட்டாள்.
கதவு லேசாகத் திறந்திருந்தது.
எழுந்து போய் கதவைச் சாத்தித் தாழிட்டான்.
அப்போதும் அவனுக்கு தலை சுழல்வது போலிருந்தது..!
லேசான தள்ளாட்டத்துடன் நடந்து போய்.. கட்டிலில் விழுந்து அப்படியே தூங்கிப் போனான்..!!

எத்தனை நேரத் தூக்கம் என்று தெரியவில்லை.
அவனுக்கு தூக்கம் கலைந்தபோது.. அவனது உடம்பு மொத்தமும் ‘குப்’ பென வியர்த்துப் போயிருந்தது.
அவன் கழுத்தும்.. நெஞ்சும் வியர்வையில் குளித்திருந்தது.
பேனைப் பார்த்தான்.
அது சுழன்றுகொண்டுதான் இருந்தது.!
அவனது நெற்றியிலிருந்தும் வியர்வை வழிந்து கொண்டிருக்க.. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகுதான்… கடுமையான தலைவலியை உணர்ந்தான்..!!
பக்கத்தில் கிடந்த போர்வையை எடுத்து.. அவனது முகம்..உடம்பெல்லாம்.. துடைத்துக் கொண்டு.. புரண்டு படுத்தான்..!
அவனது சுய உணர்வு அதிகமாக.. தலைவலி.. மிகவும் கடுமையாவதை உணர்ந்தான்..!
தலையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் படுத்திருந்தான்.
அதற்குள் மீண்டும் அவன் உடம்பு வியர்வையில் குளித்துவிட்டது..!!

அவனால் எதையும் நினைக்கக் கூட முடியவில்லை. தலைவலி மண்டையைப் பிளப்பது போலிருந்தது..! எழுந்து போய் சுவற்றில் முட்டிக்கொள்ளலாமா.. என்கிற அளவுக்கு.. அவன் தலைவலியால் துவண்டு கொண்டிருக்க…..
அவனது வயிற்றில் இருந்து.. ஏதோ ஒரு உருண்டையான பந்து.. திடீரென வந்து அவன் தொண்டையைத் தாக்குவது போல் இருக்க… அவனது வாய்…
‘ஓவ்வ்வ்..’ என்கிற ஓங்கரிப்புடன்.. திறக்க…
வாந்தி வருவதை அடக்க முடியாமல் சடாரென எழுந்து.. அப்படியே முன்னால் மடங்கி… கட்டிலுக்குக் கீழே..
‘பொலே ‘ ரென தரையில்.. கக்கினான் சசி..!!

அடுத்தடுத்த தாக்குதலாகத் தொடர்ந்து மூன்று முறை.. அவன் வாந்தியெடுத்த பிறகுதான்.. அவனுக்கு சற்று.. அவகாசம் கிடைத்தது..!
ஆனால் மீண்டும் வாந்தி வரும் என்பதை உணர்ந்த சசி… சட்டென எழுந்து… வாந்தியை மிதித்து விடாமல் தாண்டிப் போய்.. கதவைத் திறக்க…
அங்கேயே.. அவன் வாய் ஓங்கரித்தது..!
கதவைத் திறந்ததும்.. வாசலிலேயே மீண்டும் ஒரு முறை வாந்தி எடுத்தான்.!
அப்படியே பாத்ரூம் ஓடி.. கதவைத் தள்ளிக்கொண்டு போய்.. சத்தமாக ஓங்கரித்தவாறு.. வயிற்றில் இருந்த கசப்பையும்.. சகிக்க முடியாத நாற்றத்தையும்..
‘பொலேர்.. பொலேர்..!!’ என வாந்தியாக எடுத்துத் தள்ளினான்.!
அவனது அடி வயிற்றில் இருந்து.. ஓங்கரித்து.. ஓங்கரித்து.. வாந்தி எடுத்தான்..!!

ஒரு பக்கம் தலைவலி.. மிக மிகக் கடுமையாக இருந்தது. உடம்பிலிருந்து வியர்வையும் கொட்டியது..!
அவன் சுவற்றைப் பிடித்துக் கொண்டு.. ஓங்கரித்துக்கொண்டிருக்க…

” என்னாச்சு..?” என அவனுக்குப் பின்னால் குரல் கேட்டது.

சட்டென திரும்பிப் பார்த்தான்.
புவி.. நின்றிருந்தாள்.
அவன் வாய் மீண்டும் ஓங்கரிக்க… சட்டென முகம் திருப்பி.. வாந்தியெடுத்தான்.!
உள்ளே வந்து.. அவனை அணைத்து நின்று.. அவன் தலையைப் பிடித்தாள் புவியாழினி.!

அவனால் பேச முடியவில்லை. அவள் தலையைப் பிடித்து அழுத்தி விடுவது.. அவனுக்கு சற்று.. ஆறுதல் கொடுத்தது.!
ஓரளவு.. வாந்தி வருவது குறைந்ததும்.. அவன் தலையைப் பிடித்திருருந்த.. அவள் கையை விலக்கிவிட்டான் சசி..!

அவள் விலகி நிற்க… தண்ணீர் எடுத்து வாய் கொப்பளித்தான்.
அவன் எடுத்த வாந்தி மீது அவன் தண்ணீர் ஊற்ற… அவள் பாத்ரூமில் இருந்து வெளியே போனாள்..!
வாயைக் கொப்பளித்தாலும்.. அவனது குமட்டல் ஓய்ந்தபாடில்லை..! வயிற்றில் இருந்து ஒன்றும் வராத போதும்.. ஓங்கரிப்பு இருந்துகொண்டுதான் இருந்தது.! அதனால் அவன் பாத்ரூமிலேயே நின்றுவிட்டான்.!
புவி.. அவன் கண்ணில் தட்டுபடவில்லை..!!

பாத்ரூம் கதவைச் சாத்திவிட்டு.. சிறுநீர் கழித்தான்.! சில நிமிடங்களுக்கு.. தலையைப் பிடித்து அழுத்திக் கொண்டே நின்றிருந்தான்..!!

அவன் நிலமை ஓரளவு சீரடைந்ததும்.. பாத்ரூம் கதவைத் திறந்து வெளியே போனான்.
கதவின் முன்பாக.. அவன் எடுத்த வாந்தியை தண்ணீர் ஊற்றி.. சுத்தம் செய்து கொண்டிருந்தாள் புவி..!

”ஏய்.. என்ன பண்ற..?” எனக் கேட்டான் சசி.

”ம்.. பந்திக்கு ரெடி பண்ணிட்டிருக்கேன்..!!” எனக் கிண்டலாகச் சொன்னாள் புவி.

”நீ எதுக்கு.. இதெல்லாம் பண்ணிட்டு இருக்க..?”

”உங்க பொண்டாட்டி வர்றவரை நான் பண்றேன்.. போதுமா..?” அவள் விளக்கு மாற்றால்.. கூட்டினாள்.

சசி திரும்பி அவள் வீட்டைப் பார்த்தான். கதவு மட்டும் திறந்திருந்தது. லைட் எரியவில்லை.
அவள் அம்மாவும் வெளியில் வரவில்லை. !
புவியைப் பார்த்தான்..!
அவள் சுத்தம் செய்திருந்தாள்..!!

அவன் எதுவும் பேசாமல்.. வீட்டுக்குள் போனான். அவனது வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது.
கட்டிலுக்குக் கீழே அவன் வாந்தி எடுத்த இடம் ஈரமாக இருந்தது. ஆனால் வாந்தி இல்லை.
‘இவ்வளவு சீக்கிரமாக சுத்தம் செய்து விட்டாளா..?’
வாட்சைப் பார்த்தான்.
மணி.. பணிரெண்டு இருபது..!!

தலைவலி இன்னும் அவன் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.
தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்தான்.!
அவனிடம் இன்னும் லேசான ஓங்கரிப்பு இருந்தது.. அதனால் அவன் படுக்கவில்லை..!!

உடம்பு வியர்வை மழையைக் கொட்டிக்கொண்டே இருக்க.. எழுந்து பேனை ஸ்பீடாக வைத்துவிட்டு வந்து உட்கார்ந்தான்..!!

ஈரக்கையைத் துடைத்தவாறு உள்ளே வந்தாள் புவி.
அவன் தலையில் இருந்த கையை எடுத்தான்.
அவனையே பார்த்துக்கொண்டு.. சேரில் உட்கார்ந்தாள் புவி.!

”நீ போ..” என அவளைப் பார்த்துச் சொன்னான் சசி.

”என்ன பண்ணுது..?” எனக் கேட்டாள்.

”ஒன்னும் பண்ணல..! நீ போ..!!”

”போறேன்..! பயப்படாதிங்க..!! ஒடம்பு இப்படி வேத்துருக்கு..?” என அவள் கேட்க…

அவன் வாய் மீண்டும் ஓங்கரித்தது.! ஆனால் வாந்தி வரவில்லை..!

”வாமிட் வந்தா.. பண்ணிருங்க..” என்றாள்.

”வாமிட் இல்ல… ஓங்கரிப்புதான்..!” தலையைப் பிடித்தான் ”தலைவலி..!!” அவனுக்கு உட்காருவது மிகவும் சிரமமாகவே இருந்தது.
கட்டிலில் உள்ளே தள்ளி.. சுவற்றில் சாய்ந்து.. கால்களை நீட்டி உட்கார்ந்தான்.! சற்று அதிகமாகவே மூச்சிறைத்தது.!

”தைலம் வேனுமா.?” கனிவுடன் கேட்டாள்.

”ம்..ம்ம்..!!” அவன் முனக…

சேரை விட்டு எழுந்து வெளியே போனாள் புவி..!!

சசி தலையைப் பிடித்துவிட்டுக் கொண்டான்.! நெற்றியை நீவினான்..! பொய்க்கன்னத்தைத் தேய்த்துவிட்டான்..!

உள்ளே வந்த புவி… முதலில் அவன் கையில்.. உதிரி மல்லிகைப் பூவைக் கொடுத்தாள்.

”என்ன இது..?” அவளைக் கேட்டான்.

”நல்லா ஸ்மெல் பண்ணுங்க..! வாமிட் வராது..!” என்றாள்.

”யாரு சொன்னது..?” எரிச்சலுடன் கேட்டான்.

”யாரு சொன்னா.. என்ன..? நல்லத சொன்னா கேக்கனும்..! நல்லா வாசம் புடிங்க.. குமட்டலே வராது..! தைலம் தேச்சு விடட்டுமா..?” அவள் கையில் ஜண்டுபாம் இருந்தது.

”நானே தேச்சுப்பேன்..” அவள் கொடுத்த மல்லிகைப் பூவை மூக்கருகில் கோண்டு போய் முகர்ந்தான்.

”ஏன் நான் தேச்சுவிட்டா… கொறைஞ்சு போவிங்களா என்ன..?” அவன் கால் பக்கத்தில் ஒரு காலை மடக்கி.. உட்கார்ந்தாள்.

கண்களை மூடிக்கொண்டு ஆழமாக பூவை வாசம் பிடித்தான் சசி.
மெதுவாகக் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான்.
”உங்கம்மா..?”

”தூங்கிட்டிருக்கு..” அவன் கால் மீது கை வைத்தாள்.

”ஏன்.. நீ தூங்கல..?”

” எனக்கு தூக்கமே வரல.. அப்பதான் நீங்க ‘ஓய்.. ஓய்.’ னு மாடு ஓட்டின சத்தம் கேட்டுச்சு.. என்னன்னு எட்டி பாத்துட்டு.. வந்தேன்..!” பேசிக்கொண்டே.. தைல மூடியைத் திருகி.. திறந்து உள்ளே விரல் விட்டு தைலத்தை எடுத்து.. அவன் நெற்றியை நோக்கி நீட்டினாள் ”காட்டுங்க..!”

தலையை முன்னால் கொண்டு வந்தான்.!
அவனது நெற்றியில் லேசாகத் தேய்த்துவிட்டு.. சவுகரியமாக உள்ளே தள்ளி.. அவளும் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
அவன் தலையைப் பிடித்து அவளது தோளில் சாய்த்துக் கொண்டு.. அவனது நெற்றிக்கு நன்றாகத் தைலம் பூசினாள்.
”கண்ண மூடிக்கோங்க…”

அவனுக்கு இன்னும் வின் வின்னென்று வலி இருந்தது. அவளது அண்மை இப்போது மிகவும் தேவையாகத்தான் இருந்தது அவனுக்கு..!
”அப்படியே கொஞ்சம் புடிச்சு விடு..” என்றான்.

”ரொம்ப வலிக்குதா..?” மெண்மையாக அவன் நெற்றிப் பொட்டில் அழுத்திவிட்டாள்.

”இடி.. இடிக்கற மாதிரி இருக்கு..?”

”உங்களுக்குத்தான் ஹாட் அடிச்சா சேராது இல்ல..? அப்பறம் எதுக்கு அத குடிப்பிங்க..?”

” இன்னிக்கு சரக்கு ஓவர்..” என அவள் தோளில் இருந்து.. முகம் தூக்கி.. தலையணை மீது சாய்ந்து படுத்தான்.

”நெஞ்சுக்கும் தேச்சி விடட்டுமா..?” எனக் கேட்டாள்.

”ம்..ம்ம்..!” என்றான்.

அவன் நெஞ்சுக்கும் தைலம் தேய்த்தாள் புவி.
அவனது உடம்பு சூடாக இருந்தது.

”ரொம்ப சுடுது..” என்றாள்.

”என்ன..?”

Comments

Scroll To Top