பருவத் திரு மலரே – 91

(Tamil New Sex Stories - Paruvathiru Malarae 91)

Raja 2017-08-26 Comments

This story is part of a series:

Koothi Nakki Edukkum Tamil New Sex Stories – அந்த வாரம் நைட் சிப்ட்.. காலையில் வேலை முடிந்து.. வேன் விட்டு இறங்கி.. பாக்யா வீடு போனபோது பாட்டி சமைத்துக் கொண்டிருந்தாள். தாத்தாவைக் காணவில்லை. உள்ளே போய் பேகை வைத்தாள்..!!

” எங்க கெழவி.. உன் புருஷனைக் காணம் ?” என்று பாட்டியைப் பார்த்துக் கேட்டாள். பொதுவாக அவர்களை அக்கா தம்பி இரண்டு பேருமே அப்படித்தான் அழைப்பார்கள். அதெல்லாம் அவர்களுக்கு பழகி விட்டது.

” அவனெல்லாம் போயாச்சு.. கோழி கூப்புடவே.. ” வெற்றிலை வாயுடன் சொன்னாள் பாட்டி.

” கோழி கூப்புடறப்ப போய் என்ன பண்ணும்.. ?”

” கடைல போய் டீ கீ குடிச்சிட்டு.. நாயம் பேசிட்டு.. அப்படியே வேலைக்கு போயிருவான்..”

” காலைல சாப்பாடு.. ?”

” அதெல்லாம் ஏது. ? மத்தியான சோறுதான். அதுவும் கடைல ஏதாவது கட்டிட்டு போயிருவான்..!”

” ஏன் நீ சோறாக்கி தரமாட்டியா ?”

” நான் ஆக்கற சோறு அவன் வாய்ககு ருஜியா இருக்காது தாயி..! கடைல தின்னாத்தான் ருஜிமபான்.. !”

” வரட்டும் கெழவனை என்னனு கேக்கறேன்.. !!”

பாக்யா பாட்டி ஊருக்கு வந்த பின் மெல்ல மெல்ல.. மனசு விட்டு பேசி சிரிக்க ஆரம்பித்தாள். அதில் அவள் பாட்டிக்கும் மகிழ்ச்சிதான். அவள் சோகமாக இருக்கும் போதெல்லாம் தாத்தா பாட்டி இரண்டு பேருமே அவளை நன்றாக தாங்கினார்கள். அவளுக்கு நிறைய ஆறுதலும் சொன்னார்கள். உண்மையில் அந்த நேரத்தில் தாத்தா பாட்டியை மிகவும் பிடித்துப் போனது.. !!

தாத்தா பாட்டி இரண்டு பேருமே கூலி வேலைக்கு செல்பவர்கள். ஆனால் வாழ்க்கை முறை ஒழுங்கில்லை. தாத்தா சம்பாரிக்கும் பணம் வீடு வராது. கடை சாப்பாடு.. சாராயம் என்று தனியாகப் பார்த்துக் கொள்வார். பாட்டி நிலையும் கிட்டத்தட்ட அதேதான். ஒருத்திக்கா ஏன் சமைக்கணும் என்று நினைத்து அவளும் கடையில் இட்லி தோசை வாங்கி சாப்பிடுவாள். எப்போதாவதுதான் வீட்டில் சமைப்பாள். அதுவும் கலி.. கீரை இந்த மாதிரி உணவுதான். பாக்யா அங்கு வந்த பிறகுதான்.. பாட்டி அரிசி உணவு சமைக்க ஆரம்பித்திருந்தாள்.. !!

இரண்டு அறைகளைக் கொண்ட சாதாரன ஓட்டு வீடுதான் அந்த வீடு. முன்னறை கொஞ்சம் பெரியது. உள்ளறை சின்னது. அதுதான் படுக்கையறை. ஆனால் வீட்டில் கட்டில் கிடையாது. பாய்தான். சைடில் சின்னதாக ஒரு சமையலறை. அந்த அறையில் பாத்திரங்கள் மிகவும் குறைவு. கரணட் இருந்தது டிவி இல்லை. அரசாங்கம் கொடுத்த இலவச டிவியையும் விற்று விட்டார்களாம்.. !! வீட்டின் முன்னால் பாத்ரூம். பாத்ரூமை ஒட்டி ஒரு இடிந்து சுவர். அதன் பக்கத்தில் கொய்யா மரம். வீட்டைச் சுற்றி.. ஆளுயர மதில் சுவர்.. !! அது தாத்தாவுடைய அம்மா கள்ளச் சாராயம் விற்று சம்பாதித்த பணத்தில் கட்டிய வீடு. ஆனால் இப்போது பராமரிப்பில்லாமல் கொஞ்சம் மோசமான நிலையில் இருந்தது.. !!

” போறப்ப சொல்லிட்டு போ கெழவி..” என்று சொல்லி விட்டுப் போய் உள்ளற்யில் பாய் விரித்து படுத்துக் கொண்டாள் பாக்யா. புடவைகூட மாற்றவில்லை.!!

படுத்தவளுக்கு கண்கள் சொக்கி உடனே தூக்கம் வந்து விட்டது. தூக்கத்தினிடையில் கிழவி அவளை எழுப்பினாள்.
” நான் போறேன். சோறு ஆக்கி வெச்சுட்டேன். தின்னுட்டு கதவை சாத்திட்டு படுத்துக்கோ..”

” ம்ம் சரி கெழவி.. நீ போ ” என்று கண்களைத் திறக்காமலே சொல்லி விட்டு.. புரண்டு படுத்து தூங்கி விட்டாள்.

அதன் பிறகும் தூக்கத்தில் அவளை யாரோ எழுப்பியதைப் போலிருந்தது. ஆனால் அவளால் கண்களை திறக்க முடியவில்லை. தன்னை மீறி தூங்கினாள். மீண்டும் அவளுக்கு தூக்கம் கலைந்து நினைவு வந்த போது பனிரெண்டு மணியைத் தாண்டி இருந்தது. வயிறு பசிப்பதை போலிருந்தது. சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்ளலாம் என்று எழுந்து.. அவிழ்ந்து விட்டிருந்த புடவையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு வெளியே போனவள்.. திகைத்து நின்றாள். ராசு முன்னறையில் உட்கார்ந்து அமைதியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்து விட்டு நிமிர்ந்தான்..!

” டேய்.. நாயீ.. ! நீ எப்படா வந்தே.. ?” என்று முகத்திலும் குரலிலும் மகிழ்ச்சி பொங்கக் கேட்டாள்.

” நான் வந்து ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆச்சு.! உன்னை எழுப்பி பாத்தேன் நீ எந்திரிக்கவே இல்ல..” என்று புன்னகைத்தான்.

” ஆமாடா.. என்னை தூக்கத்துல யாரோ எழுப்பின மாதிரிதான் இருந்துச்சு.. ! அது நீதானா.. ?”

” ம்ம் ”

” நீன்னு தெரிஞ்சிருந்தா எப்படியாவது எந்திரிச்சிருப்பேன். சரி இரு..”

பாக்யா பாத்ரூம் போய் முகம் கழுவி முந்தானையால் துடைத்தபடி வந்தாள். அவள் தலைமுடி கண்ணாபின்னாவென கலைந்திருந்தது. கலைந்த முடியை கொண்டை போட்டுக் கொண்டாள். அவள் ஜாக்கெட் இளகி.. அவளது ப்ரா பட்டை கழுத்தோரம் வந்திருந்தது. அதை உள்ளே தள்ளி விட்டாள். முந்தானையை இழுத்து விட்டபடி அவன் பக்கத்தில் போய்.. அவனை இடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
” சாப்படறியா பையா ?”

” சாப்பிட்டுதான் வந்தேன். நீ என்ன பண்ணே. ?”

” ஒண்ணுமே சாப்பிடல. நான் வந்தப்பதான் கெழவி ஆக்கிட்டிருந்தா.. சாப்பிடாமயே படுத்துட்டேன். இப்ப பசிக்குது.!”

” சாப்பிடு போ. ”

” ம்ம்..!” அவன் தோளைப் பற்றி எழுந்து.. மெதுவாக நடந்து போய் உணவைப் போட்டு எடுத்து வாந்தாள். மீண்டும் அவனுக்கு இடது பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்து சாப்பிட்டாள்.

அவள் இடுப்பில் கை போட்டு அவளை இறுக்கி அணைத்தபடி.. அவள் கழுத்தில் முகம் வைத்து முத்தமிட்டான். பாக்யா நெளிந்தாள். ஆனால் அவன் முத்தம் பிடித்தது. அவள் இடுப்பை தடவியபடி மெல்லக் கேட்டான் ராசு.
” ஏன் இந்த தனிமை வாசம்.. ?”

” அங்க இருக்க புடிக்கலடா. யாரு பாத்தாலும் இதைவேதான் கேக்கறாங்க. எனக்கு புத்தி சொல்றேனு தேவை இல்லாம பேசி கொல்றாங்க.. என்னை பாக்க பாக்க அப்பா அம்மாக்கும் கஷ்டமா இருக்கும்.. அதான் அந்த ஊரே வேண்டாம்னு வந்துட்டேன்..”

” இங்க பரவால்லியா.. ?”

” நெஜமா சொல்றேன் பையா.. இந்த கெழவனும் கெழவியும் என்னை எப்படி தாங்கறாங்க தெரியுமா.. ? எங்கப்பனம்மா கூட என்னை அப்படி தாங்க மாட்டாங்க..! எனக்கு இங்கல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல..!ப்ச்.. என்ன மனசுலதான் நிம்மதி இல்ல.. !” என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்.

சில நொடிகள் அவளையே பார்த்தான். அந்த பார்வை அவளுக்கு வெட்கத்தைக் கொடுத்தது.

” ஏன்டா.. அப்படி பாக்ற.. ?” என்று மெல்லச் சிரித்தபடி கேட்டாள்.

” சாப்பிடு ” புன்னகைத்தான்.

” சாப்பிடறேன்.. நீ சொல்லு..?”

” அப்பறம் சொல்றேன். மொதல்ல நீ சாப்பிடு..”

” ஏ.. சொல்லுடா..?”

” நீ இப்படி அவசரப் படுவேனு நான் எதிர் பாக்கல. இன்னும் கொஞ்ச நாள் சமாளிப்பேனு நெனைச்சேன். !” என்றான்.

” என்னை என்னடா பண்ண சொல்றே.. ? நான் பண்ணது தப்பாவே இருக்கட்டும்.. ஆனா எனக்கு அதை தவிற வேற வழியே இல்ல. ? இனி அவன் எனக்கு வேண்டாம்னு முடிவே பண்ணித்தான்.. தாலியை கழட்டி வீசினேன்..!” சொல்லும் போதே அவளுக்கு குரல் அடைத்து கண்கள் கலங்கியது. முடிந்தவரை கண்ணீரை வெளியே விடாமல் தடுத்தாள்.

” சரி.. சரி அழாத.. ! சாப்பிடு.. ! அப்பறம் பேசிக்கலாம்.. !!” அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

கண்களை துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவளை அணைத்து அவளது காதோரம் முத்தமிட்டுச் சொன்னான்.
” பீல் பண்ணாத விடு.”

அவள் அமைதியாகச் சாப்பிட்டாள். அவள் சேலையை ஒதுக்கி வயிறறில் கை வைத்து தடவியபடி கேட்டான்.
” எப்படி இருக்கா உன் பிரெண்டு..?”

” இருக்கா.. அவளை பத்தி சொல்லவும் நெறைய இருக்கு ”

” சொல்லு.. ?”

” இனி அவ உனக்கு கெடைக்க மாட்டானு நெனைக்கறேன்..”

” ஏய்.. எனக்கு அவ முக்கியம் இல்லைடி. நீதான் முக்கியம்..”

” ஏண்டா.. அவளை புடிக்கலையா உனக்கு ?”

Comments

Scroll To Top