பருவத் திரு மலரே – 66

(Tamil Kamaveri - Paruvathiru Malarae 66)

Raja 2017-07-14 Comments

This story is part of a series:

Koothi Paruppu Nakkum Tamil Kamaveri – காலையிலேயே பாக்யாவைப் பார்க்க வந்திருந்தாள் சாந்தினி. தலைக்கு குளித்து லூஸ் ஹேர் விட்டுப் பிண்ணியிருந்தாள். புடவை கட்டாமல் சுடிதார் போட்டிருந்தாள்.. !!

” என்னது.. காலைலயே.. கலக்கற மாதிரி இருக்கு. ?” பாக்யா லேசான வியப்புடன் கேட்டாள்.

” ஆமா.. ” என்று சிரித்தாள் சாந்தி.

”என்ன விஷேசம்.. ?”

” எனக்கு இன்னிக்கு பர்ஸ்ட் நைட்டு.. ” என்று சிரித்தாள்.

” அட.. ச்சீ.. ” பாக்யாவும் சிரித்தாள்.” ம்ம்.. அப்பறம்.. ??”

” ஏன்டி..எனக்குலாம் பர்ஸ்ட் நைட் நடக்க கூடாதா.. ??”

” ஓ.. ! தாராளமா..!” என்று சிரித்துவிட்டுச் சொன்னாள் ”ஆனா நீதான் இன்னும் ஏஜ் அட்டன் பண்ணவே இல்லையே.. ? அப்பறம் எப்படி பர்ஸ் ட் நைட் கொணடாடுவ.. ?”

” அதெல்லாம் கொண்டாடிக்குவோம்.. ! நீ கொண்டாடினியா.. நைட்டு.. ?”

” அதெல்லாம் நாலஞ்சு நாளு ஆகிப் போச்சு..”

” சரி.. நான் வேலைக்கு கேக்க போலாம்னு இருக்கேன். வரியா..??”

” எங்க போறே.. ?”

அருகில் இருக்கும் ஒரு கம்பெனியில் ஆள் எடுப்பதாகச் சொன்னாள். ஊர்வரை கம்பெனி வேன் வருகிறது என்றாள். பாக்யாவையும் அழைத்தாள். ஆனால் தன் கணவனிடம் கேட்காமல் வேலைக்கு வர முடியாது என்று விட்டாள் பாக்யா..!!

” நீ வந்தா நல்லாருக்குன்டி. உன் புருஷன் கிட்ட பேசி எப்படியாவது வரப் பாரு.. ” என்றாள் சாந்தி.

” என் புருஷன் மட்டும் எனக்கு எதிரி இல்ல.. எங்கப்பனும்தான். என் புருஷன் கூட காசு வரும்னு சரின்றுவான்.. ஆனா எங்கப்பன் விடறதுதான் கஷ்டம்.. !!”

” சரி மொதல்ல நான் போறேன். அப்பறம் நீயும் வந்துரு ” என்று விட்டுப் போனாள்.

அதேபோல சாந்தி வேலைக்கும் சேர்ந்து விட்டாள். அதனால் அவர்கள் சந்தித்துக் கொள்வது விடுமுறை நாளில் மட்டும்தான் எனறானது. மற்ற நேரம் எல்லாம்.. வழக்கம் போல.. முத்து.. சுமதிதான். !!

அன்று விடுமுறை. பாக்யாவைப் பார்க்க.. அவள் வீட்டுக்குச் சென்றாள் சாந்தினி. பரத் மட்டும்தான் வீட்டில் இருந்தான்.

” பாக்யா இல்லையா பரத்.. ?”

ஒரு போனை வைத்து நோண்டிக் கொண்டிருந்தவன் சாந்தினியைப் பார்த்ததும் சட்டென எழுந்து உட்கார்ந்தான்.
” துணி தொவைக்க.. கொளத்துக்கு போயிருக்கா..”

” எப்ப போனா. ??”

” அவ போயி.. ரொம்ப நேரம் ஆச்சு.”

” முத்துவும் போயிருக்காளா. ?”

” ஆமா.. ! முத்து.. அவங்கம்மா எல்லாரும் போயிருக்காங்க..”

” பாக்கலாம்னு வந்தேன்..”

” வந்துருவானு நெனைக்கறேன்..”

” இதுக்கிதுக்கு நடந்து வந்ததுக்கே தாகமா இருக்கு..” என்றாள்.

” தண்ணி தரேன்.. உள்ள வாங்க..”

சாந்தினி உள்ளே போனாள். பரத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தான். அவள் அன்னாந்து குடிக்கும்போது அவள் மார்பைப் பார்த்தான்.

” அப்பறம் வேலை எல்லாம் எப்படி இருக்கு.. ?” அவள் தண்ணீர் குடித்த பின் கேட்டான் பரத்.

” ஜாலிதான் ” சிரித்தாள் சாந்தி ”பாக்யாவையும் வேலைக்கு அனப்பலாமில்ல.. பரத்.. ?”

” உங்க கூடவா.. ?”

” ஏன்.. என்கூட அனுப்பினா என்ன.. ?”

” சே..சே.. ” உடனே சிரித்தான் ”அனுப்பறது பிரச்சினை இல்ல.”

” அப்பறம் வேற என்ன பிரச்சினை.. ?” அவள் மார்பில் இருந்த துப்பட்டா மெதுவாக சரிய.. ஒரு முனையை பிடித்து சுழற்றினாள். அவள் முகத்தில் லேசான வியர்வை அரும்புகள். அவளது திரண்ட மார்பகம் அவன் கவனத்தைக் கலைத்தது. அவளை குறுகுறுவெனப் பார்த்தான்.

மறுபடி கேட்டாள் சாந்தி.
” வேற என்ன பிரச்சினை பரத்.. ?”

” அது ஒத்து வராது..”

” ஏன். ?”

” அவ இருக்கட்டுங்க..! ஆமா நீங்க ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கலாமில்ல. ?”

” ஏன்.. ?” அவனைப் பார்த்தாள்.

” இல்ல.. இன்னும் சின்ன வயசுதான…?”

” ஒன்னே போதும்பா.. இந்த ஜென்மத்துக்கு..” சிரித்தாள்.

” பீலிங்.. இருக்குமில்ல.. ?”

” என்ன பீலிங்.. ?”

” எல்லாம்தான்.. ” அவன் ஒரு மாதிரி கோணலாக முகத்தை வைத்துக் கொண்டு இளித்தான்.

சாந்தி மெல்லப் புன்னகைத்தாள்.
” அதெல்லாம் பீல் பண்ற அளவுக்கு ஒண்ணும் இல்ல..”

” அப்போ.. இத்தனை அழகும் வேஸ்ட்டா.. ?”

அவன் பேச்சு திசை மாறுவது அவளுக்குப் புரிந்தது. அதற்கு மேலும் அவள்.. அவனுடன் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை.
‘ என்னையும் காளீஸ் மாதிரி நினைச்சுட்டானோ ? செரியான பொறுக்கியாதான் இருப்பான் போல.. ?’

” சரி.. பரத் நான் போறேன். பாக்யா வந்தான்னா நான் வந்துட்டு போனேனு சொல்லு..” என்று விட்டு வெளியே வந்து விட்டாள்.. !!

பாக்யா துணிகளை துவைத்துக் கொண்டு வீட்டுக்குப் போன போது வீட்டில் பரத் இல்லை. அவளுக்கு வீடு போனதுமே பசி எடுத்தது. துணிகளைக் காயப் போட்டுவிட்டு.. சாந்தி வீட்டுக்கு போகலாம் என்கிற எண்ணத்தில் புடவை கட்டிக் கொண்டு சாப்பி உட்கார்ந்தாள். அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ராசு வந்தான்.! வெளியே நின்று.. உள்ளிருந்தவளை குனிந்து பார்த்தான்..!!

” என்ன மேடம்.. இப்பதான் சாப்பிடற மாதிரி இருக்கு.?”

” ஆமா சார். வாங்க சார் சாப்பிடலாம்.. ?”

” நல்லா சாப்பிடுங்க மேடம்..” என்று விட்டு அவள் அம்மா வீட்டுக்குப் போய் விட்டான்.

அவள் கையில் சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு ஓடினாள். அவளது அம்மாவும் ராசுவும் பேச ஆரம்பித்திருந்தார்கள்.

” எப்படி இருக்க…?” ராசு பாக்யாவைக் கேட்டான்.

சிரித்தாள் ” அப்படியேதான் இருக்கேன்..”

அவளது அம்மா பாயை விரித்து விட்டாள். ராசு பாயில் உட்கார்ந்தான். பாக்யா அவன் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்தாள். அம்மா காபி வைத்தாள். பாக்யாவும் சாப்பிட்டு விட்டு எழுந்து போய் தட்டைக் கழுவி வைத்து விட்டு வந்து மீண்டும் அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்..!!

ஒரு மணி நேரத்துக்கு மேல் ராசுவுடன் பேசிக் கொண்டிருந்தாள். சாந்தி வீட்டுக்கு நேரம் கிடைத்தால் போகலாம் என நினைத்தாள்..! மத்தியானம் ஆனபோது பரத் வீட்டுக்கு வந்தான்.! பாக்யா எழுந்து போனாள். !

” எங்க போன..?” என்று கேட்டாள்.

பரத் பேசவில்லை. ஏனோ அவன் முகம் உர்ரென்றிருந்தது.

” சாப்பிடறியா.?” அவனை இடித்துக் கொண்டு கேட்டாள்.

அவளைத் தள்ளி விட்டான். பாக்யா சிரித்தபடியே சொன்னாள்.
” ராசு வந்துருக்கான்..”

அவளை முறைத்தான்.

” ஏ.. இப்ப எதுக்கு மொறைக்கிறே..??” என்று கேட்டாள்.

அவன் விசுக்கென கீழே உட்கார்ந்தான். அவன் பக்கத்தில் மெதுவாக உட்கார்ந்தாள்.
”எங்க பாட்டிக்கு மறுபடி இன்னொரு கை வரதில்லையாம்… பாக்க போலாமா.. ?”

” அட ச்சீ.. சும்மா தொனதொனக்காத.. கொஞ்சம் வாய மூடு..” என்று எரிந்து விழுந்தான்.

அவளது மனசு கோணியது.
” ஏ.. இப்ப எதுக்கு இப்படி நாய் மாதிரி கத்தற.. ?”

‘பளீ ‘ ரென ஒரு அறை விட்டான்.
” வாயை மூடுறி.. முண்டை..” சத்தமாகக் கத்தினான். நிச்சயம் அது அவள் அம்மா வீட்டுக்கு கேட்டிருக்கும்.

” நாயே.. நான் முண்டையா..?” என அவள் எதிர்த்து கத்த.. அவன் மீண்டும் ஒரு அறை விட.. அது சண்டையாகிப் போனது. அடி வாங்கிய பாக்யா அழுதாள். சத்தம் கேட்டு ராசு வந்தான். உடனே பரத் வீட்டை விட்டு வெளியே போய் விட்டான்.!!

” ஏய்.. என்னாச்சுனு இப்ப சண்டை.. ?” ராசு கேட்டான்.

அழுது கொண்டிருந்தவள் கண்ணைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாள்.
”அவகூட என்ன சண்டையோ.. நாசமா போனவன் இங்க வந்து என்னை ஏர்றான்.. ”

” ஏய்.. என்ன வார்த்தை இது..?”

அவள் அழுகையை அடக்கினாள்.

” அடிச்சிட்டானா ?”

” ம்ம்…”

” நீதான் வாயடங்கி போறது..?”

” ஆமா அவன் அடிச்சா தப்பில்ல.. நான் மட்டும் பேசினா தப்பு.. ” என்று மூக்கை உறிஞ்சினாள்.

” சரி.. சரி.. வா..! அவன் வந்து அஞ்சு நிமிசம்கூட ஆகல.. அதுக்குள்ள சண்டை.. ” என்று அவள் கையைப் பிடித்து தூக்கி விட்டான்.

Comments

Scroll To Top