இதயப் பூவும் இளமை வண்டும் – 120

(Tamil Kamakathaikal - Idhayapoovum Ilamaivandum 119)

Raja 2015-11-05 Comments

This story is part of a series:

” ஏன்.. அத தெரிஞ்சு.. நீ என்ன பண்ணப்போறே..?”

”கேட்டா ஏன்டா.. இப்படி பாயற..? இப்ப நான் என்ன கேட்டுட்டேன் அப்படி..? அவள பத்தி.. தெரிஞ்சுக்கலாம்னுதான்.. சாதாரணமா கேட்டேன்..!” என அவள் அப்பாவியாகப் பேசினாள்.

சசி எரிச்சலை அடக்கிக் கொண்டு அவளைக் கேட்டான்.
”உன்ன நான் ஒன்னு கேக்கட்டுமா..?”

”கேளுடா.. என்ன..?”

”நீ லவ் பண்ணியிருக்கியா..?”

”என்ன..?” என திகைப்புடன் கேட்டாள்.

”லவ்..? லவ் பண்ணியிருக்கியானு கேட்டேன்..”

”டேய்.. நான் உன்.. அக்காடா..?”

”ஓ…! அப்படியா..? இவ்ளோ நாள்.. எனக்கு இது தெரியாம போச்சே..! ஏம்மா.. இவதான் எனக்கு அக்காளா..?” என அவன் அம்மாவைப் பார்த்துப் புன்னகையுடன் கேட்டான் சசி..!

அம்மா சிரிக்க…

”ரொம்பத்தான் ஏத்தம்டா.. உனக்கு..” என்றாள் குமுதா.

”ஸோ.. இப்படி வாயானு ஒன்னு இருக்குனு.. வெட்டி நாயம்.. ஊர் வம்புனு எல்லாம் பேச ஆரம்பிச்சா.. கடைசில இப்படிதான் வந்து சேரும்..! புரியுதா..? வாய மூடிட்டு போயி.. ஆகற வேலை என்னமோ.. அதை பாரு..!!” என்றான்.

”ம்.. நா என்ன கேட்டேன்.. நீ எங்க கொண்டு வந்து முடிக்கற..?” என்றாள்.

சசி சாப்பிட்டு.. தோட்டம் கிளம்பினான்.
அவன் அம்மா.. குழந்தை.. குமுதாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப…
அவன் பின்னாலேயே வந்த குமுதா கதவருகே நின்று சொன்னாள்.
”மத்யாணம் சாப்பிட வந்தர்றா..”

”ம்..ம்ம்..! வரேன்..!!” என அவன் நடக்க…

”ஒரு நிமிசம் நில்லுடா..” என்றாள் குமுதா.

மாடிப்படியருகே போய் நின்று அவளைப் பார்த்தான்.
”என்ன..?”

அவளே வெளியே வந்தாள். அவன் பக்கத்தில் வந்து கேட்டாள்.
”ஆமா.. நா லவ் பண்ணியிருக்கனானு.. எதுக்குடா கேட்ட..?” என முகம் நிறையக் குழப்பத்துடன் அவனைக் கேட்டாள்.

குழம்பிய அவள் முகம் பார்த்த சசி..
”ஹ்ஹாஹாஹா..” என வாய்விட்டுச் சிரித்தான்.

”இப்ப ஏன்டா.. இப்படி சிரிக்கற..?”

”ஏய்.. லூசு..! நா என்ன கேட்டேன்.. நீ என்ன புரிஞ்சுட்ட..?”

”ஏன்டா..? சரி.. சொல்லு..! ஏன் நீ.. அப்படி கேட்ட..?”

இடது கையால் அவள் மண்டையில் தட்டினான் சசி.
”ஏய்… லூசு பக்கி..! சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்..! நீ பாக்கற.. சீரியல்.. டயலாக் மாதிரி.. அதுவும் ஒரு வெட்டி டயலாக்தான்.! அதுக்கு நீ ஏன்.. இவ்ளோ.. குழம்பி தவிக்கற..?”

”குழம்பல…!” என்றாள்.

”சரி.. இப்ப நெஜமாவே.. கேக்கறேன்..! நீ லவ் பண்ணியிருக்கியா.. இல்லையா..?” என ரகசியம் கேட்பது போலக் கேட்டான்.

”நான் உன் அக்காடா..” என மீண்டும் அதே பல்லவியைப் பாடினாள்.

”ஏய்.. அக்கான்னா..? நீயும் ஒரு பொண்ணுதான..? உன்னையும் எவனாவது ஒரு ஹீரோ.. சுத்தி சுத்தி வந்து டூயட் பாடியிருப்பான் இல்ல..?” என்க.. வெட்கப்பட்டுச் சிரித்தாள் குமுதா..!

”ஓ.. ஏதோ ஒன்னு இருக்கு.. போலிருக்கு..?” என அவன் கேட்க…

”போடா.. பேசாம..! மத்யாணம் சாப்பிட வா..! எனக்கு வேலை இருக்கு..! இன்னும் பாத்திரமெல்லாம்.. கழுவாம.. அப்படி அப்படியே கெடக்கு..!!” என திரும்பிப் போனாள்.

”ஓ.. அப்படியா..! இரு.. இரு.. வந்து பாத்துக்கறேன்..!” எனச சிரித்துக் கொண்டே கிளம்பினான் சசி……!!!!!!

-வளரும்…..!!!!!!!

-அன்பு நண்பர்கள் அனைவருக்கும்… என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!! Very Hot Tamil Kamakathaikal

-உங்கள்… முகிலன்……!!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top