நீ – 84

(nee)

Raja 2014-11-13 Comments

boobs kathai நான் காரை ஓட்டியவாறே.. கண்ணாடியில் தீபாவைப் பார்த்துக் கேட்டேன்.
”உன்ன.. எதுக்கு நான் அடிக்கனும்.. கருப்பு..?”

” உங்க கோபம் கொறையுமில்ல..?” என்று சிரித்தாள்.

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

”ஏய்.. என் கோபம் உன்மேல.. இல்ல..”

”பாவங்க.. அவ..! அவள அப்படி எதுவும் அடிச்சிராதிங்க..”

” ம்.. ம்ம்..!!”

உன் குடிசை வீட்டின் முன் காரை நிறுத்த.. அவசரமாக..கார்க்கதவைத் திறந்து கொண்டு இறங்கி வந்து உன்னைக் கூப்பிட்டாள்.
”செங்கா… ஏய் செங்கா…”

நீ வெளியே வந்தாய். காரைப் பார்த்ததும் உன் கண்கள் விரிந்தன. காரை விட்டு இறங்கிய என்னைப் பார்த்து.. முகம் பிரகாசிக்க…
” வாங்க…” என்றாய்.

தீபாவும் ”உள்ள வாங்க..” என அழைத்தாள்.

குடிசைவாசிகளில் சிலர் வேடிக்கை பார்க்க. . நான் உள்ளே நுழைந்தேன்.
நீ என் முன்பாக வந்து நின்று..
”என்னங்க.. திடிர்னு.. நீங்க…?” என்று என் முகத்தைப பார்த்தாய்.

அதுவரை உள்ளிருந்த.. என் ஆத்திரம் சட்டென தலைதூக்கியது..!
‘பட் ‘டென உன் கன்னத்தில் ஒரு அறை விட்டேன்.

”ஐயோ..” என்று பாய்ந்து வந்து என் கையைப் பிடித்தாள் தீபா ”பாவங்க… அவ..?”

நீ.. அப்பாவி போல.. சிரித்தவாறு என்னைப் பார்த்தாய். தீபாவிடம்..
” பரவால்ல விடுடி..!! இவங்கதான.. அடிக்கறாங்க..” என்றாய்.

நான் என் கோபத்தைத் தணித்துக்கொண்டு…உன் தோளில் கை வைத்து…
”ஏன்டி எப்படி பண்ணின..?’ என்றேன்.

”எ… எப்படிங்க..?” என நீ கேட்க..

தீபா ”நான் சொல்லிட்டன்டி..” என்றாள்.

நான் ”சரி.. வா..! நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..!” என்றேன்.

தீபா என்னிடம் ”அடிக்காதிங்க..” என்றாள்.

” இல்ல.. இனி அவ்வளவுதான்..! நீ பயப்படாத..! இவ கிட்ட கொஞ்சம் பேசனும்..!” என்க..

நீ ”போலாங்க…” என்றாய்..!!

நான் வெளியேறி காரைக்கிளப்ப.. நீ கதவைப் பூட்டிவிட்டு வந்து காரில் ஏறிக்கொண்டு. .
” போலாங்க..” என்றாய்.

தீபா வரவில்லை. நான் காரை நகர்த்தினேன்.

புளியமரத்தை அடையும்வரை நானும் பேசவில்லை. நீயும் பேசவில்லை. !
காரை நிறுத்தி இறங்கி…
”கீழ போலாமா..?”என்றேன்.

” போலாங்க..!!” என தையாட்டினாய்.

சரிவுப்பாதையில் இறங்கி… ஆற்றங்கரையை அடைந்தோம்.!!

பில்லூர் அணையிலிருந்து.. நீர் திறந்து விடப்பட்டிருந்தது..! ஆறு நிறையத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது..! குளிர்ச்சியான காற்று உடம்பை வருடிப்போனது.! கரையில் உட்கார்ந்து கொண்டு.. உன்னை என் பக்கத்தில் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டு கேட்டேன்.
”எப்பருந்துடி… இப்படி..?”

என்னைப் பார்த்தாய் ”என்னங்க..?”

” ஏன்.. நீ.. நிலாவ பாக்க வல்ல..?”

நீ என்னைப் பார்க்காமல் ஆற்றைப் பார்த்துக்கொண்டு..
”என்னை மன்னிச்சிருங்க..” என்றாய்.

”ஏன்..?”

நீ பதில் சொல்லவில்லை.

”என்னடி.. இப்ப நீ.. சொல்லப் போறியா.. இல்லையா..?” என அதட்டலாகக் கேட்டேன்.

நீ கால்களைக் கட்டிக்கொண்டு என்னைச் சற்று.. மிரட்சியோடு பார்த்தாய். உன் கண்கள் கலங்கியிருந்தது..!

நான் விடுவதாக இல்லை. ”நீ.. அழறதால.. ஏன் கோபம் ஆறிடாது..! இப்ப நீ சொல்லித்தான் ஆகனும்..! சொல்லு..!” என்றேன்.

”அக்காவ பாக்க.. எனக்கும் ஆசைதாங்க..!!” என பிசிறிய குரலில் சொன்னாய்.

”அப்பறம் எனன வந்துச்சு உனக்கு..? வரவேண்டியதுதான..? உன்ன அவ.. என்ன சக்களத்தி மாதிரியா நடத்தினா..? ம்..? சொந்த தங்கச்சி மாதிரிதான நெனச்சா..? அந்த ஒரு இதுகூடவாடி.. இல்ல..?”

”ஐயோ கடவளே…! என்னை மன்னிச்சிருங்க..! உங்ககிட்ட நான் சொல்லாம விட்டது.. என் தப்புதான்..!!”.என லேசான அழுகையுடன் சொன்னாய்.

”இத.. ஏன் நீ.. என்கிட்ட மொதவே சொல்லல..?”

”சொல்லககூடாதுனெல்லாம் நான் நெனைக்கலீங்க..! ஆனாக்கா… அத சொன்னா… உங்களுக்குள்ள… சங்கட்டம் வருங்களே..? அதானாலதாங்க..!!”

”ஆ.. ! இவ பெரிய இவ..?” என மேலும் திட்டினேன்

நீ மூக்கை உறிஞ்சினாய் ”அக்காவ பாக்காம.. என்னால மட்டும் எப்படிங்க.. நிம்மதியா இருக்க முடியும்..?”

உன் தோளில் கை போட்டு.. உன்னை அணைத்தேன்.
”சரி.. என்ன நடந்துச்சுன்னு முழுசா சொல்லு..! எதையும் மறைக்காத..!!”

தயங்கிவிட்டு யோசித்துச் சொன்னாய்.
”அன்னிக்கு நான்.. பஸ் ஸ்டாண்ட்ல.. பஸ்க்கு நிக்கறப்ப வந்தாருங்க. தனியாத்தான் வந்தாரு..! இனிமே நான் உங்கள பாக்கறது.. பேசறது எல்லாத்தையும் விட்றனும்னு சொன்னாருங்க..”

” மரியாதையாவா பேசினான்..?”

”இல்லீங்க..! எனனை மெரட்னாரு..! மரியாதையா ஒதுங்கி போயிரு..! இலலேன்னா.. உன்னை கார விட்டு ஏத்தி கொன்றுவேன்னாருங்க…!!”

”ஓ..! அப்றம்…?”

” அன்னிக்கெல்லாம் எனக்கு சோறு தண்ணி எறங்கலீங்க..! நான் உங்கள பிரிஞ்சு இருந்துருவங்க..! ஆனா.. இத நான் உங்ககிட்ட சொன்னா… அது.. வீண் பிரச்சினைனுதாங்க.. சொல்லல..”

” ம்… அப்றம்..?”

”இதாங்க சொன்னாரு..! ஒரு வகைல அவரு சொன்னதும் சரிதானுங்களே..?” என்றாய்.

”எது.. அவன் உன்ன வெச்சுக்கறேன்னு சொன்னதா.? இல்ல மொத்தமா…எல்லா பசங்களுக்கும் சேத்து பணம் தர்றேனு சொன்னதா..?” என்று சூடாக கேட்டேன்.

திக்கென அதிர்ந்து என்னைப் பார்த்தாய். பேச உனக்கு வார்த்தை வரவில்லை.
”எத்தனை நாளாடி.. இந்த புத்தி..?” என நான் கேட்க

சடாரென என் காலைப் பிடித்தாய்.
”என்னை மன்னிச்சிருங்க..! உங்ககிட்ட நான் மறச்சது தப்புதாங்க.. ஆனா அந்த மாதிரி ஒரு எண்ணம் சத்தியமா.. என் மனசுல இப்ப இல்லீங்க..! அப்படி ஒரு இது வந்தா… அடுத்த நிமிசமே நான் செத்துருவங்க…” என்று அழுதபடி சொன்னாய்.

”அப்ப ஏன்.. சொல்லாம மறைச்ச…?”

”என்னால வம்பு வேண்டாம்னுதாங்க..”

” அப்ப நீ… மறுபடி தொழில்ல எறங்கிருவியா..?”

”ஐயோ..! சத்தியமா சொல்றங்க.. இனிமே… இந்த ஒடம்ப.. உங்கள தவற.. இன்னொரு ஆம்பளை தொட்டுட்டா… அப்பவே என்னோட ஒடம்ப தீ வெச்சே கருக்கிருவங்க..! இனி இந்த ஜென்மத்துல… இந்த ஒடம்பு உங்களுக்கு மட்டும்தாங்க..!!” என்று இதுவரை இல்லாத.. ஒரு உறுதித்தண்மையான குரலில் சொன்னாய்.

உன் பேச்சு.. என்னையே ஒரு நொடி ஆடிப்போக வைத்தது..!
என் நெஞ்சம் பூரிப்பில் விம்ம.. உன்னை இருக்கி அணைத்து உன் நெற்றியில்… என் உதட்டை அழுத்தினேன்..!
”கேள்விப்பட்டதும்.. நான் எப்படி கொதிச்சுப்போயிட்டேன் தெரியுமா..? உன்மேல நான் எத்தனை நம்பிக்கை வெச்சிருக்கேன்.. ஆனா நீ.. என்கிட்டகூட சொல்லாம மறைச்சிருக்க…?”

”மன்னிச்சிருங்க… மன்னிச்சிருங்க..” என கண்ணீர் விட்டாய்.

”இதுவே.. தீபா வந்து சொன்னா..! அவளும் வந்து சொல்லலேன்னா.. இது எனக்கு தெரியப்போறதே இல்ல..! நீயா வந்து என்கிட்ட சொல்லப் போறதும் இல்ல… அப்படித்தான..?”

” உங்க ஆத்திரம் தீர்றவரை.. என்னை அடிங்க..!! நான் வாங்கிக்கறேன்..!!” என்றாய்.

”சீ.. உன்னை அடிக்கறது என் ஆசை இல்லைடி..!!” என உன் உதடுகளைக் கவ்வினேன்.

நீ என் மடியில் சரிந்தாய்..!! உன் மார்பைத் தொட்டுக்கொண்டு சொன்னேன்.
” இனிமே.. உனக்கு.. என்ன நடந்தாலும்.. அதை நீ மறைக்காம என்கிட்ட சொல்லனும்..! அப்படி மறைக்கிறேன்னா… நீ என்னை விட்டு விலகறேனு அர்த்தம்..!!”

”ஐயோ.. இந்த ஒரு வாட்டி என்னை மன்னிச்சிருங்க..! இனிமே.. சத்தியமா இப்படி மறைக்க மாட்டங்க..!!”

”மத்தத நான் பாத்துக்கறேன்..! நீ கவலைப்படாம… இரு..!!” என்றேன்..!!

ஆனாலும் நீ கவலையோடு சொன்னாய்.
”சண்டைவராம…பாத்துக்குங்க..!!”

– சொல்லுவேன்…….!!!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top