இதயப் பூவும் இளமை வண்டும் – 77

(IDHAYAPOOVUM ILAMAIVANDUM 77)

Raja 2015-05-01 Comments

This story is part of a series:

sex tamil kamakathai அவர்களின் சொந்த ஊருக்கே போய்விடுவது எனத் தீர்மானமாக இருந்தாள் அண்ணாச்சியம்மா..!
தன் கணவனிடம் என்ன பேசினாளோ எப்படிப் பேசினாளோ தெரியவில்லை. அவரும் ஒப்புக்கொண்டு.. கடை வீடு எல்லாம் காலி செய்வதற்கான காரியங்களில் இறங்கிவிட்டார்.

Story : Mukilan

அதில் மிகவும் இடிந்து போனான் சசி.
அவன் உணவை மறந்தான்.. உறக்கம் தொலைத்தான். அவனது தவறால் ஒரு குடும்பம் ஊரைவிட்டுப் போவதை அவனால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

தனியாக இருந்த போது அண்ணாச்சியம்மாவிடம் கேட்டான் சசி.
”நீங்க கன்டிப்பா போய்த்தான் ஆகனுமா..?”

”ஆமாடா.. இந்த விசயம் ஊருபூரா தெரிஞ்சு.. எங்க மானம்.. மரியாதை எல்லாம் போனதுக்கப்றம்.. பேரு கெட்டு ஊரவிட்டு போறதவிட.. அதுக்கு மொதவே கவுரவமா போயிடறது நல்லது ” என குரல் தழதழக்கச் சொன்னாள் அண்ணாச்சியம்மா ”உன்மேல எனக்கு எந்த கோபமும் இல்ல. இனிமேலும் கேனத்தனமா இருக்காத.. கொஞ்சம் கவனமா இரு.. நண்பன்னு சொல்லிட்டு கண்ட கண்ட தேவடியாப் பசங்ககூடல்லாம் பழகாத..அப்படியே பழகினாலும் இப்படி பர்ஸ்னல் எல்லாம் சொல்றளவுக்கு நம்பிக்கையானவனானு பாத்து பழகு.. எந்த ஒரு மனுஷனும் சந்தர்ப்பம் சூழ்நிலை அமையறவரை நலலலவன்தான்.. பின்னால யாரையும் குறைசொல்லி பிரயோஜனம் இல்ல. நாமதான் பாத்து நடந்துக்கனும்..!”

அவள் சொல்லச் சொல்ல.. சசியின் கண்களில் நீர் கோர்த்தது. உதட்டை அழுந்தக் கடித்து.. கண்களைத் துடைத்துக் கொண்டான்.

அவனது கலக்கம் கண்டு அவளும் மூக்கை உறிஞ்சி.. கண்களைத் துடைத்தாள்.
”உன்ன.. ஒரு நிமிசம்கூட நெனைக்காம என்னால இருக்க முடியாதுடா..! நல்ல பொண்ணா பாத்து நீ கல்யாணம் பண்ணிட்டு.. சந்தோசமா இரு..!!”

அவன் பேசவில்லை.

அவளே மெதுவாகச் சொன்னாள்.
”இருதயா மாதிரி பொண்ணு கெடைக்கறது கஷ்டம்.. முடிஞ்சா அவளையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ.. என்ன மதப்பிரச்சினை ஒன்னு வரும்.. அதுலயே நீயேகூட விட்டுக்குடுத்து போனாலும் தப்பில்ல..”

”பாக்லாம்..” என்றான். மெதுவாக..” நீங்க ரொம்ப பயந்துட்டிங்க..?”

” ஆமா சசி..” என ஒப்புக்கொண்டாள் ”நல்லதோ கெட்டதோ.. உன்கூட பழகி இப்ப நான் கர்ப்பமா இருக்கேன். இதைவிட எனக்கு வேற சந்தோசம் இல்லை. ஆனா இந்த விசயம் வெளிய தெரிஞ்சு.. மானம் போறதை என்னால தாங்கிக்க முடியாது…”

யாருக்கு யார் ஆறுதல் சொல்லிக்கொள்வது என்பது புரியாமல் மாற்றி மாற்றி ஆறுதல் சொல்லிக்கொண்டனர்.
ஆனால் அண்ணாச்சியம்மா ராமுவை மட்டும் அவ்வப்போது கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே இருந்தாள்.

அண்ணாச்சி கடையைக் காலி பண்ணிவிட்டு அவர்கள் சொந்த ஊருக்கே போவது.. அந்த காம்பௌண்டில் இருப்பவர்கள் தவிற.. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தெரிந்து.. நிறையப் பேர் வந்து விசாரித்தார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் சொன்ன ஒரே காரணம்..
”சொந்தத்தோடயே போய் இருந்துடனும்ன்றதுதான். அங்கயே கடைவெச்சு.. சொந்த ஊர்லயே செட்லாகிருவோம்.! என்னருந்தாலும்.. அவங்கவங்க சொந்த பந்தங்களோட சொந்த மண்ல வாழ்ற சுகமே தனிதான்..!!”

ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது.. அண்ணாச்சியம்மாவுக்கும் சசிக்கும் மட்டுமே தெரியும்.

கடைச் சாமானாகளையெல்லாம் ஆள் வைத்து சுத்தம் செய்தார்கள்.

கடை வீடு எல்லாம் காலி செய்வதற்கான வேலைகள் சுருசுருப்பாக நடந்து கொண்டிருந்தது.
சசி அண்ணாச்சியம்மாவிடம் கேட்டான்.
”அண்ணாச்சிகிட்ட என்ன சொன்னீங்க..?”

”இங்க வேண்டாம்.. காலி பண்ணிட்டு ஊருக்கே போயிடலாம்னு சொன்னேன். அவரும் சரின்டாரு.. அப்றம் அவரோட அக்கா பசங்ககிட்ட போன்ல பேசினாரு.. அவங்களும் மொதவே அங்க வரச்சொல்லித்தான் கூப்பிட்டிருந்தாங்க.. இப்ப கடை.. வீடு எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க.. அங்க போனா அப்படியே செட்லாகிரவேண்டியதுதான்..” என்றாள் அண்ணாச்சியம்மா.

”ம்ம்..” அவன் தொண்டையில் எதுவோ அடைத்தது ”நீங்க கர்ப்பம்னு அவருகூட யாருகிட்டயும் சொல்லலையே..?”

மெல்ல ”அவருக்கு எல்லாம் தெரியும்னு நெனைக்கறேன்..” என்றாள்.

தூக்கிவாரிப் போட்டது
”என்ன சொல்றீங்க..?”

”அவரால ஒரு குழந்தைக்கு அபபாவாக முடியாதுனு அவருக்கே தெரிஞ்சுருக்கலாம்.. ஆனா நம்ம மேட்டர் அவருக்கு தெரியும்னு நிச்சயமா சொல்ல முடியாது..! ஆனா எனக்கு அப்படிதான் தோணுது.. ஏன்னா
‘நாம ஊருக்கே போயிடலாம்..அதுக்கு முன்ன.. நா கர்ப்பமா இருக்கறது யாருக்கும் தெரிய வேண்டாம்’னு சொன்னேன். அவரு ஏன் எதுக்குனு ஒரு வார்த்தை கேக்கல..” என மெல்லிய குரலில் சொன்னாள்.

”நெஜமாவா..?”

”நம்பறதுக்கு கஷ்டமா இருந்தாலும்..இதான் உண்மை. ஆனா அவரு மனசுல என்ன இருக்குனு சத்தியமா எனக்கு தெரியாது..!!”

அண்ணாச்சியம்மாவிடம் தினமும் பேசிக்கொண்டுதான் இருந்தான் சசி. ஒவ்வொருமுறை பேசும்போதும்.. அவனைப் பிரியப்போவதை எண்ணி அவள் மனம் கலங்கித் தவிப்பதை.. அவனால் உணர முடிந்தது..!

அவர்களுக்குள் நடந்தது வெறும் உடற்கலப்பு மட்டும் இல்லை. மிகவும் ஆழமான.. நெருக்கமான ஒரு உறவு.!
கள்ளக்காதல் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட ஆழமான அன்பு இருவரையும் வருத்தப்படத்தான் வைத்தது.

இந்த விபரம் அறிந்த சம்சு.. சசி கடையில் இருந்த போது.. கடைக்கே வந்து கேட்டான்.
”அண்ணாச்சி கடை வீடெல்லாம் காலி பண்றாங்களாடா..?” என சசியின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தபடி கேட்டான்.

”ம்..ம்ம்..!” என்றான் சசி.

”ஏன்டா..?என்னாச்சு..?”

”சொந்த ஊர்லபோய்.. சொந்தங்களோட சேர்ந்து..வாழனும்னு ஆசை..” என்றான் சசி.

”அண்ணாச்சி இங்கயே நல்லா சம்பாரிச்சிட்டாரு இல்ல..?”

”ம்..ம்ம். .!!”

”எப்படியோ கொஞ்ச நாள்.. நீயும் அந்த பொம்பளகூட நல்லா ஜாலியா இருந்துட்டே..” சிரித்தபடி சசியின் தோளில் தட்டினான் சசி.

புன்னகைத்தான் சசி. கசப்பான புன்னகை. ஆனால் பேசவில்லை.

”ஒரு நாலஞ்சு மாசம் இருக்குமா..?” சம்சு கேட்டான்.

”என்னது..?”

”அந்த பொம்பளய நீ உருட்ட ஆரம்பிச்சு..?”

சசிக்கு ஒருவித எரிச்சல் மூண்டது. ஆனாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தான்.

”ராமு சொன்னான்.. ரொம்ப நாளாவே.. செமையா ஓட்டிட்டுருக்கேனு.. அது போய்ட்டா உனக்கு கஷ்டம்தான் இல்ல..?”

சசிக்கு அந்தப் பேச்சு சுத்தமாகப பிடிக்கவில்லை. அதை மாற்றவிரும்பினான்.
”சரி.. உன் வொய்ப்.. குழந்தையெல்லாம் எப்படி இருக்காங்க..?”

”ம்..ம்ம்..! சூப்பரா இருக்காங்க..” என்று மந்தகாசமாகச் சிரித்தான்..!!

சசி மிகவும் ஒடிந்துபோய் விரக்தியான ஒரு மனநிலையில் இருந்தான்.
அண்ணாச்சியம்மா ஊரைவிட்டுப் போகும் நாள் நெருங்க..நெருங்க.. அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
சுத்தமாகவே அவனுக்கு உணவும்.. உறக்கமும் பிடிக்காமல் போய்விட்டது. அதனால் அவன் உடல்கூட மெலியத் தொடங்கியது.

அண்ணாச்சி ஊருக்குக் கிளம்பும் முதல் நாள்..
சசியைப் போன்செய்து வரச்சொல்லி.. அவனோடு மனசுவிட்டுப் பேசி.. கண்ணீர் விட்டு அழுதாள் அண்ணாச்சியம்மா.
”எனக்கு ஊருக்கு போறதுல எந்த வருத்தமும் இல்ல பையா..” குரல் நெகிழச் சொன்னாள் ”ஆனா உன்னவிட்டு போறேனே.. அதான் வேதனை. நெஞ்செல்லாம் பிசையுது.. எத்தனை கொடுமையா இருக்கு தெரியுமா.? உன்ன பாக்காம எப்படி இருக்கப் போறேனு நெனச்சாலே.. அடிவயித்துல சொரேர்னு கத்தி சொருகினமாதிரி.. பகீர்னு ஆகுதுடா..”

சசி எதுவும் பேசும் நிலையில் இல்லை.

அண்ணாச்சி வர நேராமாகும் என்பதால்.. அவளே வழிய வழியக் கூப்பிட்டு.. அவனோடு உடலுறவில் ஈடுபட்டாள்.!
அதுவே அவர்களது கடைசி உடற்கலப்பு.. அதேசமயம் அவளது கர்ப்பத்துக்கு பிரச்சினை வரக்கூடாது என அதையும் நாசூக்காகத்தான் செய்ய வேண்டியிருந்தது..!!

ஒருவார இடைவெளியில் ஊரைக்காலி செய்து போய்விட்டார் அண்ணாச்சி.
அண்ணாச்சி ஊரைவிட்டுப் போய்விட்டார் என்பது அந்தக் காம்பௌண்டைப் பொருத்தவரை மிகவும் பரபரப்பாகவே பேசப்பட்டது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசிக்கொண்டார்கள்.
ஆனால் அண்ணாச்சியம்மா கர்ப்பமாக இருந்தது மட்டும் யாருக்கும் தெரியவே இல்லை.

அண்ணாச்சியம்மா போனபின் மிகவும் மனமுடைந்து போனான் சசி.
அவன் இலக்கற்ற ஒரு படகைப் போலச் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தான்.
அவனது மனசு எப்போதும் வேதனையிலேயே உழன்று கொண்டிருந்தது.
சரியான உணவையும்.. உறக்கத்தையும் இழந்ததால் அவன் உடம்பு மெலிந்து கொண்டே போனது.
அவன் மெலிந்து கொண்டு போவதைப் பார்த்து குமுதா மிகவும் கவலைப் பட்டாள்.
அவன் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கிறான் என அவள் நம்பினாள். ஆனால் என்ன பிரச்சினை என்பதை அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
அவனுக்கு என்ன பிரச்சினை என அவனை நச்சரிக்கத் தொடங்கினாள்.
அவளது நச்சரிப்பு அவனுக்கு பெரும் இம்சையாக இருந்தது.
பல நேரங்களில் அவள்மீது எரிந்து விழுந்தான். காரணமற்று திட்டினான்.!

மன உளைச்சல் காரணமாக..அதிகம் தனிமையை விரும்பினான்.
பிறரது குறுக்கீடுகளிலிருந்து விலகி.. விலகியே போய்க்கொண்டிருந்தான்.. சசி….!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 77

What did you think of this story??

Comments

Scroll To Top