கடற்கழுகு – 1

(Tamil Hot Sex Stories - Kadharzkalugu 1)

Raja 2014-05-18 Comments

Tamil Hot Sex Stories – நான் நல்ல பாண்டியன். நல்ல தேவன் என் பெயர். பாண்டியனின் சேனாதிபதியாக இருந்ததால் நல்ல பாண்டியன் என்பார்கள். 6 மாதங்களுக்கு முன் இதே போல ஒரு நாளில்தான் தோத்தா கிழவன் இறந்தார்

19

பொழுது சாயும் நேரம், புகார் கடற்கரையில் கடலைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். கடலின் அலைகளைப் போல என் மன அலைகளும் வேகம் கொண்டன. கண்கள் கலங்க கடலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். காரணம் கடலிற்கும் எனக்கும் மிகுந்த நெருக்கம் உள்ளது. கரை தொட்டு மீண்டும் கடலிற்குத் திரும்பும் அலைகளோடு வாருங்கள் என் பழைய கடல் வாழ்க்கைக்குச் செல்வோம்.

இந்து மகா சமுத்திரத்தின் ஆர்ப்பாட்டமான மாலை நேரம். சூரியன் மெல்ல மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். சமுத்திரத்தின் ஆர்ப்பாட்டத்தையும் சூரியனின் அழகையும், மேகங்களின் வர்ண ஜாலங்களையும் ரசித்தவாறு கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்தேன். நான் வீரத்தேவன். கழுகுத் தேவன் என்று அழைப்பார்கள். காரணம் இந்தக் கப்பலின் பெயர் கடற்கழுகு. இதன் தலைவன் நான். என் பெற்றோர் யார் என்பது எனக்குத் தெரியாது. நான் அனாதையாக கலிங்க வீதிகளில் அலைந்த போது ராஜசிம்மன் என்ற இந்தக் கப்பலின் தலைவன் என்னை எடுத்து வளர்த்தார். எப்போது அவர் என்னை மகனாக ஏற்றுக் கொண்டாரோ அப்போதே என் கடற்பயணமும் ஆரம்பித்து விட்டது. அவர் என்னை மகனாக வளர்ப்பதை விட ஒரு நல்ல வீரனாக வளர்ப்பதில்தான் அக்கறை கொண்டார். அதனால் சிறு வயது முதல் கடற்சண்டைகள், கப்பல் செலுத்தும் முறைகள், நாடுகளின் அமைப்பு, காற்றின் திசைகள் என அனைத்தும் சொல்லித்தந்தார். என் 19,20 ஆவது வயதில் மிகச் சிறந்த கடற் கொள்ளையனாகத் திகழ்ந்தேன். ஆம் நான் ஒரு கடல் கொள்ளையன். என் வளர்ப்புத் தந்தை ஒரு கடற் கொள்ளைக்காரத் தலைவர். வளர்ப்பால் நான் கடற் கொள்ளையனாக இருந்தாலும் என் தோற்றம் அரச வம்சத்தவர்களைப் போல இருக்கும். நெடிய உயரமும், பரந்த மார்பும், இறுகிய கைகளும், நீண்ட தலை முடியும், முறுக்கு மீசையும், பொது நிறமும் என்னைப் பார்ப்பவர்களை நான் ஒரு அரச குமாரன் என்று நினைக்கத் தூண்டிவிடும். சில காலம் செல்ல என்னை கப்பலின் உப தலைவன் ஆக்கினார் தந்தை. நானும் அதற்கேற்றால் போல் அனைத்து கடற் சண்டைகளிலும் வெற்றி வாகை சூடி பொன்னையும் பொருளையும் குவித்தேன். சில வேளைகளில் பொன்னோடு சேர்த்து பெண்களும் மாட்டிக் கொண்டு விடுவார்கள். ஆனால் நாங்கள் அவர்களை ஒன்றுமே செய்ய மாட்டோம். இதுதான் மற்றைய கடற் கொள்ளையர்களில் இருந்து எம்மை வேறு படுத்திக் காட்டியது. பெண்களுக்கு விருப்பம் இல்லாவிடின் நம் கை விரல் கூட அவர்கள் மீது படக்கூடாது என்பது என் தந்தை எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்.எனக்கு மட்டுமல்ல கப்பலின் அனைத்து வீரர்களுக்கும்தான்.

20

எனக்கு 25 வயது இருக்கும் போது அந்தத் துயரச்சம்பவம் நடை பெற்றது. எமக்கும் வேறு கடற் கொள்ளையர்களுக்குமிடையில் ஆதிக்க யுத்தம் நடைபெற்றது. அதில் நாம் வெற்றி பெற்றாலும் என் தந்தை மரணமடைந்து விட்டார். அன்றிலிருந்து நான் கப்பலின் தலைவனாக மாறினேன். என் கப்பலை மாற்றியமைத்தேன். 700 அடி நீளமான என் கப்பலில் 40 பீரங்கிகள் பொருத்தினேன். கப்பலின் வேகத்தை அதிகரிப்பதற்காக 10 பாய்களை அமைத்தேன். கப்பலின் ஆள் வலிமையை 150 பேர் ஆக்கினேன். அதன் பின்னர் என் கப்பலின் பெயரைக் கேட்டாலோ என் பெயரைக் கேட்டாலோ அனைவரும் நடுநடுங்குவர். எனக்கு நண்பர்களாக கருப்புபாண்டியும், மாறத்தேவனும் கிடைத்தார்கள். சிறந்த வீரர்கள். அதனால் அவர்களை என் தளபதிகள் ஆக்கிக் கொண்டேன். சிக்கலான சமயங்களில் என் தந்தையின் நண்பர் தோத்தா கிழவனிடம் ஆலோசனை கேட்பேன். அவருக்கு அப்போது 65 வயது ஆகியிருந்தது. இருந்தாலும் எங்களோடே கடற்பயணங்களில் ஈடுபட்டிருந்தார். என் தந்தை ராஜசிம்மனை விட அதிக பாசம் காட்டியவர்.

என் 28 ஆவது வயதில் என் வாழ்க்கையில் திருப்புமுனை ஒன்று ஏற்பட்டது. நீண்ட கடற் பயணத்தின் பின் கப்பலை பழுது பார்ப்பதற்காகவும் வெடிமருந்துகள் வாங்குவதற்காகவும் கப்பலை பேய்த்தீவை நோக்கிச் செலுத்தினேன்.வருடத்திற்கு 2. 3 முறைதான் இத் தீவிற்கு வருவேன். அடிக்கடி வர விரும்புவதில்லை. காரணம் இருந்தது. பேய்த்தீவு நரமாமிசம் உண்ணும் பழங்குடிகள் வாழ்ந்த தீவு. அந்தத் தீவின் மறு பக்கத்தில்தான் கடற் கொள்ளையர்களின் பெரிய துறைமுகம் அமைந்திருந்தது. அனைத்து கடற் கொள்ளையர்களும் தங்கள் கப்பலை பழுது பார்க்கவும் வெடிமருந்துகள், வேறு நாட்டுப் பெண்கள் என எதை வாங்குவதற்கும் இங்குதான் வருவார்கள். பசல்கார் என்ற கொள்ளையன்தான் அப் பகுதியை நிர்வகித்தான். பழங்குடிகளோடு ஒப்பந்தம் செய்து அப் பகுதியை ஆண்டு கொண்டிருந்தான். சாதாரண கப்பல்களோ, வியாபாரக் கப்பல்களோ இந்தப் பக்கம் கூட வராது. ஒவ்வொரு நாள் இரவும் எங்காவது பெண்களில் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அப்படிப் பட்ட பயங்கரமானது இந்தப் பேய்த்தீவு. ஆனால் இத் தீவிற்கு வந்து விட்டால் கொள்ளையர்கள் ஒருவரை ஒருவர் தாக்கக் கூடாது என்பது இத் தீவின் சட்டம்.

21

2 நாள் பயணத்தின் பின் மாலை நேரத்தில் பேய்த்தீவை அடைந்தோம். துறைமுகத்திலும் கடலிலும் பல கொள்ளையர்களது கப்பல்கள் நங்கூரமிட்டு நின்று கொண்டிருந்தது. என் கப்பலை கடற்க்ரைக்கு சமீபமாக நங்கூரமிட்டேன். அப்போது சற்று தூரத்தில் கடற்கரையில் அரச வம்சத்தவர் பயணம் செய்யும் கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிற்பதைக் கவனித்தேன். இந்த இடத்தில் இந்தக் கப்பலுக்கு என்ன வேலை என்று யோசித்துக் கொண்டே தீவுனுள் பிரவேசித்தேன். நேராக என் நெருங்கிய நண்பன் பக்ருவின் மாளிகைக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் மகிழ்ச்சியோடு வரவேற்றான். இருவரும் எங்கள் அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டோம். பின் வழமை போல கப்பலிற்கு தேவையான பொருட்களின் விபரத்தை அவனிடம் தெரிவித்தேன். ” இரவாகி விட்டதால் நாளை காலை பார்க்கலாம், நீ சென்று நண்பர்களை அழைத்து வா ” என்று சொன்னான். அப்போது அரச வம்சக் கப்பலைப் பற்றிய ஞாபகம் வரவே அதைப் பற்றி அவனிடம் கேட்டேன். ” ஆம் கழுகுத்தேவா… அது கலிங்க அரச வம்சத்தவர் பயணம் செய்த கப்பல், பாஞ்சாலம் செல்லும் வழியில் துஸ்லாவிடம் மாட்டிக் கொண்டனர், கப்பலின் பொக்கிஷங்களை சூறையாடியவன் அக் கப்பலில் இருந்த கலிங்க இளவரசியின் அழகில் மயங்கி அவளையும் மற்றவர்களையும் இங்கே கொண்டுவந்து விட்டான், மற்றவர்களை கொன்று விட்டான். இளவரசியை இத் தீவின் கிழக்குப் பக்கத்தில் மனித நடமாட்டம் அற்ற ஒரு பகுதியில் குடிசை ஒன்றை அமைத்து அதில் சிறை வைத்திருக்கிறான். அச் சிறையில் வைத்து தன்னை மணந்து கொள்ளும் படி இளவரசியை வற்புறுத்துகின்றான், வழமையாக தன்னிடம் சிக்கும் பெண்களை சிதைப்பவன் அவன், இளவரசியின் அதிர்ஷ்டம் அவர்களை இன்னும் எதுவும் செய்யவில்லை….” என்றான் பக்ரு. ” ஆனால் கலிங்க நாட்டு படைகளுக்கு இது தெரிந்தால் இத் தீவிற்கே விபரீதமாகிவிடுமே…. அதனால் இளவரசியை சிறை எடுத்தது முட்டாள்தனம் என்று யாரும் சொல்லவில்லையா ” என்று கேட்டேன். ” கேட்டார்கள்… மரணத்தை தழுவினார்கள், பசல்காரின் நண்பன் துஸ்லா… அதனால் அவனை எதிர்க்க யாரும் பிறகு வரவில்லை ” என்றான் பக்ரு. ” சரி இரவு கவிழ்வதற்குள் நண்பர்களை அழைத்து வந்து விடுகிறேன் ” என்று கூறிவிட்டு கப்பலை நோக்கி வேகமாகச் சென்றேன். அங்கு கடற்கரையில் மாறதேவனும் கருப்புபாண்டியும் தோத்தா கிழவனும் எனக்காக காத்திருந்தனர். ” தாமதத்திற்கு மன்னியுங்கள்… மாறதேவா நம் வீரர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டாயா “என்று கேட்டேன். ” ம்… அப்போதே ஆயிற்று, ஏன் இத்தனை தாமதம் ” என்று கேட்டான் மாறதேவன். போகும் வழியில் அனைத்தையும் விபரமாகக் கூறுகிறேன், இப்போது பக்ருவின் மாளிகைக்கு செல்லலாம் வாருங்கள் என்று மூவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டேன். வழியில் அனைத்தையும் விபரமாகக் கூறினேன். பக்ருவின் மாளிகையில் இரவு உணவை முடித்துக் கொண்டு தூங்கச் சென்றோம். தூக்கத்திலும் அந்த இளவரசியின் நினைவாகவே இருந்தது. துஸ்லாவை நான் அறிவேன். நரமாமிசம் உண்ணும் மகா முரடன் அவன். அவன் கையில் சிக்கிய இளவரசியை நினைக்க வேதனையாக இருந்தது. நாளை காலை எப்படியாவது இளவரசியைப் பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு உறங்கிப் போனேன். Thoongum Bothu Okkum Tamil Hot Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top