பிள்ளைகள் மாமா என்றாலும் அவர் எனக்கு புருஷன்

(Pillaigal Mama Endraalum Avar Enaku Purushan)

maamu 2018-03-21 Comments

ஆனால் அரவிந்த் ரொம்ப அன்பா பேசி பழகுவார். வீட்டுக்கு வந்தா ரொம்ப உரிமையோடு, தங்கச்சி ரொம்ப பசிக்குது. ஏதாவது சாப்பிட போடு?” என்று உரிமையோடு கேட்பார் நானும் அவருக்கு பிடித்த உணவை சமைத்து பரிமாறுவேன். அப்படி சில வருடங்கள் பழக்கத்துக்கு பிறகு ஒரு நாள் என்னையும் கட்டுப்படுத்த முடியாமல்,

அண்ணா, உங்களுக்குனு ஒருத்திய கட்டிகிட்டா, வாய்க்கு ருசியா 3 வேளையும் சமைச்சு போடுவா. வீட்டுக்கு களைப்போ போனா உங்களை அன்பா பார்த்துப்பா, பழசை மறந்துட்டுட்டு புது வாழ்க்கையை தொடங்குங்க அண்ணா, என் வீட்டுக்காரர் உங்க கிட்டே அதை பத்தி பேசாதேனு சொன்னாலும் எனக்கு மனசு கேட்கலனா.. என்று கண்ணை கசக்கி கொண்டு சொன்னபோது, கலங்கிய அரவிந்த் அண்ணா நானே எதிர்பாராமல்,

நீ சொல்றது சரிதாம்மா. எனக்கும் இந்த தனிமை கஷ்டமாத்தான் இருக்கு. அப்போ அது தான் தீர்வுனு நினைச்சு ரவி என் வீட்டோட சேர்ந்து பார்த்த பொண்ணை கூட வேண்டாம்னு சொல்லி அவங்க மனசை காயப்படுத்திட்டேன். ஆனா இப்போ ஃபீல் பண்றேன். ஆனா இனிமே நீயே பொண்ணு பார்த்து கட்டிக்கோங்கணு சொன்னா, கூட மறுக்கமாட்டேன்?” என்று சொல்லிவிட்டு, அரவிந்த் அண்ணா விருட்டென்று எழுந்து கையை கழுவிட்டு வீட்டை விட்ட கிளம்பினார்.

நான் கண்களை துடைத்து விட்டு ஆனந்தத்தில் துள்ளி குதித்தேன். என் கணவரிடம் போன் போட முயன்று வேண்டாம் அவரு டென்ஷன்ல இருந்தா எல்லாம் பாழாகிடும் என்று இரவு என் கணவர் ரவி வரும் வரை பொறுமையாக இருந்து இதை சொன்ன போது, என் கணவர் என்னை நம்ப முடியாமல் சந்தோஷத்தோடு என்னை கட்டிக்கொண்டார். உடனே நான் களத்தில் இறங்கி என் உறவுக்கார பொண்ணை அரவிந்த் அண்ணாவுக்கு கட்டி வைத்தேன். 1 மாதம் வரை இருவரும் இன்பமாக வாழ்ந்தனர். அப்போது நான் கட்டி வைத்த என் உறவுக்கார பெண் சுமதிக்கு கிறுக்கி பிடித்தது.

அவள் அரவிந்திடம், அப்பாவிடம் எவ்வளவு பணம் என்றாலும் வாங்கித் தருகிறேன். பார்ட்னர் நிறுவனத்தை விட்டு தனியாக ஒரு நிறுவனத்தை ஆரம்பியுங்கள். நாம தனியா சம்பாதிச்சு சந்தோஷமா இருக்கலாம் என்று பிரிவினை கோடு போட முயல, அதே கேட்ட அரவிந்த் அண்ணா அவர் கண்ணத்தில் பளார் என்று அறைந்து இருக்கிறார். அன்றே பெட்டியை தூக்கி கொண்டு புகுந்த வீட்டிற்கு போனவள் தான் பிறகு டைவர்ஸ் நோட்டீஸை அனுப்பனாள்.

நாங்கள் காலில் விழாத குறையாக சமரசம் செய்து வைக்க போனபோதெல்லாம் அவள் வீட்டில், நான் தான் திருமணம் செய்து வைத்தேன் என்பதை கூட யோசிக்காமல், எல்லாத்துக்கும் காரணம் நானும் என் புருஷனும் தான் என்பது போல் பேச, அரவிந்த் உடனே அவளை டைவர்ஸ் செய்து விட்டு தொழிலை கவனிக்க ஆரம்பித்தார்.

ஆனால் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று போய் தொழிலை கவனிக்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டது. கணவர் அந்த மனஉளைச்சலில் டிரைவிங்கில் போகும் போதே, ஹார்ட் அட்டாக்கில் வண்டியை மரத்தில் மோதி இறந்து போனார். நானும் பிள்ளைகளும் ஆனாதை ஆனோம். அப்போது ஒரே ஆறுதல் அரவிந்த் அண்ணா மட்டும் தான்.

அதற்கு பிறகு ஒரு நல்ல நாளில் நான் கோவிலில் வைத்து அண்ணாவிடம், சேர்ந்து வாழும் ஆசையைச் சொல்ல அவரும் ஏற்றுக் கொண்டார். இப்போது அவர் எனக்கு கணவர். மாமா என்று வாயார கூப்பிட்டு பழகிய என் பிள்ளைகள் இன்றும் அவரை அப்படித்தான் கூப்பிடுகிறார்கள். அதே போல் அண்ணா என்று அழைப்பதை மட்டும் இன்று வரை என்னாலும் நிறுத்த முடியவில்லை. அது கட்டிலில் கட்டிப்பிடிப்பதை வரை தொடர்கிறது. ஆனால் அன்போடு அணைத்துக் கொண்டு அதே அண்ணா, தங்கையாக காதலும், காமமும் திளைக்க வாழ ஆரம்பித்து இருக்கிறோம்.

நன்றி..!

What did you think of this story??

Comments

Scroll To Top