என்னைக் கொஞ்சம் எடுத்துக் கொள் – 1

(Tamil Sex Stories - Ennai Konjam Eduthukol 1)

Raja 2016-08-01 Comments

This story is part of a series:

Pundai Nakkum Tamil Sex Stories – வேகமாக ஓடி வந்த நான் .. சட்டென கால் இடறி கீழே விழப்போனேன். என் கால் இடறிய வேகத்தில் எனது இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிக் கொள்ளும் முயற்சியில்.. அகலமாக விரித்துக் கொண்டு.. சரியப் போன வேளையில்… எதிரே வந்து கொண்டிருந்த நிருதி மாமா மேல் போய் மோதினேன் ..!!

கையில் மொபைலை வைத்து.. நோண்டிக்கொண்டே வந்த நிருதி மாமா சுதாரித்துக் கொள்ளும் முன்.. பாய்ந்து வந்த காளை போல… அவரை நான் ஒரே முட்டாக முட்டித் தள்ளி விட்டேன். !!

அவ்வளவுதான்.. நான் இடது பக்கத்தில் சரிந்து விழுந்தேன். நிருதியும் அவருக்கு இடது பக்கத்தில் இருந்த.. சேர்கள் மீது போய் மோதி.. தடுமாறி கீழே விழுந்தார்..!!
எனக்கு எங்கு அடிபட்டது என்றுகூட நான் கவனிக்கவில்லை. என் ஈரக்குழை எல்லாம் நடுங்க.. நான் பதறி எழுந்து நின்றேன். எனக்கு பேசக்கூட வார்த்தை வரவில்லை.
நான் அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் அவரொப் பார்த்துக் கொண்டு.. நின்றேன்..!!

தடுமாறி எழுந்த நிருதி மாமா மண்டையை தேய்த்துக் கொண்டார். சேருக்கடியில் கிடந்த அவரது மொபைலை தேடி எடுத்தார். அதை துடைத்து அமுக்கிப் பார்த்து விட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தார்..!!

அந்த கண்களில் தெரியும் எரிமலை தணலை.. தாங்க முடியாமல்.. பயத்தில் பின்னுக்கு நகர்ந்தேன்..!!
‘ ஸாரி.. ஸாரி.. !’ என மனதுக்குள் கதறிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு எழுத்து கூட என் தொண்டையை தாண்டி வெளியே வரவில்லை. என் கண்கள் நீர் கோர்த்துக் கொண்டது.
அடுத்தது என்ன நடக்கும் என்பதை நான் ஓரளவு யூகித்தே இருந்தேன். அதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்தேன்.. ஆனால் பயம் என்னை எஙகும் நகர விடவில்லை.. !!
இதற்கிடையில் என்னைத் துரத்திக் கொண்டு வந்த வாண்டு சுரேஷ் போன இடம் தெரியவில்லை..!! ஆனால் வேறு சிலர்.. எங்களை சுற்றி கூடியிருந்தது எனக்கு கொஞ்சம் மன பயத்தை போக்கியது.. !!

அவர் எதுவுமே பேசவில்லை. நேராக என் முன்னால் வந்து நின்றார்.
” பளீர்.. !!” என என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.!
அவ்வளவுதான் எனக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. கண்களுக்குள் மின்மினிகள் கூட்டம் கூட்டமாக பறக்கத் தொடங்கியது..!!
யாரோ அவரை தடுத்தார்கள்.. என்னமோ திட்டினார்கள்.. எனக்கு எதுவும் தெரியவில்லை.. !! என்னை யாரோ.. கன்னம் தடவி.. என் தோளில் கை போட்டு அழைத்துக் கொண்டு போனது மட்டும் தான் எனக்கு தெரிந்தது.. !!

என்னைப் பற்றி…..
நான் நந்தினி பிரியா..!! எம் எஸ் ஸி பர்ஸ்ட் இயர்..!! இந்த நிருதி.. என் பெரிய அத்தை மகன்..!! எனக்கு முறைப்பையன் என்றாலும் இன்றுவரை.. நான் சரியாக பேசியது கூட கிடையாது..!! செரியான கோபக்காரன்.. முசுடு.. என பெயர் வாங்கியவர்..!! அவரிடம் நேரில் நின்று பேச அவரது அக்காளே பயப்படுவாள்.. !!

இன்று எங்கள் ஒன்று விட்ட உறவுப் பெண் ஒருத்தியின் நாளைய பூப்புனித நீராட்டு விழாவுக்காக.. இந்த வீட்டில் ஒன்று கூடியிருக்கிறோம்.. நாங்கள் இருப்பது எல்லாம் சொந்த பந்தஙகளுடன் ஒரே ஊருக்குள்தான்.. !!

வசந்தி அக்கா ஓடி வந்து என்னைக் கேட்டாள்.
” என்னடி தம்பி உன்னை அடிச்சிட்டானா.. ??” இவள்தான் அவனரு உடன் பிறந்த அக்கா.
இவளது மூத்த பையன்தான் என்னை துரத்திக் கொண்டு வந்த வாண்டு சுரேஷ்..!!

மெதுவாக தலையை ஆட்டினேன்.
” ம்ம்.. !!”
என் அழுகை ஓய்ந்து விட்டிருந்தது. கன்னம் மட்டும் இன்னும் தீயாக எரிந்து கொண்டிருந்தது.!

” எங்க அடிச்சான்.. ??” என்னை லேசாக அணைத்தபடி என் கன்னம் தொட்டு வருடினாள்.
” பரதேசி எப்படி அறைஞ்சிருக்கான் பாரு.. ?? ஒரு சின்ன பொண்ணுணு கூட பாக்காம.. ?? அவன.. ?? ரொம்ப வலிக்குதா.. ??”

” இல்லேக்கா.. !!” நான் சமாளித்துக் கொண்டு சொன்னேன்.

” அவன் சின்ன வயசுலருந்தே அப்படித்தான்டி ரொம்ப மொரட்டு தனமா வளந்துட்டான். நானே இப்பக்கூட அவன்கிட்ட பேசனும்னா.. ஒரு பத்தடி தள்ளி நின்னுதான் பேசுவேன்.. !! என்னைலாம் அவன் அடிச்சதே இல்ல.. ஆனாலும் அவன பாத்தா எனக்கு பயம் வந்துரும்.. !! என்னடி பண்றது.. ?? அவன எப்படி சரி பண்றதுனே யாருக்கும் தெரியல…!!” என் கன்னம் வருடிக் கொண்டே சொன்னாள்.

” ம்ம்.. பரவால்லக்கா.. நான் ஒரு அடியோட தப்பிச்சேனே.. அதுவே பெரிய விசயம்.. !!” சொல்லி விட்டு நான் லேசாக சிரித்தேன்.

” பார்ரீ.. கன்னத்துல விரல் பதியற மாதிரி அறை வாங்கிட்டு அதையும் சிரிச்சிட்டே சொல்றா.. ?? ” என்றாள் வசந்தி அக்கா..!!

அன்றைய மாலை நேரத்து பேச்சு பெரும்பாலும் என்னைப் பற்றியதாகத்தான் இருந்தது. நிருதி மாமாவிடம் நான் வாஙகிய ஒரு அறைக்காக நிறைய பேர் என்னை அழைத்து அக்கறையாக பேசினார்கள்..!! ஆறுதல் சொன்னார்கள்..!! என் பெரிய அத்தை என்னைக் கொஞ்சி.. என் கன்னத்தில் முத்தமெல்லாம் கொடுத்து.. தன் மகன் அடித்ததற்காக.. மன்னிப்பு கேட்டு என்னை சமாதானம் செய்தாள்.. !!

ஆனால் எனக்கு என் நிருதி மாமா மேல் ஏனோ கோபமே வரவில்லை.
‘ தப்பு என் மேல தானே..? பாவம் அவருக்கு எங்கே அடி பட்டதோ.. ? மண்டையை எல்லாம் தேய்த்துக் கொண்டிருந்தாரே.. ? அதை பற்றி யாருமே அவரிடம் விசாரிக்கவில்லையே.. ? என்னை அறைந்து அவர் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டாரே.. !’ என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்..!!

இரவு ஒன்பது மணி இருக்கும்.. நான் அப்போதுதான் என் வீட்டுக்கு போய் விட்டு வந்து கொண்டிருந்தேன். வீட்டு பக்கத்தில் போக.. எனக்கு பின்னால் இருந்து..

” ஏய்ய்.. !!” என்ற நிருதி மாமா குரல் கேட்டது.

சட்டென திரும்பி பார்த்தேன்.
என் பக்கத்தில் வந்திருந்தார்.
அவரை பார்த்த உடனே நான் உச்சா போய்விடுவேன் போல இருந்தது. என் அடி வயிற்றில் அப்படி ஒரு பயம்..!!

” உன் பெரிய அத்தைய பாத்தியா.. ??” எனக் கேட்டார்.

” ம்ம்.. உ.. உள்ள இருந்தாங்க.. !!” தடுமாறிக் கொண்டு சொன்னேன்.

” வீட்டு சாவி வேனும்.. போய் வாஙகிட்டு வா.. !!” என கட்டளை போல சொன்னார்.

நான் பதில் கூட சொல்லாமல் வீட்டுக்குள் ஓடினேன்.
நாளைய சமையலுக்கான வேலையில் ஈடுபட்டிருந்த என் பெரிய அத்தையை தேடிப் பிடித்து..
” நிரு மாமா வீட்டு சாவி வாஙகிட்டு வரச்சொல்லுச்சு.. !!” என்றேன்.

” எங்கருக்கான்.. ??”

” வாசல்ல நிக்குது.. !!”

” நீயே குடுத்துர்ரியா.. அத்தை கை வேலையா இருக்கேன்.. ??”

” ம்ம்… குடுங்க.. !!”

அத்தை சாவியை எடுத்து கொடுத்தாள்.
” பாத்து தஙகம் அவன் கைல குடுத்ததும் நீ ஒடியாந்துரு.. மறுபடி அடிச்சாலும் அடிப்பான்..!!”

” இல்லத்த.. தப்பு என் பேர்லதான்.. நான்தான் மாமாவ தள்ளி விட்டுட்டேன்.. !!” எனச் சொல்லி விட்டு வெளியே போய்.. தெருவை பார்த்தபடி நின்றிருந்த நிருதி மாமாவிடம் சாவியை நீட்டினேன்.

வாங்கியவர்..
” சாப்பிட்டியா ??” எனக் கேட்டார்.

” ம்ம்.. !!” தலையை ஆட்டினேன்.

” எனக்கு பசிக்குது வந்து சாப்பாடு போடு வா.. !!”

நான் திகைத்தேன்
” நானா.. ??”

” ஏன்.. அதெல்லாம் நீ செய்ய மாட்டியா.. ??” குரல் திடமாக இருந்தது.

” செ.. செய்வேன்.. எங்கம்மாகிட்ட போய் சொல்லிட்டு….. ”

” நானே சொல்றேன் வா.. !!”
சட்டென திரும்பி வீட்டுக்குள் போனார். நான் அவர் பின்னால் லேசான தயக்கத்துடன் போனேன்.
என் அம்மாவிடம் போய்.. என்னை உணவு பறிமாற அழைத்து போவதாக சொன்னார்.
என்னை எலலோரும் வாயை திறந்த படி பார்த்தனர்..!!

நானே முந்திக் கொண்டு சொன்னேன்.
” வாங்க மாமா.. நான் போட்டு தரேன்.. !! அத்தை என்னென்ன செஞ்சி வெச்சிருக்கிங்க.. ??”
நான் அத்தையை கேட்க.

Comments

Scroll To Top