அன்புள்ள ராட்சசி – பகுதி 45

(Tamil Sex Story - Anbulla Ratchashi 45)

Raja 2013-09-03 Comments

“ஆக்சிடண்டல் டெத் மாதிரிதான் தோணுது எஸ்பி.. எதும் ஃபோர்ஸ் பண்ணதுக்கான சிம்ப்டம்ஸ் இல்ல.. ஓவர்டோஸ் ஆகி உயிரை விட்ருக்கணும்..!! ட்ரக்ஸ் ப்ளஸ் ஆல்கஹால்..!! ஹ்ம்ம்.. உள்ள என்னென்ன வெடிச்சதோ தெரியல.. மூக்குல இருந்து ரத்தம் கொட்டிருக்கு..!!”

“ம்ம்..!!”

“Overall.. It looks pure accidental to me..!!”

“இப்போவே எந்த முடிவுக்கும் வந்துட வேணாம் பார்த்தி.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும்.. பாத்துக்கலாம்..!!”

அமர்த்தலாக சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், அடுத்த நொடியே சரக்கென திரும்பினார். வாசலில் நின்றிருந்த கனகராஜனையும் அசோக்கையும் பார்த்ததும், அவரிடம் மெலிதாக ஒரு திகைப்பு. ஆனால் உடனடியாய் அந்த திகைப்பை சமாளித்துக் கொண்டவர்,

“ஒரு அஞ்சு நிமிஷம் அசோக்..!!”

என்று அசோக்கை பார்த்து ஒரு இதமான புன்னகையை வீசினார். பிறகு கனகராஜனை ஏறிட்டவர், முகத்தில் இன்ஸ்டன்டாக ஒரு கடுமையை வரவழைத்துக்கொண்டு,

“வேன் என்னாச்சு கனகு..??” என்றார்.

“வந்துக்கிட்டு இருக்கு ஸார்.. இப்போத்தான்..”

கனகராஜன் பதற்றத்துடன் சொல்லி முடிப்பதற்கு முன்பே.. அவருடைய பதிலில் ஆர்வம் இல்லாதவர் போல.. ஸ்ரீனிவாச பிரசாத் படக்கென திரும்பி உள்ளே நடந்தார்..!! ஒருகணம் குழம்பிய கனகராஜன்.. பிறகு அவசரமாக நகர்ந்து அவரை பின்தொடர்ந்தார்..!! என்ன செய்வது என்று புரியாத அசோக்கும்.. கனகராஜனின் பின்னால் நடந்தான்..!!

விடுவிடுவென நடந்த ஸ்ரீனிவாச பிரசாத் பக்கத்து அறையை அடைந்தார்.. அவருக்கு பின்னாலேயே, கனகராஜனும் அசோக்கும்..!!

பக்கத்து அறைக்குள் அந்தப்பெண் அமர்ந்திருந்தாள்.. அழகாக இருந்தாள்.. முப்பதுகளின் ஆரம்பத்தில் ஏதாவது ஒரு வயது இருக்கலாம்.. முகத்தில் ஒருவித அசாத்திய அமைதி..!! அவளது கையில் பால்சாதம் நிரம்பிய கிண்ணம்.. மடியில் அவளுடைய ஐந்துவயது பெண்குழந்தை..!! இவர்கள் வாசலில் வந்து நின்றதை அந்தப்பெண் கவனிக்கவில்லை.. குழந்தைக்கு சாதம் ஊட்டுவதில் குறிப்பாக இருந்தாள்..!! அந்தக்குழந்தை சாதத்தை அசைபோட்டவாறே.. வாயிடுக்கில் பாலும், வார்த்தைகளில் மழலையும் வழிந்தோட.. அம்மாவை கேட்டது..

“ஸ்கூலுக்கு போகலைன்னா மிஸ் திட்டுவாங்களே..??”

“இல்லடா.. மிஸ் திட்டமாட்டாங்க..!! மம்மி.. மிஸ்ட்ட பேசிட்டேன்..!! சுஜிக்குட்டி.. மண்டே ஸ்கூலுக்கு வந்தா போதும்னு மிஸ் சொல்லிட்டாங்க..!!”

“நெஜமா..??” அந்தக்குழந்தையின் கண்களில் ஒரு சந்தோஷ மின்னல்.

“ம்ம்.. நெஜமா..!!” அந்தப்பெண்ணின் இதழ்களில் ஒரு வறண்ட புன்னகை.

அப்பா இறந்துபோன விஷயம், அந்தக்குழந்தைக்கு இன்னும் தெரியாது போலிருந்தது.. இப்போதுதான் தூக்கத்திலிருந்தே விழித்திருக்கும் போல தெரிந்தது..!! கண்களில் ஒருவித சோர்வுடனும்.. ‘இன்று பள்ளிக்கு செல்கிற தொல்லை இல்லை’ என்ற மகிழ்ச்சியுடனும்.. அம்மா ஊட்டிய பால்சாதத்தை விழுங்கிக்கொண்டிருந்தது..!!

இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் ‘ம்க்கும்’ என்று மெலிதாக தொண்டையை செரும.. அந்தப்பெண் கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தாள்..!! இவர்கள் மூன்று பேரையும் வாசலில் கண்டதும்.. ‘என்ன..’ என்பது போல கேள்வியாக பார்த்தாள்..!!

“கொஞ்சம் பேசணும்..!!” என்றார் ஸ்ரீனிவாச பிரசாத்.

“உ..உள்ள வாங்க..!!” என்றாள் அவள்.

ஸ்ரீனிவாச பிரசாத் மட்டும் அறைக்குள் நுழைய.. அசோக்கும் கனகராஜனும் வாசலுக்கு அருகிலேயே நின்றுகொண்டார்கள்..!! உள்ளே சென்ற ஸ்ரீனிவாச பிரசாத்.. அந்தப்பெண்ணுக்கு அருகே கிடந்த இன்னொரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.. மென்மையான குரலிலேயே ஆரம்பித்தார்..!!

“இது.. ஜஸ்ட் ஃபார்மல் என்கொய்ரிதான் மிஸஸ் தேவராஜ்.. நீங்க ஒன்னும்..” ஸ்ரீனிவாச பிரசாத் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அந்தப்பெண் இடைமறித்து,

“நிர்மலா..!!” என்றாள்.

“வாட்..??” ஸ்ரீனிவாச பிரசாத் புரியாதவராய் நெற்றி சுருக்கினார்.

“என் பேர் நிர்மலா.. அப்படியே என்னை கூப்பிடலாம்..!!”

அந்தப்பெண் இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு, குழந்தையின் வாயில் சாதத்தை திணித்தாள். ஸ்ரீனிவாச பிரசாத் ஒருசில வினாடிகள் ஒருவித திகைப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் ஒரு பெருமூச்சுடன், அந்த திகைப்பை சமாளித்துக்கொண்டு சொன்னார்.

“ஓகே.. மிஸஸ் நிர்மலா.. இ..இது.. இது ஜஸ்ட் ஃபார்மல் என்கொய்ரிதான்.. நீங்க எதும் டென்ஷன் ஆகிக்க வேணாம்னு சொல்ல வந்தேன்..!!”

“இல்ல.. டென்ஷன் ஆகல..!! கேளுங்க..!!”

“உ..உங்க ஹஸ்பண்டுக்கு எத்தனை நாளா இந்தப்பழக்கம் இருக்கு..??”

“குடிப்பழக்கம் கல்யாணம் ஆன நாள்ல இருந்தே இருக்கு..!! இப்போ ஒரு ரெண்டு வருஷமாத்தான்.. இதுலாம்..!!”

“ம்ம்..!! அவர் கன்ஸ்யூம் பண்ணிருக்குறது.. கொக்கைன்’ன்னு சொல்ற ஒருவகை போதைப்பொருள்..!! கேள்விப்பட்ருக்கீங்களா..??”

“இ..இல்ல.. கேள்விப்பட்டது இல்ல..!!”

“ரொம்ப காஸ்ட்லி.. ஒரு சின்ன பொட்டலமே இருபதாயிரம், முப்பதாயிரம் ஆகும்..!! இங்க சென்னைல அவ்ளோ ஈஸியா கெடைச்சிடாது.. ஸவ்த் அமெரிக்கால இருந்து ஸ்மக்ள் பண்ணி.. மும்பை, டெல்லி மூலமாத்தான் சென்னைக்கே வந்தாகனும்..!!”

“ஸோ..??”

“நத்திங்.. இந்த ட்ரக்ஸ்லாம் சென்னைல புழக்கத்துல இருக்குதுன்ற ந்யூஸே.. எங்க டிப்பார்ட்மண்ட்டுக்கு பெரிய தலைவலியான சமாச்சாரம்..!! மீடியாக்கு தெரிஞ்சா சொல்லவே வேணாம்.. ஒரு வழி பண்ணிடுவாங்க..!! It’s a serious issue for us Mrs.Nirmala..!! என்ன சொல்ல வரேன்னு புரியுதா..??”

“பு..புரியுது..!!”

“ம்ம்..!! அவருக்கு இந்த ட்ரக்ஸ்லாம் எப்படி கெடைக்குதுன்னு.. உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா..??”

ஸ்ரீனிவாச பிரசாத் கேட்கவும், நிர்மலா இப்போது பட்டென அமைதியானாள். சிலவினாடிகள் சாதத்தை பிசைந்துகொண்டே, சற்று யோசித்தாள். பிறகு பிசைந்த சாதத்தை சுஜிக்கு தந்தவாறே, மெலிதான குரலில் சொன்னாள்.

“எனக்கு அந்த ஆள் பேர்லாம் தெரியாது.. ஆனா.. அந்த ஆள் மூலமாத்தான் இவருக்கு இதெல்லாம் கெடைக்குதுன்னு மட்டும் நல்லா தெரியும்..!! அப்பப்போ இங்க வருவான்.. இவரும் அவனுக்கு அப்பப்போ பணம் குடுக்குறதை நான் பாத்திருக்கேன்..!! நேத்து கூட.. இவர் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல அந்த ஆள் பைக்ல இங்க வந்தான்.. இவர் வாசலுக்கே போய் அவன்ட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தாரு..!! அனேகமா.. அந்த கருமத்தை குடுக்குறதுக்குத்தான் அவன் வந்திருக்கணும்..!!” Pundai Tamil New Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top