ஆண்மை தவறேல் – பகுதி 12

(Tamil Kamakathaikal - Aanmai Thavarael 13)

Raja 2013-11-22 Comments

Tamil Kamakathaikal – “அதான் இந்த கல்யாணம் நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சு.. அப்புறம் என்ன..?”

“ஹாஹா.. கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னுதான சொன்னேன்..? கல்யாணம் நடக்காதுன்னா சொன்னேன்..?? எதுக்கெடுத்தாலும் முறுக்கிக்குற..? உக்காரும்மா.. உக்காரு ப்ளீஸ்..!!”

அசோக் இளித்தவாறே சொல்ல, நந்தினி ஒருமுறை வெறுப்பாக தலையசைத்தாள். அப்புறம் மீண்டும் அந்த சேரில் பொத்தென்று அமர்ந்தாள். ‘அப்படி என்ன இவனுக்கு என்னைக் கண்டால் இளக்காரம்..? வந்ததில் இருந்தே எப்படி காய விடுகிறான் என்னை..? இனியும் இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லக்கூடாது..!!’ மனதுக்குள் சொல்லிக்கொண்ட நந்தினி சற்றே பொறுமையில்லாதவளாய் சொன்னாள்.

“இங்க பாருங்க.. சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு வேலை இருக்கு.. ஹாஸ்பிட்டல் போகணும்.. அம்மாவுக்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ்..!!”

“ஓ.!! உன் அம்மா ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களா..? என்னாச்சு..??”

“மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டாங்க.. உடம்புல கொஞ்சம் அடி..”

“ம்ம்.. அம்மாவை நான் கேட்டதா சொல்லு..!! உன் அப்பா இறந்ததுக்கு கூட என்னால வர முடியலை..”

“ஆங்.. சொன்னாங்க.. நீங்க பெங்களூர்ல ரொம்ப பிஸ்ஸ்ஸியா இருந்தீங்கன்னு..” அவ்வளவு நேரம் அசோக்கிடம் இருந்த கிண்டல் இப்போது நந்தினியிடம்.

“அப்டிலாம் ஒண்ணுல்ல.. அவர் இறந்த விஷயத்தையே யாரும் எங்கிட்ட சொல்லல.. உன் அப்பா தவறுனது நெஜமாவே எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்தது..!! குடும்பத்தலைவர் இந்த மாதிரி திடீர்னு போயிட்டா.. அந்த குடும்பத்தோட நெலமையும் ரொம்ப கஷ்டந்தான்..!! ஆமாம்.. நீதான் எஞ்சினியரிங் படிச்சிருக்கேல.. எங்கயாவது வேலைக்கு போகலாம்ல..?”

“போயிட்டுத்தான் இருக்கேன்.. போன வருஷத்துல இருந்து போறேன்.. ஆனா.. சம்பளம்தான் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல..”

“ஓஹோ..?? மெக்கானிக்கல் இஞ்சினியர்தான நீ..? எங்கிட்ட வா.. எங்க பேக்டரில நல்ல வேலை போட்டு தர்றேன்..!!”

“பேக்டரிலயா..? என்ன.. ட்ரில் ஓட்டனுமா..??” நந்தினி எரிச்சலாக கேட்டவிதம், அசோக்குக்கு சிரிப்பை வரவழைத்தது. சிரித்தான்.

“ஹாஹாஹாஹா..!!”

“அதுலாம் என்னால முடியாது.. பொண்ணா பொறந்துட்டு.. ஏன்டா மெக்கானிக்கல் படிச்சோம்னு இப்போ ஃபீல் பண்றேன்..!! எதாவது சாஃப்ட்வேர் லைன்ல போயிருந்தாவது.. இந்நேரம் கை நெறைய சம்பாதிச்சுட்டு இருந்திருப்பேன்..!!”

“ஹாஹா.. பரவால விடு.. என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. உன் பணப்பிரச்னை எல்லாம் சால்வ் ஆயிடும்..!!”

புன்னகையுடன் பட்டென சொன்ன அசோக், ஒருமாதிரி கண்களை இடுக்கி நந்தினியின் விழிகளையே கூர்மையாக பார்த்தான். நந்தினியால் இப்போது ஏனோ அவனுடைய பார்வையை நேரிடையாக சந்திக்க முடியவில்லை. அந்த பார்வையில் இருந்த வசீகரம்.. அவளுடைய மனதை ஏதோ செய்ய.. பார்வையை தாழ்த்தி.. தலையை கவிழ்த்துக் கொண்டாள். சற்றே கம்மலான குரலில் கேட்டாள்.

“உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னு சொன்னீங்க..?”

“ம்ம்.. ஆமாம்.. இஷ்டம் இல்லைதான்..!! கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னுதான் இருந்தேன் நந்தினி..!! டாடிகிட்ட இருந்து ரொம்ப ப்ரெஷர்.. அதுவும் அந்த பொண்ணுக மேட்டர் தெரிஞ்சப்புறம்.. ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு..!! இப்போவும் இந்தக்கல்யாணம் வேணாம்னு என்னால அடம்புடிக்க முடியும்.. ஆனா, டாடி ரொம்ப மனசு உடைஞ்சு போயிடுவாரு..!! வேற எவளாவது இருந்திருந்தா.. அவர் மனசு உடைஞ்சாலும் பரவால்லைன்னு என் முடிவுல ஸ்ட்ராங்கா இருந்திருப்பேன்..!! ஆனா.. அவர் பாத்திருக்குற பொண்ணு நீன்னு தெரிஞ்சப்புறந்தான்.. சின்னதா ஒரு யோசனை..!! ஒரு டீல் பேசி பாக்கலாம்னு தோணுச்சு.. அதுக்கு நீ ஒத்துக்கிட்டா கல்யாணம்..!! இல்லைன்னா.. டாடியோட மனசை நோகடிக்கிறதை தவிர எனக்கு வேற வழி இல்லை..!!”

“டீலா..?? என்ன டீல்..??” நந்தினி குழப்பமாய் கேட்டாள். அசோக் சிலவினாடிகள் யோசித்துவிட்டு, பின் தெளிவாக சொன்னான்.

“ஒரு புருஷனா நான் உன்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டேன்..!! அதே மாதிரி.. ஒரு பொண்டாட்டியா நீ எந்த வகைலயும் என்னை கட்டுப்படுத்த கூடாது..!! தேட்ஸ் த டீல்..!!”

அசோக் சொல்லிவிட்டு அமைதியாக நந்தினியின் முகத்தையே பார்த்தான். அவன் சொன்ன வார்த்தைகளையும், அந்த வார்த்தைகளின் அர்த்தத்தையும், அந்த அர்த்தத்தின் முழு வீரியத்தையும் கிரஹித்துக் கொள்ள நந்தினிக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது. யோசித்தாள்.

“உ..உங்களை கட்டுப்படுத்த கூடாதுனா..?”

“என் விருப்பத்துக்கு குறுக்க நிக்க கூடாது.. என் சந்தோஷத்துக்கு தடையா இருக்க கூடாது.. என் நடவடிக்கைகளை பாத்து ஏன் எதுக்குன்னு கேள்வி கேக்க கூடாது..!! மொத்தத்துல.. நான் இப்ப எப்படி இருக்குறனோ.. கல்யாணத்துக்கு அப்புறமும் இதே மாதிரி என்னை இருக்க விடனும்..!!” அசோக் சொல்ல நந்தினி அதிசயித்து போனாள். ‘என்ன மாதிரி ஒரு புத்திசாலித்தனமான, விவகாரமான திட்டம் இவனுக்குள்..?’

“ஓ..!! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. இல்ல..?? அப்பாவையும் சமாதானம் பண்ணுன மாதிரி ஆச்சு.. உங்களோட இந்த ப்ளேபாய் லைஃபையும் மாத்திக்க தேவையில்ல.. அப்டித்தான..?? சும்மா சொல்ல கூடாது.. என்னதான் இருந்தாலும் நீங்க பிசினஸ்மேன்ல.. அதான்..!!”

“பாராட்டுறது இருக்கட்டும்.. உனக்கு இந்த யோசனை பிடிச்சிருக்கா..?”

“ஒரு பொம்மை கல்யாணம் மாதிரி.. இல்ல..? ஊர் உலகம் முன்னாடி நான் உங்க பொண்டாட்டி.. ஆனா நெஜத்துல எனக்கு எந்த உரிமையும் இல்ல..!!”

“ஆ..ஆமாம்..”

“சும்மா பேருக்கு தாலியை கட்டி.. உப்புக்கு சப்பாணி மாதிரி.. உங்க வீட்ல ஒரு மூலைல என்னை உக்கார வைக்க போறீங்க..? அப்டித்தான..?”

“ச்சேச்சே.. என்ன பேசுற நீ..?? ஏன் அப்டிலாம் நெனைக்கிற..??”

“பின்ன.. எதுவும் சொல்றதுக்கு எனக்கு உரிமை இல்லைன்னா என்ன அர்த்தம்..?”

“பொண்டாட்டின்ற உரிமைதான் இல்லைன்னு சொன்னேன்.. ஒரு பிரண்டா உரிமை எடுத்துக்கலாம்..!!”

“ஹாஹா.. பிரண்டா..?? நீங்களும்.. நானுமா..??”

“ஏன்.. இருக்க கூடாதா..??”

“ம்ம்.. கேக்குறதுக்கு காமடியா இருக்கு..!!”

“காமடியா இருந்தா.. வீட்டுல போய் பொரண்டு பொரண்டு சிரி.. இப்போ என் டீல் உனக்கு ஓகேவா இல்லையான்னு சொல்லு..!!”

“இல்லைன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க..?”

“நேரா டாடிட்ட போய்.. அவர் என்ன வேணா பண்ணிக்கட்டும்னு.. இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லிடுவேன்.. சிம்பிள்..!!”

அசோக் சொல்லிவிட்டு புன்னகைக்க, நந்தினி இப்போது சற்றே நிதானித்தாள். அவளுடைய மனதில் சில குழப்பமான எண்ணங்கள்..!! ‘இவனுடைய வார்த்தைகளில் ஒரு உறுதி தெரிகிறது.. இதற்கு நான் சம்மதிக்காவிட்டால் இந்த கல்யாணம் நடக்காது..!! கல்யாணம் நடக்காவிட்டாலும் மஹாதேவன் எனது குடும்பத்திற்கு செய்யும் உதவிகளை செய்து கொண்டுதான் இருப்பார்.. ஆனால் மனதில் ஒரு மகிழ்ச்சி இல்லாமலே செய்வார்.. அதுவுமில்லாமல் அத்தகைய உதவியை பெறுவதில் எங்களுக்கும் ஒரு தயக்கமிருக்கும்..!! அம்மாவை பற்றி சொல்லவே தேவையில்லை.. இந்தக்கல்யாணம் நின்றால் நொந்து போய் விடுவாள்..!! தங்கைக்கு எந்த கவலையும் இருக்காது.. ஆனால் இன்னும் இரண்டு வருடங்கள் சென்று அவளுக்கு ஓரளவு முதிர்ச்சி ஏற்படும்போது.. அவளுக்கும் மனதில் அமைதி இருக்கப் போவது இல்லை..!! அதைவிட இந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டால், நிறைய பேருக்கு நிம்மதி.. பிரச்சினை மொத்தமும் எனக்கு மட்டுமே இருக்கப் போகிறது.. கணவன் கண்ட பெண்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதை கண்டுகொள்ளாமல் இருப்பது எந்த பெண்ணுக்குமே கொடுமையான விஷயம்தான்..!! ஆனால்.. இவன் என்னுடைய கணவன் என்று நினைத்ததால்தானே பிரச்சினை.. இவன் சொல்வது போல ஒரு நண்பனாக இவனை நினைத்து கொள்ளலாமே..? ஒரு தோழியாக இருந்து இவனது கெட்ட பழக்கங்களை மாற்ற முயலலாமே..?’

எல்லா யோசனைகளுமே மொத்தமாய் ஒரு சில வினாடிகள்தான். இதில் பல விஷயங்கள் அவள் ஏற்கனவே யோசித்திருந்ததுதான். யோசித்து முடித்த நந்தினி ஒரு முடிவுக்கு வந்தவளாய் லேசாக தொண்டையை செருமிக்கொண்டு சொன்னாள்.

“இங்க பாருங்க.. இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு.. யார்கிட்டயும் போய் சொல்லக் கூடிய நெலமைல நான் இல்ல..!! எனக்கும், என் குடும்பத்துக்கும் இந்த கல்யாணம் நடக்குறது ரொம்ப ரொம்ப அவசியம்..!! இந்தக் கல்யாணம் நடக்குறதுக்கு நீங்க என்ன கண்டிஷன் போட்டாலும்.. எனக்கு சம்மதம்தான்..!!”

“அப்போ உனக்கு டீல் ஓகே..??”

“ம்ம்.. ஓகே..!!” நந்தினி அமைதியாக சொல்ல, அசோக்கின் முகத்தில் ஒருவித வெற்றிப் புன்னகை.

“தேங்க்ஸ் நந்தினி..!! தேட்ஸ் ஆல்.. இதை பேசுறதுக்காகத்தான் உன்னை இங்க வர சொன்னேன்..!! உனக்கு வேற ஏதாவது டவுட்டு இருக்கா.. எங்கிட்ட ஏதாவது கேக்கணுமா..??”

“இ..இல்ல..”

“அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்..”

“என்ன..?”

“இந்த டீல் விஷயம்.. நமக்குள்ளதான் இருக்கணும்.. யார்கிட்டயும் நீ சொல்லக் கூடாது..”

“இல்ல.. சொல்லலை..!!” நந்தினி சொன்னதும் அசோக் சேரில் இருந்து எழுந்து கொண்டான்.

“கூல் தென்..!! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நந்தினி.. நான் கெளம்புறேன்..!! வில் மீட் யு அட் மணமேடை..!!”

Comments

Scroll To Top