ஆண்மை தவறேல் – 34

(Tamil Hot Sex Stories - Aanmai Thavarael 34)

Raja 2013-12-16 Comments

“ஓ..!! அப்போ தப்பெல்லாம் என் மேலதான்னு சொல்றியா..??”

“ஆமாம்.. எல்லா தப்பும் உங்க மேலதான்..!!” நந்தினி சீற்றமாக சொன்னாள்.

அவ்வளவுதான்..!! அசோக் பொறுமை இழந்தான்..!! அந்த டெய்சி உண்டாக்கிய எரிச்சல்.. அவள் ஏற்படுத்திய சூழ்நிலையால் அவனுக்கு கிடைத்த அவமானம்.. செய்யாத தவறுக்கு குற்றம் சாட்டப்பட்ட ஆத்திரம்..!! இவைகளோடு இரண்டு வாரங்களாக நந்தினி அவனிடம் காட்டிய உதாசீனம்..!! எல்லாம் ஒன்றாய் சேர்ந்துகொண்டு அவனை நிதானமிழக்க செய்தன..!! அவனும் நிதானமிழந்தான்..!! மனைவியை நெருங்கி, அவளுடைய முகத்துக்கு நெருக்கமாக தனது முகத்தை கொண்டு சென்று, அவளுடைய கண்களை கூர்மையாக பார்த்தவாறு கேட்டான்.

“நல்லா யோசிச்சு சொல்லு.. நான்தான் எல்லா தப்பும் செஞ்சேனா..?? நீ எந்த தப்பும் பண்ணலையா..??” அவனுடைய கேள்வியில் சற்றே திகைத்துப்போன நந்தினி,

“நா..நான் என்ன தப்பு செஞ்சேன்..?” என்று தடுமாறினாள்.

“நல்லா யோசி நந்தினி.. நல்லா யோசி..!! நீ எந்த தப்புமே பண்ணலை..??”

அசோக்கின் கண்கள் நந்தினியையே குரூரமாய் பார்த்துக் கொண்டிருக்க, நந்தினியின் மூளையோ பின்னணியில் எதையோ யோசித்தது. அவளுடைய மூளை யோசித்து அவளுக்கு உரைத்த விஷயம், நந்தினியை உடனே பக்கென அதிர வைத்தது..!! அவளுடைய தவறாக அவன் எதை குறிப்பிடுகிறான் என்று ஒரு சில நொடிகளிலேயே அவளுக்கு புரிந்து போனது..!! அது புரிந்து போனதும்.. அதுவரை வீராவேசமாக பேசிக்கொண்டிருந்தவள்.. பட்டென வாயடைத்துப் போனாள்..!! ஆத்திரத்தில் முறுக்கிக் கொண்டிருந்த அவளுடைய உடல், ஆற்றல் தீர்ந்து விட்டாற்போல் உடனே தளர்ந்து போனது..!! அசோக்கையே ஒருமாதிரி நம்பமுடியாத பார்வை பார்த்தபடி.. உறைந்து போய் பரிதாபமாக நின்றிருந்தாள்..!!

அசோக்கின் முகத்தில் இப்போது ஒருவித குரூர திருப்தி..!! அத்தனை நாளாய் அவனை நோகடித்துக் கொண்டிருந்தவளை.. இப்போது வாயடைக்க செய்தாயிற்று என்ற திருப்தி..!! சிகரெட் பாக்கெட் தேடி.. ஒரு சிகரெட்டை உருவி எடுத்து.. வாயில் பொருத்தி.. பற்ற வைத்துக் கொண்டான்..!! வளைய வளையமாய் புகை விட்டான்..!! செயலற்றுப்போய் நின்றிருந்த நந்தினி, இப்போது உடைந்துபோன குரலில் கேட்டாள்.

“நீங்க இப்படி ஆனதுக்கு.. நான் காரணம் இல்லைன்னு அன்னைக்கு சொன்னீங்க..??”

“ஆமாம்.. சொன்னேன்..!! உன் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு அப்படி சொன்னேன்..!! ஆனா உனக்கு..??? அடுத்தவங்க மனசை பத்தித்தான் எந்த அக்கறையும் இல்லையே..?? எப்படி வேணா குத்தி கிழிக்கலாம்னுதான நெனைக்கிற..?? அதான்.. எனக்கும் வேற வழி இல்லை..!!”

“ஓ..!!”

நந்தினிக்கு தலை சுற்றுவது போலிருந்தது. தலையை பிடித்துக் கொண்டாள்.

“அன்னைக்கு என்ன சொன்ன..?? நான் தெனமும் ஒருத்தியோட படுத்து எந்திரிக்கிறவனா..?? பிரம்மாதம்..!! ஆமாம்.. நான் தெனமும் ஒருத்தியோட படுக்குறவன்தான்.. ஆனா நான் மொதமொதலா ஒரு பொண்ணை தேடிப்போக காரணமே நீதான்டி..!! அந்த ஆல்பத்துல உன் போட்டோவும் சேத்துக்கணுமா..?? சூப்பர்..!! ஆமாம்.. நான் ஆல்பம் போட்டேன்தான்.. ஆனா அப்படி ஒரு ஆல்பம் போட என்னை தூண்டுனதே.. நீ பேசுன வார்த்தைதாண்டி..!!”

“ம்ம்..”

நந்தினிக்கு இப்போது விழியோரம் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. அவளுடைய உதடுகள் படபடக்க, அவற்றை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள்.

“இன்னைக்கு நான் உன் புருஷன் ஆயிட்டேன்னதும்தான இந்த குதி குதிக்கிற..?? கேவலமானவன், கேடுகெட்டவன்ற மாதிரி பேசுற..?? சப்போஸ்.. நாம லைஃப்ல திரும்ப மீட் பண்ணாமலே போயிருந்தா.. நீ ஆறு வருஷம் முன்னாடி சொன்ன வார்த்தையால.. நான் என்ன ஆனேன், எக்கேடு கெட்டு போனேன்னாவது ஒரு நிமிஷம் நீ யோசிச்சிருப்பியா..???”

“…………………………….”

நந்தினியிடம் இப்போது பேச்சு நின்று போனது. நெஞ்சு குமுற ஆரம்பிக்க, அழுதுவிடக் கூடாது என வாயை அழுத்தமாக மூடிக் கொண்டாள்.

“என்னை பத்தி எல்லாம் சொல்லித்தான் நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்.. கல்யாணத்துக்கு அப்புறம் நான் எப்படி இருப்பேன்னு கண்டிஷன் போட்டுத்தான்.. உன் கழுத்துல தாலியே கட்டுனேன்..!! நான் செஞ்ச ஒரே தப்புனா.. அது அன்னைக்கு மொட்டை மாடில நான் நடந்துக்கிட்டதுதான்.. அதுவும் என்னை அறியாமலே நான் செஞ்ச தப்பு.. உன்னோட உதாசீனம்தான் அந்த தப்புக்கு தண்டனைன்னா.. இட்ஸ் ஓகே.. நான் ஏத்துக்குறேன்.. எனக்கு ஒண்ணுல்ல..!!”

“…………………………….”

“ரெண்டு வாரமா நான் உன் நெனைப்பாவேதான் இருந்தேன்.. வேற எவ நெனைப்பும் என் மனசுல இல்ல.. எல்லாத்தையும் விட்ரலாமான்னு கூட நேத்துல இருந்து யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்..!! ஆனா நீ..??? நீ என்னை புரிஞ்சுக்கலை.. உனக்கு என் மேல உண்மையான அன்பு இல்ல.. இருந்திருந்தா.. இத்தனை நாளா என்னை உதாசீனப் படுத்திருக்கமாட்ட.. இங்க என்ன நடந்ததுன்னு நான் அவ்வளவு கெஞ்சி கூத்தாடி சொல்லியும்.. என்னை நம்பமாட்டேன்னு சொல்லிருக்க மாட்ட..!!”

“…………………………….”

“நல்லா சொல்றேன் கேட்டுக்கோ..!! நான் மாற மாட்டேன்.. இப்படியேதான் இருப்பேன்.. தெனமும் ஒருத்தியோட படுத்து எந்திரிப்பேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.. போ..!!”

அசோக் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு அமைதியானான். நந்தினி செய்வதறியாது, அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள். அசோக் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மை அவளுடைய மனசாட்சியை உறுத்தியது. ‘இவன் சொல்வது உண்மைதானே..?? எல்லாவற்றையும் என்னால்தானே இவன் ஆரம்பித்தான்..?? என்னுடைய கணவன் என்பதால்தானே, இன்று இவன் இப்படி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சீறுகிறேன்..?? இல்லாவிட்டால் இவனை பற்றிய சிந்தனையே எனக்கு வந்திருக்காதே..?? இத்தனை நாள் என் பேச்சிற்கு இவனிடம் ஒரு மதிப்பு இருந்தது.. இனி அதுவும் இருக்காதே.. இனி நான் என்ன செய்ய போகிறேன்..??’

யோசிக்க யோசிக்க.. நந்தினியின் இதயம் வெடித்து சின்னாபின்னமாய் சிதறுவது மாதிரி அவளுக்கு தோன்றியது..!! எல்லா கதவுகளுமே சாத்தப்பட்டு, அவளது வாழ்க்கை இருண்டு போன மாதிரியாக ஒரு உணர்வு..!! சில வினாடிகள் சிலை மாதிரி நின்றிருந்த நந்தினி, அப்புறம் எதுவும் பேசாமல் திரும்பி நடந்தாள். தலையை குனிந்தவாறே, ஒரு எந்திரம் போல நடந்து சென்று அந்த அறையை விட்டு வெளியேறினாள்..!!

அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கற்பகம் அந்த அறைக்குள் நுழைந்தாள். அசோக்கோ அப்போதுதான் சிகரெட்டை அணைத்துவிட்டு, இன்னும் படபடக்கும் இதயத்துடனே இருந்தான். கற்பகம் உள்ளே நுழைந்ததும் அவளை ஏறிட்டு பார்த்தான். அவளுடைய முகத்தில் கொப்பளிக்கும் ஆத்திரத்தை கண்டவன், சற்றே குழப்பத்துடன்

“சொ..சொல்லு கற்பு..!!” என்றான்.

“நீயென்ன மனுஷனா.. இல்ல மிருகமாடா..??” கற்பகம் சீறினாள்.

“ஹேய்.. உனக்கு என்னாச்சு இப்போ..??”

“பின்ன என்னடா..?? பண்ற தப்பெல்லாம் நீ பண்ணிட்டு.. ஒரு அப்பாவி பொண்ணை இப்படி நோகடிச்சு அனுப்புறியே..?? உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா..??”

“யாரு.. அவ அப்பாவியா.. என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத..!!”

“தெரிஞ்சுதாண்டா பேசுறேன்.. நீ ஆபீசுக்குள்லயே கண்டவளோட கூத்தடிப்ப.. அதை பாத்து அவ கோவப்பட்டா.. அது தப்பா..?? கட்டுன புருஷனை இன்னொரு பொண்ணோட பாத்தா.. எந்த பொம்பளைக்கும் கோவம் வரத்தாண்டா செய்யும்..!!”

“ஐயோ.. என்ன கற்பு நீ..?? நீயும் என்னை நம்பலையா..??”

“போச்சு அசோக்.. உன் மேல இருந்த நம்பிக்கை போச்சு..!! எப்போ உன் பொண்டாட்டிகிட்ட ‘நான் இப்படித்தான் இருப்பேன்.. உன்னால என்ன செய்ய முடியும்டி’ன்னு எகத்தாளமா சொன்னியோ.. அப்போவே உன் மேல இருந்த நம்பிக்கை.. நல்ல அபிப்ராயம்.. எல்லாம் போச்சு..!! இத்தனை நாளா உன்னை என் ஃப்ரண்டா நெனச்சதுக்கு வெக்கப்படுறேன்.. இனி நான் ஜஸ்ட் உன் பி.ஏ..!! அவ்ளோதான்..!!”

கற்பகம் படபடவென பொரிந்து தள்ளிவிட்டு வெளியேற, அசோக் அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தான். Orinaserkai Tamil Hot Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top