நெஞ்சோடு கலந்திடு – 35

(Tamil Sex Story - Nenjodu Kalanthidu 35)

Raja 2014-02-05 Comments

“இவன்கிட்ட இப்படி கேட்க கூடாதுங்க.. வேற மாதிரி கேக்கணும்..”

“வேற மாதிரின்னா எப்படி..?” அசோக் அக்காவை முறைத்தான்.

“மூணு வருஷம் திவ்யாவை விட்டு இருந்துடுவியா..?”

“ஏன்..? இருந்தா என்ன..?”

“ப்ச்.. கேட்டதுக்கு பதில் சொல்லு..!!”

“என்ன சொல்ல சொல்ற..? அவ கொரங்கு மூஞ்சியை பாக்க சகிக்காமத்தான் நான் ஆன்சைட்டே போறேன்.. போதுமா..??”

“அடப்பாவி..!!”

சித்ரா இங்கே வாய்பிளக்க, உள்ளே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த திவ்யாவுக்கு சுருசுருவென இருந்தது. ‘ம்ஹூம்.. இதை இப்படியே விடக் கூடாது..!! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்..?’ திவ்யா ஓரிரு விநாடிகள்தான் யோசித்திருப்பாள். உடனே துணிச்சலாக ஒரு முடிவுக்கு வந்தாள். பின்னிய கூந்தலை தூக்கி பின்னால் போட்டுவிட்டு விருட்டென்று எழுந்தாள். தன் அறையில் இருந்து வெளிப்பட்டு ஹாலை நோக்கி ஒரு வீர நடை நடந்து வந்தாள்.

தூரத்தில் திவ்யா முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு வருவதை கவனித்த அசோக் பதறிப் போனான். ‘இவ்வளவு நேரம் உள்ளேதான் இருந்தாளா இவள்..? ஐயையோ..!!’ பதறியவன், கிசுகிசுப்பான குரலில் அக்காவிடம் கேட்டான்.

“என்னக்கா.. வெளில போயிருக்கான்னு சொன்ன..?”

“ம்ம்.. சும்மா.. பொய் சொன்னேன்..!!”

சித்ரா கூலாக சொல்லிவிட்டு காபியை உறிஞ்சினாள். அதற்குள் திவ்யா ஹாலுக்குள் நுழைந்திருந்தாள். வந்தவள் நேராக சென்று சித்ராவுக்கு அருகே மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டாள். அசோக்கை ஒருமுறை ஏறிட்டு பார்த்து, அப்புறம் ‘ம்ஹ்ம்..’ என்று முகத்தை சிலுப்பிக் கொண்டாள்.

“குடிச்சது போதும் அண்ணி.. குடுங்க..!!” என்று சித்ராவின் கையில் இருந்த காபியை பறித்தாள்.

“ஏய்.. ஏய்.. எச்சிடி இது..” என்று சித்ரா பதறினாள்.

“பரவால.. குடுங்க..!!”

கேஷுவலாக சொன்ன திவ்யா, சித்ரா சாப்பிட்ட மிச்ச காபியை வாங்கி உறிஞ்ச.. அசோக்கும், கார்த்திக்கும் அதிர்ந்து போய்.. வாயை பிளந்தார்கள்..!! ‘காண்பதெல்லாம் கனவா நனவா..?’ என குழம்பிப் போனவர்கள், கண்ணிமைக்க கூட மறந்து போய் விழிகள் விரிய அமர்ந்திருந்தார்கள்.

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு கார்த்திக் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தான். மற்ற மூவரும் பேசிக்கொண்டார்கள். ஆனால்.. அசோக்கும், திவ்யாவும் ஒருவருக்கொருவர் நேரிடையாக பேசிக்கொள்ளவில்லை. இருவரும் சித்ராவிடம்தான் பேசினார்கள். திவ்யாதான் முதலில் ஆரம்பித்தாள்.

“என்ன ஆச்சு அண்ணி உங்க தம்பிக்கு..? கோணவாயன் கொட்டாவி விட்ட மாதிரி உக்காந்திருக்கான்..??”

“தெரியலையே திவ்யா.. எதையோ பாத்து பயந்தவன் மாதிரி இருக்கான்..”

“பயமா.. எனக்கா..? அதுலாம் ஒன்னும் கெடயாது..” அசோக் இடையில் புகுந்து சொன்னான்.

“வேற என்னதான் பிரச்னையாம் அவனுக்கு..?”

“எனக்கு என்ன பிரச்னை..?”

“அப்புறம் எதுக்கு ஊரை விட்டு ஓடுறான்னு கேளுங்க அண்ணி..”

“ஹாஹா.. ஆன்சைட் போறதுக்கு பேரு.. ஊரை விட்டு ஓடுறதா.. கேளுக்கா..!!”

“அவன் எங்க வேணா போகட்டும்.. எதுக்கு என் மூஞ்சியை பாக்க சகிக்காம போறதா சொல்லணும்..? அதுவும் கொரங்கு மூஞ்சியாம்.. என் மூஞ்சியை பாத்தா கொரங்கு மாதிரியா இருக்கு..? மொதல்ல அவன் மூஞ்சியை ஒழுங்கா கண்ணாடில பாக்க சொல்லுங்க அண்ணி..!!” Anni Tamil Sex Story

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top