அசோக் காலிங் அசோக் – 1

(Tamil Sex Story - Ashok Calling Ashok 1)

Raja 2014-03-03 Comments

Tamil Sex Story – கொஞ்சம் SCI-FI, கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம், நிறைய காமடியுடன் இந்தக்கதை இருக்கும். ரிமோட்டில் இருக்கும் ரீவைண்ட் பட்டன் போல, லைஃபுக்கும் ஒரு ரீவைண்ட் பட்டன் ஒருவனுக்கு கிடைத்தால்..??? அதை நகைச்சுவையாகவே சொல்ல முற்பட்டிருக்கிறேன். லாஜிக் என்பதை மருந்துக்கு கூட எதிர்பாராதீர்கள்..!! ஜாலியாக படித்துவிட்டு, உடனே மறந்து விடக் கூடிய ஒரு டைம் பாஸ் கதையாக இருக்கும்..!! நகைச்சுவை விரும்புவர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்..!! படித்து முடித்ததும் பிடித்திருக்கிறதா என்றும் எனக்கு சொல்லுங்கள்.. நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்

1

1

எபிஸோட் – I

சூரியபகவான் டென்ஷனாகி கொதித்துக் கொண்டிருந்தார். காலையிலிருந்து நடுவானம் வரை நகர்ந்து வந்திருந்தவர், தன் உச்சபட்ச உக்கிரத்தை உலகிடம் காட்டிக் கொண்டிருந்தார். சித்ரலேகா (ஐந்து மாதமாக என் ஆசைக்காதலி) ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டிருந்தாள். நான் (அவளது ஆசைக்காதலன் வீணாப்போன அசோக்) பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனது இரண்டு கைகளாலும் அவளது இடுப்பை இரண்டு புறமும் பிடித்திருந்தேன். சித்ரலேகாவுக்கு சிறுத்த சிக்கென்ற இடுப்பு..!! ஆனால்.. இடுப்புத்தான் சிறுத்துப் போயிருக்குமே ஒழிய, முன்புறமும் பின்புறமும்… ம்ம்ம்ம்.. போங்க பாஸ்.. எனக்கு வெக்கமா இருக்கு..!!

அடித்த வெயிலுக்கு எனது உடம்பில் வியர்வை ஊறி கசகசத்தது. எனது வியர்வைதான் கசகசப்பாய் தோன்றியதே ஒழிய, எனக்கு முன்னால் அமர்ந்திருந்த லேகாவின் வியர்வை கவர்ச்சியாகவே என் கண்களுக்கு காட்சியளித்தது. சுடிதார் மறைக்காத அவளது முதுகில், முத்து முத்தாய் வியர்வை துளிகள் பூத்திருந்தன. சூரியக்கதிர்கள் அந்த வியர்வை முத்துக்களில் பட, வைரச் சிதறல்களாய் அவை மின்னின.

நான் என் முகத்தை அவளது முதுகுக்கு அருகில் எடுத்து சென்றேன். மூக்கை அந்த வியர்வை துளிகளுக்கு அருகில் வைத்து ஆழமாக சுவாசித்தேன். இவளுடைய வியர்வை கூட இவ்வளவு வாசமாயிருக்கிறதே என்று வியந்தேன். நான் அந்தமாதிரி வாசம் பிடித்துக் கொண்டிருக்கும்போதே, லேகா எரிச்சலாக சொன்னாள்.

“ப்ச்.. முதுகு அரிக்குதுன்னு இப்போ உன்கிட்ட சொன்னேனா..? சொறியுற..?”

“இல்ல.. எனக்கு மூக்கு அரிச்சுது லேகா.. அதான்..”

“ம்ம்ம்ம்… ஒன்னும் வேணாம்.. கொஞ்சம் தள்ளி உக்காரு..!! ஏற்கனவே நீ என் இடுப்பை புடிச்சிருக்குறதே எனக்கு ஒரு மாதிரி இருக்கு..!!”

“ஏய்.. என்ன.. சும்மா இடுப்பை புடிச்சதுக்கே இப்படி சலிச்சுக்குற.. அவன் அவன் லவ் பண்ற பொண்ணை.. எதை எதையோ புடிக்கிராணுக..?”

“எதை புடிக்கிராணுக..?”

“நான் புடிச்சுடுவேன்.. உன் ஸ்கூட்டி புதுசா இருக்கேன்னு பாக்குறேன்..”

“புடிக்கிறதுக்கும் புது ஸ்கூட்டிகும் என்ன சம்பந்தம்..?”

“நான் புடிச்சதும் நீ ஷாக்காகி.. ஸ்கூட்டியை கொண்டு போய்.. முன்னாடி போற லாரிக்கு முத்தம் கொடுத்துட்டேன்னா..? அப்புறம் உன் ஸ்கூட்டிக்கு மூக்கு சப்பையாயிடும்..!! பரவாலையா.. புடிக்கவா..?”

2

“அடச்சீய்.. தள்ளி உக்காரு அசோக்.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் புடிச்சுக்கலாம்..!!”

அவள் அந்த மாதிரி எரிச்சலாக சொல்ல, நானும் சற்று கடுப்பானேன். அவளுடைய இடுப்பில் இருந்த கைகளை மெல்ல விலக்கிக் கொண்டேன். முகத்தை திருப்பி சாலையில் போகிற வருகிற வாகனங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு ஐந்து வினாடிகள் கூட ஆகியிருக்காது. லேகா ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள். தலையை என்பக்கமாக திருப்பியவள், ஹெல்மட் க்ளாஸை மேலே ஏற்றி விட்டுக் கொண்டாள். காதலும், போதையும் கலந்த மாதிரியான ஒரு குரலில் சொன்னாள்.

“மத்ததைத்தான கல்யாணத்துக்கு அப்புறம் புடிச்சுக்கலாம்னு சொன்னேன்..? இடுப்பை இப்போ புடிச்சுக்கோ.. பரவால..”

சொல்லிவிட்டு அவள் அழகாக புன்னகைக்க, இப்போது நானும் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தேன். இரண்டு கைகளாலும் அவளது இடுப்பை இறுகப் பற்றினேன். அவள் மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்து, மிதமான வேகத்தில் செலுத்தினாள். இந்த மாதிரி காதலியின் பின்னால் அமர்ந்து கொண்டு, வண்டியில் பயணம் செய்வதே இணையில்லா இன்பம் என்று தோன்றியது. அவளது இடுப்பை பிடித்துக் கொண்டு.. சாலையின் மேடு பள்ளங்களுக்கு அவள் மேலே சாய்ந்துகொண்டு.. எப்போதடா சடன் ப்ரேக் அடிப்பாள் என்று ஏங்கிக்கொண்டு..!! சுகமான பயணம்..!!

இப்போது எதற்கு இந்த சுகப்பயணம் என்று தெரிந்து கொள்வதற்கு முன், கொஞ்சம் என்னைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நான் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் மூன்றாமாண்டு படிக்கிறேன். லேகாவை எனக்கு ஒரு வருடமாகத்தான் தெரியும். வேறொரு கல்லூரியில் இரண்டாண்டுகள் படித்திருந்தவள், அங்கிருந்து ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு, போன வருடம் எங்கள் கல்லூரியில் வந்து சேர்ந்தாள்.

அவள் வந்த முதல் நாளன்று.. என்றைக்கும் எனக்கு அருகே அமர்ந்திருக்கும் ஏழுமலைக்கு, அன்று அதிர்ஷ்டவசமாக வாந்தி பேதி புடுங்கிவிட, காலியாக இருந்த இருக்கையில் இந்த தேவதை வந்து அமர்ந்தாள். ஹலோ சொன்னாள். கை குலுக்கினாள்.

அடுத்த நாள் வந்து, ‘என் இடம்..’ என்று ஏக்கமாக சொன்ன ஏழுமலையை நான் எட்டி எட்டி உதைத்து விரட்டினேன். எனக்கு அருகிலேயே லேகாவுக்கு நிரந்தர இடம் ஒன்று அமைத்துக் கொண்டேன். அவளுடைய மனதுக்குள்ளும் எனக்கு ஒரு நிரந்தர இடம் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டேன்.

லேகா கூடிய விரைவிலேயே என்னிடம் மயங்கினாள். என்னுடைய அழகு (சிலர் என் முகத்தில் காறித் துப்பியிருக்கிறார்கள்.. அது இந்த கதைக்கு தேவையில்லாதது..), என்னுடைய அறிவு (எட்டே எட்டு அரியர்தான்..), என்னுடைய வீரம் (பல்லியைப் பாத்தா மட்டும் கொஞ்சம் பயம்..), என்னுடைய நகைச்சுவை உணர்வு (மொக்கைச்சாமி என்று எனக்கு ஒரு பட்டப் பெயர் கூட உண்டு..)..!! இதெல்லாம் பார்த்து லேகா என்னிடம் சொக்கிப் போனாள். ஐந்து மாதங்கள் முன்பு, நான் இல்லாவிட்டால் அவளுக்கு வாழ்க்கையே இல்லை என்று என் காலில் விழுந்து கதறினாள் (ஹலோ.. அதான் பொய் சொல்றேன்னு தெரியுதுல.. அடுத்த பாரா போங்க.. ப்ளீஸ்..). நானும் ‘போ.. போ.. பொழைச்சுப்போ..’ என்று அவளை காதலிக்க ஒத்துக் கொண்டேன் (ம்ம்ம்ம்.. சொன்னா கேட்க மாட்டீங்களா..?).

3

இப்போது என்னுடைய பேக்ரவுண்டு (ஹலோ.. இதெல்லாம் உண்மைதாங்க..). நான் பிறந்தது கடலூருக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். விவசாயம்தான் எங்கள் குலத்தொழில். அம்மா, அப்பாவுக்கு ஒரே பிள்ளை. ‘அறிவு கெட்டவள்’ என்று அப்பாவிடம் அடிக்கடி திட்டு வாங்கினாலும், அம்மா மிகவும் அன்பான பெண்மணி. அவளுக்கு வாழ்க்கையில் மிகவும் பிடித்தமான ஹாபியே.. ஒப்பாரி வைப்பதுதான்..!!

டிவி சீரியல் மூலம் அழுவது பத்தாதென்று, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கண்ணீர் கொட்ட காத்திருப்பாள். சோறு கேட்டு வரும் பிச்சைக்காரனிடம் கூட, அவன் பிச்சைக்காரனான சோக கதையை கேட்டு, ஒரு பாட்டம் அழுது, மூக்கை சிந்திப் போட்டுவிட்டுத்தான் சாதத்தை தட்டில் போடுவாள்..!! என்னுடைய அப்பா… ம்ஹூம்.. அந்த ஆளைப் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். இப்போது லேகாவே அவரைப் பற்றி கேவலமாக சொல்வாள். கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..!!

“உன் அப்பா ஏண்டா இப்படி ஒரு கஞ்சப் பிசினாரியா இருக்காரு..?”

“என்ன பண்றது லேகா.. அப்பன் அமைவதெல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம்..”

“ம்ம்ம்.. இந்தக்காலத்துலலாம் ஒரு கொழந்தை பொறந்த உடனே.. அதுக்குன்னு ஒரு செல்போன் வாங்கிடுறாங்க.. அதுவும் ‘தத்தக்கா.. பித்தக்கா..’ன்னு தாத்தா பாட்டிகிட்டலாம் பேசுது..!! நீ எஞ்சினியரிங் தேர்ட் இயர் படிக்கிற எருமை மாடு.. இன்னும் இன்லான்ட் லெட்டர்ல பேசிட்டு இருக்குற..!! செல்போன் வாங்கித் தர சொல்லி உன் அப்பாவை கேட்க வேண்டியதுதான..?”

“கேட்டா வாங்கித் தந்தாத்தான..? லெட்டர் இருக்குறப்போ.. செல்போன் எதுக்குன்னு கேக்குறாரு..?”

“லெட்டர்னா போய்ச்சேர ஒருவாரம் ஆகும்.. செல்போன்னா நீ பேசுறதை உடனே அவங்க தெரிஞ்சுக்கலாம்னு சொல்ல வேண்டியதுதான..?”

“சொன்னேன் லேகா..!! ‘உடனே தெரிஞ்சுக்க வேண்டிய அளவுக்கு.. நீ என்ன உலக சமாதானம் பத்தியா பேசப்போற..? உருப்புடாத விஷயத்தை பத்தித்தான் பேசப்போற.. அதை நான் ஒரு வாரம் கழிச்சே தெரிஞ்சுக்குறேன்’னு சொல்றார்..”

“ஓஹோ..?? என் ஃப்ரண்ட்ஸ் எல்லாருமே செல்போன் வச்சிருக்காங்க.. எனக்கும் ஆசையா இருக்குப்பான்னு சொல்லிப் பாக்க வேண்டியதுதான..?”

“சொன்னேன்.. அதுக்கு அவரு.. ‘என் ஃப்ரண்ட்ஸ்லாம் பசங்களை பன்னி மேய்க்க அனுப்பிருக்கானுக.. நீயும் பன்னி மேய்க்க போறியா’ன்னு கேக்குறாரு..”

“ஐயையே..!! சரி சரி விடு.. அவரு உனக்கு வாங்கித் தர வேணாம்.. நானே உனக்கு வாங்கித் தர்றேன்..!! லவ் பண்ண ஆரம்பிச்சு அஞ்சு மாசமாச்சு.. செல்போன் இல்லாம உன்னை லவ் பண்றது ரொம்ப செரமமா இருக்கு அசோக்..!! என் ப்ரண்ட்ஸ்க வேற.. ‘உன் ஆளு ஓடஃபோன் யூஸ் பண்ணுறாரா.. ஓடாதஃபோன் யூஸ் பண்ணுறாரா..’ன்னு ரொம்ப கிண்டலடிக்கிறாளுக..” அவள் சோகமாக சொன்னாள்.

Comments

Scroll To Top