நெஞ்சோடு கலந்திடு – 34

(Tamil New Sex Stories - Nenjodu Kalanthidu 34)

Raja 2014-02-04 Comments

‘என்னாயிற்று இவளுக்கு..? ஏன் இப்படி இருக்கிறாள்..? கசக்கிப்போட்ட காகிதமாய் வந்து கிடக்கிறாளே..? என்னாயிற்று என்று கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறாள்..!! ரொம்பத்தான் நெஞ்சழுத்தம் இவளுக்கு..!! இல்லாவிட்டால், நான் அவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசியும் வாயை இறுக்க மூடிக் கொண்டிருப்பாளா..? அப்படி என்ன பிடிவாதம் இவளுக்கு..?? அழுத்தக்காரி.. ராட்சஸி..!!’

மனதுக்குள் திவ்யாவை திட்டியவாறே, ஓரமாய் கிடந்த போர்வையை எடுத்து, சித்ரா திவ்யாவுக்கு போர்த்தி விட்டாள். அவளுடைய கால்களை மென்மையாக உயர்த்தி அதனடியில் ஒரு தலையணையை திணித்தாள். அறை வாசலை நோக்கி நடந்தாள். விளக்கை அணைக்க சித்ரா கையை உயர்த்திய போதுதான், அவளுக்கு பின்னால் இருந்து ஈனஸ்வரத்தில் அந்த குரல் கேட்டது.

“அண்ணீ..!!!!!”

சித்ராவுக்கு ஒருகணம் எதுவும் புரியவில்லை. ‘எங்கிருந்து வருகிறது இந்தக்குரல்..?’ மெல்ல திரும்பி பார்த்தாள். படுக்கையில்.. உறங்கியிருந்த திவ்யா இப்போது விழிகளை திறந்திருந்தாள். ஆனால் இன்னும் அந்த விழிகள் சோர்வாகவே செருகியிருந்தன. ‘இவளா அப்படி அழைத்தாள்..?’ என சித்ரா திகைத்துக் கொண்டிருக்கும்போதே, திவ்யா மீண்டும் சித்ராவை அழைத்தாள்.

“அண்ணீ..!!!!!”

அவ்வளவுதான்..!! சித்ரா அப்படியே சிலிர்த்துப் போனாள்..!! ஜிவ்வென்று உடம்பெல்லாம் புது ரத்தம் பாய்ச்சிய மாதிரி ஒரு சிலிர்ப்பு அவளுக்கு..!! முதன்முறையாக யாரோ அவளை அப்படி அழைக்கிறார்கள்..!! இத்தனை நாட்களாய் தன்முன் வாய்திறக்காமலே இருந்த திவ்யா, முதன்முறையாக அவளை அழைக்கிறாள்.. அன்பு ஒழுக..!! அதுவும் பசியாகிப்போன கன்று ஒன்று தாய்ப்பசுவை அழைப்பது போல, ஏக்கமாக அழைக்கிறாள்..!! எப்படி இருக்கும் சித்ராவுக்கு..?? அவளுடைய கண்கள் பட்டென கலங்கிப் போயின. சிலிர்த்துப்போன உடல் இப்போது வெடவெடவென நடுங்கியது..!! அதற்குள் திவ்யா படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து..

“என்னை மன்னிச்சுடுங்க அண்ணி..!!”

என்று ஒரு கையை நீட்டி பரிதாபமாக சொல்லவும், சித்ரா அப்படியே உருகிப் போனாள். ஓடிப்போய் அவளை வாரி அணைத்துக் கொண்டாள். அழுகையை அடக்க முடியாமல், தழதழத்த குரலில் சொன்னாள்.

“ஏய்.. ச்சீய்.. என்னடி நீ..?? நீ எதுக்கு மன்னிப்பு கேக்குற..?? நீ என்ன தப்பு செஞ்ச..??”

“இல்ல அண்ணி.. நான் நெறைய தப்பு பண்ணிட்டேன்..!! யார் நல்லவங்க.. யார் கெட்டவங்கன்னு கூட புரிஞ்சுக்காம.. நெறைய தப்பு பண்ணிட்டேன்..!! எல்லாருக்கும் கஷ்டம் கொடுத்திட்டேன்..!!” சொல்லும்போதே திவ்யாவின் கண்களில் நீர் ஒழுக ஆரம்பித்தது.

3

“ப்ச்.. அதுலாம் ஒண்ணுல்ல திவ்யா..!! அழாத.. கண்ணை தொடைச்சுக்கோ ..!!” சொன்ன சித்ரா அவளே திவ்யாவின் கண்களை துடைத்தாள்.

“உ..உங்களைக்கூட இத்தனை நாளா நான் புரிஞ்சுக்கலை அண்ணி..”

“ஐயோ.. அதெல்லாம் எதுக்கு இப்போ.. நீ எங்கிட்ட பேசுறதே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?”

“எனக்கு உங்ககிட்ட பேசனும்னுதான் ஆசை அண்ணி.. ஆனா.. ஏதோ ஒன்னு வந்து என்னை தடுத்துடும்..!! சின்ன வயசுல நாம போட்ட சண்டை.. உங்க கூட பேசமாட்டேன்னு நான் சில்லித்தனமா போட்ட சபதம்..!! அந்த சபதத்தை எப்படியாவது காப்பாத்தனும்னு ஏதோ ஒரு பிடிவாதம்.. மத்தபடி உங்கமேல எனக்கு எந்த கோவமும் இல்ல அண்ணி..!!”

“எனக்கு தெரியும் திவ்யா.. எனக்கு தெரியும்..!!”

சித்ரா திவ்யாவை அணைத்துக்கொண்டாள். இருவரும் ஒருவர் தோளில் இன்னொருவர் முகம் சாய்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். சித்ரா ஆதரவாக திவ்யாவின் முதுகை வருடிக் கொடுக்க, திவ்யா அமைதியாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். சில வினாடிகள்..!! அப்புறம் திவ்யா திடீரென கேட்டாள்.

“அசோக் என் மேல கோவமா இருக்கானா அண்ணி..?”

“ச்சேச்சே.. அப்டிலாம் ஒண்ணுல்ல..”

“இல்ல.. அவனுக்கு என் மேல கோவம் இருக்கும்.. உங்ககிட்ட சொல்லிருக்க மாட்டான்..!! அழுத்தக்காரன்.. அவன் லவ்வையே இத்தனை நாளா எங்கிட்ட சொல்லாம மறைச்சவன்தான..?”

“ப்ச்.. நான்தான் சொல்றேன்ல..? அவனுக்கு உன் மேல கோவம்லாம் ஒண்ணுல்ல திவ்யா..!!”

“இருக்கும் அண்ணி.. கண்டிப்பா இருக்கும்..!! நான் அவனை என்னெல்லாம் சொல்லிட்டேன்..? செருப்பால அறைஞ்ச மாதிரி எப்படிலாம் பேசிட்டேன்..? அவன் எப்படி துடிச்சு போயிருப்பான்..?? கண்டிப்பா அவனுக்கு என் மேல கோவம் இருக்கும்..!!” திவ்யா அழுதவாறே சொல்ல,

“ச்சே.. என்ன பேசுற நீ..? அ..அவன்.. அவனுக்கு உன் மேல கோவமே வராது திவ்யா.. அவன் உன் மேல எவ்வளவு ப்ரியம் வச்சிருக்கான்னு உனக்கு தெரியாது..!!”

“தெரியும் அண்ணி.. என் மேல அவன் உயிரையே வச்சிருக்கான்.. எனக்கு நல்லா தெரியும்..!! அதான்.. அவனை காயப்படுத்திட்டேன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!”

“நீ தேவையில்லாம மனசை போட்டு கொழப்பிக்கிற திவ்யா.. அதுக்குலாம் அவசியமே இல்ல..!!”

“இல்ல அண்ணி.. அவன் இதுவரை எனக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்கான்.. எனக்கு சிரிப்பும், சந்தோஷமும் மட்டுந்தான் கொடுத்திருக்கான்..!! ஆனா நான் அவனுக்கு கொடுத்ததுலாம்.. கஷ்டமும், வலியும், வேதனையுந்தான்..!! அவன் என்னை ஏத்துப்பான்ல அண்ணி..?” திவ்யா பரிதாபமாக கேட்க, சித்ரா உருகிப் போனாள்.

“ஏய்.. தி..திவ்யா..”

“நான் அவன் கால்ல விழுந்து கெஞ்சினா.. என்னை ஏத்துப்பான்ல அண்ணி..?” திவ்யா உடைந்து போய் அழுதாள்.

“ப்ச்.. பைத்தியம் மாதிரி ஏதாவது உளறாத திவ்யா..!! நீ ஏதோ ரொம்ப கொழம்பி போய் இருக்குற.. பேசாம படுத்து தூங்கு..!! காலைல அவனைப் பாத்து பேசு.. காலுலாம் ஒன்னும் விழ வேணாம்.. உன் மனசுல இருக்குறதை சொல்லு.. அவன் உன்னை தலைல தூக்கி வச்சு ஆடுவான்.. அதுக்கு அண்ணி உத்திரவாதம் தர்றேன்.. சரியா..? இப்போ தூங்கு..!!”

சித்ரா திவ்யாவை படுக்க வைத்தாள். போர்வை போர்த்தி விட்டாள். அவளுடைய கூந்தலை இதமாக தடவிக் கொடுத்தாள். கொஞ்ச நேரத்திற்கு திவ்யாவின் முகத்தையே கண்கள் கொட்டாமால் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் எழுந்து கொண்டாள். அறையை விட்டு வெளியேறும் எண்ணத்துடன் அவள் நகர முயல, திவ்யா இப்போது அவளுடைய கையை எட்டி பற்றினாள்.

சித்ரா நின்றாள். எதுவும் புரியாமல் திரும்பி பார்த்தாள். ‘என்ன..?’ என்பது போல திவ்யாவை ஏறிட்டாள். திவ்யா எதுவும் பேசவில்லை. தனது வலது கையில் இருந்த அந்த தழும்பை தடவிக் காட்டினாள். சித்ரா இன்னும் குழப்பமாய் திவ்யாவையே பார்க்க.. திவ்யா இப்போது முகத்தில் ஒரு அழகான ஸ்நேக புன்னகையுடன் சொன்னாள்.

“சின்ன வயசுல என் கைல பட்ட சூடு..!! அந்தக்காயம் இப்போ ஆறிடுச்சு அண்ணி.. எனக்கு இப்போ வலிக்கலை..!!”

இப்போது சித்ராவும் கண்களில் நீர் துளிர்க்க திவ்யாவைப் பார்த்து புன்னகைத்தாள். திவ்யாவின் தலை முடியை லேசாக கலைத்துவிட்டவள், இதமான குரலில் சொன்னாள்.

“லூசு.. நிம்மதியா படுத்து தூங்குடி..!!”

சித்ரா திரும்பி நடந்தாள். கண்களில் வழிந்த நீரை ஒரு கையால் துடைத்துக் கொண்டாள். மறுகையால் விளக்கை அணைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள். Pundai Mudi Tamil New Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top