கண்ணாமூச்சி ரே ரே – 51

(Tamil New Sex Stories - Kannamoochi Rae Rae 51)

Raja 2014-07-03 Comments

Tamil New Sex Stories – வனக்கொடியிடம் பேசிமுடித்தபிறகு.. அந்த வீட்டை ஒருமுறை கவனமாக சுற்றிப் பார்த்தார் வில்லாளன்.. அவருடன் உதவிக்கு சென்றிருந்தார் திரவியம்..!! கீழ்த்தளத்தின் எல்லா அறைகளையும் அலசினார்.. மாடிப்படியேறி மேல்த்தளத்தை ஒருமுறை சுற்றிவந்தார்..!! வீட்டுக்குள் அடங்கியிருந்த ரகசிய அறை பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டு.. அதற்குள்ளும் சென்று தீவிரமாக பார்வையிட்டார்..!!

182

பார்வையிட்டதன் பிறகு ஹாலுக்கு வந்த வில்லாளன்..

“கதவு, ஜன்னல்லாம் எதுவும் உடைஞ்சிருக்குற மாதிரி தெரியல.. வெளில இருந்து யாரும் உள்ள வந்திருக்க சான்ஸ் இல்லன்னுதான் தோணுது..!! போயிருந்தா இவராத்தான் போயிருக்கனும்..!!” என்று இயல்பான குரலில் சொன்னதை எல்லாம்,

“…………………….” எங்கோ ஒரு வெறித்த பார்வையுடன் கேட்டுக்கொண்டாள் ஆதிரா.

“நைட்டு தூங்குறப்போ கதவெல்லாம் லாக் பண்ணிட்டுத்தான தூங்குனீங்க..??”

“ஆ..ஆமாம்..!!”

“காலைல எந்திரிச்சு பாக்குறப்போ அவர் உங்க பக்கத்துல இல்ல..??”

“ம்ம்..!!”

“அப்புறம்.. வனக்கொடி வீட்டுக்கு வந்ததும் விஷயத்தை சொல்லிருக்கிங்க..!! அதுவரை என்ன பண்ணுனீங்க..??”

“இல்ல.. நான் எந்திரிக்கிறப்போவே வனக்கொடிம்மா வந்திருந்தாங்க..!!”

“ஓ..!! கதவெல்லாம் லாக் பண்ணிட்டு தூங்கினதா சொன்னீங்க.. அப்புறம் எப்படி அவங்க..??”

“அவங்கட்ட ஒரு சாவி இருக்கு..!!”

ஆதிரா உலர்ந்துபோன குரலில் சொல்ல.. இப்போது வில்லாளன் நெற்றியை சற்றே சுருக்கினார்.. அப்படியே திரும்பி வனக்கொடியை ஒரு சந்தேகப்பார்வை பார்த்தார்..!! அவருக்கு ஏற்கனவே வனக்கொடியின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது.. இப்போது அவளை சந்தேகப்படும்படியான ஒரு சூழல் அமையவும், அவர் பார்த்த பார்வையில் ஒருவித கடுமையும், கூர்மையும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது..!!

“இங்க வா..!! நீ எப்போ வீட்டுக்கு வந்த..??” வனக்கொடியை ஒருமையில் அழைத்து கேட்டார்.

“நா..நான்.. நான் வர்றப்போ..” பதற்றத்தில் வனக்கொடி தடுமாறிக் கொண்டிருக்கும்போதே,

“இன்ஸ்பெக்டர்..!!” இறுக்கமான குரலில் வில்லாளனை அழைத்தாள் ஆதிரா.

“ம்ம்..” ஆதிராவின் பக்கமாக திரும்பினார் வில்லாளன்.

“தயவு செஞ்சு அவங்கமேல சந்தேகப்படாதிங்க ப்ளீஸ்..!! அவங்க பார்வைதான் அப்படி இருக்கும்.. மத்தபடி ரொம்ப நல்லவங்க..!! அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..!! இதுக்குலாம் காரணம் வேற ஆளு.. அது யார்னு எனக்கு நல்லா தெரியும்..!!”

“யா..யாரு..??”

“குறிஞ்சி..!!!!” ஆதிரா தீர்க்கமாக சொல்ல, வில்லாளனின் முகத்தில் ஒருவித கேலிப்புன்னகை.

“ஹஹா.. எப்படி சொல்றீங்க..??”

“தெரியும்.. என்னால ஃபீல் பண்ண முடியுது..!! இதுக்குலாம் காரணம் மனுஷங்க இல்ல.. ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி..!!”

“ஓ..!! எதனால அந்த முடிவுக்கு வந்தீங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா..??”

“நான் எவ்வளவு தெளிவா சொன்னாலும் அது உங்களுக்கு புரியாது.. உங்களால புரிஞ்சுக்க முடியாது..!!”

“கமான் ஆதிரா.. சொல்லுங்க ப்ளீஸ்..!! நீங்க சொன்னாத்தான என்னாலயும் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்..??”

“இல்ல இன்ஸ்பெக்டர்.. உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியாது..!! உங்க அக்கறைக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. நீங்க கெளம்பலாம்..!!”

சொல்லிவிட்டு விருட்டென எழுந்து நடந்த ஆதிராவையே.. திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தார் வில்லாளன்..!! அதன்பிறகும் அந்தவீட்டில் தனது வேலை என்னவென்று புரியாதவராய்.. திரவியத்திடம் சொல்லிவிட்டு சீக்கிரமே அங்கிருந்து வெளியேறினார்..!!

183

ஆதிராவால் அழத்தான் முடிந்தது.. அதைத்தாண்டி எதையும் செய்கிற மனத்தெளிவு அவளுக்கு இல்லை..!! அமானுஷ்யமான ஒரு சக்தியை வென்றுமுடிப்பதற்கு திட்டம் தீட்டுகிற அளவுக்கு.. தளர்ந்துபோன அவளது மூளைக்கோ கிஞ்சித்தும் வலுவென்பது இல்லை..!! கண்கள் மட்டும் தாரைதாரையாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன.. அகழி வந்து இந்த ஐந்தாறு நாட்கள் நடந்த சம்பவங்களையே, அவளது மனது திரும்ப திரும்ப நினைத்து வெந்துகொண்டிருந்தது.. கணவனின் ஆசைமுகத்தை மீண்டும் காண இயலுமா என்கிற கேள்வி, நொடிக்கொருமுறை அவளது இற்றுப்போன இருதயத்தில் அமிலம் வார்த்துக்கொண்டிருந்தது..!!

சிறிது நேரத்தில்.. முகிலனின் குடும்பத்தினர் விஷயத்தை கேள்விப்பட்டு ஆதிராவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.. முதன்முறையாக முகிலனும் அவர்களுடன் வருகை தந்திருந்தான்..!! ஊர்த்திருவிழாவை உற்சாகம் இல்லாமலே நடத்தி முடித்திருந்தவன்.. குடும்பத்து மனக்கசப்பை மனதில் கொள்ளாமல் அந்தவீட்டு வாசற்படி மிதித்தான்..!! அங்கையற்கண்ணியும், யாழினியும் ஆதிராவை ஆறுதல்படுத்த முயன்றனர்.. ஆதிராவோ, ஆறுதலுக்கு அணுவளவும் மாறுதல் கொள்கிற நிலையில் இல்லை..!! முகிலன் தயங்கி தயங்கி பேசியதை மட்டும்.. கொஞ்சமாய் காதுகொடுத்து கேட்டுக் கொண்டாள்..!!

“எ..எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல ஆதிரா..!! இ..இந்த மாதிரி ஒரு நெலமைல நீ இருக்குறப்போ.. உன்னை வந்து பார்த்து பேசணும்னு தோணுச்சு.. அதான்.. நானாவே கெளம்பி அம்மாவோட வந்தேன்..!!”

“ம்ம்..!!”

“உ..உனக்கு என் மேல கோவம் இருக்கும்னு நெனைக்கிறேன்..!!”

“இல்லத்தான்.. உங்கமேலலாம் எனக்கு எந்த கோவமும் இல்ல..!!”

“ஹ்ம்ம்.. தாமிரா பண்ணின அந்த ஆராய்ச்சி எனக்கு பிடிக்கல.. அதை நீ திரும்ப தோண்டினதும் எனக்கு பிடிக்கல.. அவ்வளவுதான்..!! மத்தபடி உங்க ரெண்டு பேர் மேலயும் எனக்கு எந்த கோவமும் இல்ல..!! தாமிரா காணாமப் போனதுக்கு சத்தியமா நான் காரணம் இல்ல ஆதிரா..!!”

“ம்ம்..!! இ..இப்போ தெரியுது..!!”

“குறிஞ்சியைவிட.. குடும்பமும், குடும்ப மானமும் எனக்கு ரொம்ப முக்கியம் ஆதிரா.. அதான் அப்படிலாம் நடந்துக்கிட்டேன்..!! நான் குடும்பம்னு சொன்னது.. உன்னை, தாமிராவை, சிபியை.. எல்லாரையும் சேர்த்துதான்..!!”

“பு..புரியுதுத்தான்..!!”

” எ..எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல..!! உனக்கு நான் ஏதாவது செய்யணும்னா சொல்லு.. செய்றேன்..!!”

ஆதிரா பதிலேதும் சொல்லவில்லை.. அமைதியாகவே இருந்தாள்..!! எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுவதோ, கோபம்தோய்ந்த வார்த்தைகளை கொப்பளிப்பதோ.. எப்போதுமே முகிலனுக்கு எளிதான விஷயம்..!! இந்தமாதிரி ஒரு இக்கட்டான, இறுக்கமான சூழ்நிலையில்.. கனிவாக, கருத்தாக பேசுவதெல்லாம் அவனுக்கு கைவராத காரியம்..!! இப்போதும் அப்படித்தான்.. மனதில் தோன்றியதை வெளிப்படையாக கொட்டிவிட்டு, ஓரமாய் நகர்ந்துகொண்டான்..!!

மைசூரில் இருந்து கிளம்பிய தணிகைநம்பி.. மேலும் சிறிது நேரத்தில் அகழிவீட்டை வந்தடைந்தார்..!! முகிலனின் குடும்பத்தினரை அவர் அங்கு எதிர்பார்த்திரவில்லை.. முதலில் சற்று திகைத்துப்போய்த்தான் நின்றார்.. பிறகு, எல்லோரையும் பார்த்து ஒரு வறண்ட புன்னகையை உதிர்த்தார்.. கரங்களை கூப்பி வணக்கம் செய்தார்..!! பொங்கிவருகிற காட்டாற்று வெள்ளம், எதிர்ப்படுகிற பொடிப்பொடி தடைகளை எல்லாம், மூழ்கடித்து அழித்து செல்கிறது அல்லவா..?? அது மாதிரிதான்.. மகளுடைய வாழ்வில் நேர்ந்திருக்கிற பெருந்துயரம், உறவினர்களுடன் கொண்ட மனக்கசப்பை, தணிகைநம்பிக்கு மறந்துபோக வைத்திருந்தது..!! துக்கத்தில் பங்கெடுக்க வந்திருப்பவர்களை நன்றியுடன் பார்த்தவர்.. அழுதுகொண்டிருந்த மகளை நெருங்கி அன்பாக அணைத்துக் கொண்டார்..!!

184

தணிகைநம்பி வேறொரு எண்ணத்துடன் அகழி வந்திருந்தார்.. மகளை உடனடியாக மைசூர் அழைத்து செல்வதுதான் அது..!! ஆதிராவிடம் அந்த எண்ணத்தை சொன்னபோது.. அவள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை, முடியாதென மறுத்தாள்..!!

“இ..இல்லப்பா.. நான் அகழியை விட்டு வரமாட்டேன்..!!”

“சொல்றதை கேளுமா.. இந்த ஊர் உனக்கு வேணாம்.. இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு சரியாப்படல..!! உனக்கும் ஏதாவது ஒன்னுன்னா.. என்னாலயும், உன் அம்மாவாலயும் தாங்கிக்கவே முடியாதுமா..!! அவளும் என்கூட கெளம்புறேன்னா.. உன்ன கையோட கூட்டிட்டு வந்துடுறேன்னு சொல்லித்தான் அவளை அங்கேயே விட்டுட்டு வந்தேன்..!! கெளம்புமா.. நாம போயிறலாம்..!!”

“எப்படிப்பா..?? அவரை இப்படி இங்க தொலைச்சுட்டு..”

“போலீஸ் இருக்காங்க.. திரவியம் இருக்கான்.. நம்ம மாப்ள இருக்காரு.. சிபியை அவங்க தேடிக்கண்டுபிடிப்பாங்க..!! இப்போதைக்கு உன்னோட பாதுகாப்புதான் எங்களுக்கு ரொம்ப முக்கியமா படுதுமா.. அது மைசூர்லதான் கெடைக்கும்.. வாம்மா.. போலாம்..!!” கனிவுடன் தணிகைநம்பி சொல்ல, முகிலனும் அவருடன் சேர்ந்துகொண்டு,

“மாமா சொல்றது சரிதான்னு தோணுது ஆதிரா.. நீ இங்க இருக்குறது அவ்வளவு நல்லது இல்ல.. மாமாவோட மைசூர் கெளம்பு..!! சிபியை தேடுறதை நாங்க பாத்துக்குறோம்..!!” என்று ஆதிராவுக்கு அறிவுறுத்தினான்.

“இல்லத்தான்.. என் முடிவை நான் மாத்திக்கிறதா இல்ல..!!” உறுதியாக மறுத்தாள் ஆதிரா.

“பிடிவாதம் பிடிக்காத ஆதிரா..!!”

“இது பிடிவாதம் இல்லத்தான்.. வைராக்கியம்..!! அகழி வர்றதுல அவருக்கு சுத்தமா இஷ்டம் இல்ல.. வேணாம் வேணாம்னு எவ்வளவோ சொன்னாரு..!! அதெல்லாம் கொஞ்சம்கூட காதுகுடுத்து கேட்காம.. அடம்புடிச்சு அவரை இங்க கூட்டிட்டு வந்தேன்..!! அப்படி கூட்டிட்டு வந்து.. இப்படி இந்த குறிஞ்சிட்ட அவரை பறிகுடுத்துட்டு.. நான் மட்டும் இங்க இருந்து கெளம்ப எனக்கு மனசு இல்ல..!! என்ன ஆனாலும் சரி.. அவர் இல்லாம அகழியை விட்டு ஒரு அடிகூட நான் எடுத்து வைக்க மாட்டேன்..!!”

ஆதிரா தீர்க்கமாக சொல்ல, அவளையே திகைப்பாக பார்த்தனர் தணிகைநம்பியும், முகிலனும்..!! அவளது வார்த்தைகளில் தெரிந்த உறுதி.. அவள் வரமாட்டாள் என்று உரக்க சொல்லின..!! அதை புரிந்துகொண்ட தணிகைநம்பியும், இப்போது சற்றே தளர்வான குரலில் சொன்னார்..!!

Comments

Scroll To Top