கண்ணாமூச்சி ரே ரே – 48

(Tamil New Sex Stories - Kannamoochi Rae Rae 48)

Raja 2014-06-28 Comments

Tamil New Sex Stories – ரத்தத்தை உறையவைக்கிற மாதிரியான கோரக்காட்சி.. ஆனால் அதைப்பார்த்த ஆதிராவிடம் அதற்குண்டான பதைபதைப்பு இப்போது இல்லை..!! அடுத்தடுத்து வரிசையாக நடந்த திகில் சம்பவங்களால்.. அவள் மிகவும் களைத்துப் போயிருந்தாள்..!! முகத்தில் எந்தவித பதற்றமும், சலனமும் காட்டாமல்.. மணிமாறன் அனுபவிக்கிற சித்திரவதைகளை இங்கிருந்து வெறித்து பார்த்தாள்..!!

9

தீவிரமாக அவரை கடித்துக் குதறிக்கொண்டிருந்த புலி, இப்போது திடீரென அமைதியானது.. ‘க்க்க்கர்ர்ர்ர்ர்..’ என்று ஒரு உறுமலை மட்டும் வெளிப்படுத்திவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் பின்வாங்கியது..!! ரிவர்சில் நான்கைந்து ஸ்டெப்ஸ் எடுத்து வைத்து.. அப்படியே உடல் குறுகிப்போய் தரையில் படுத்துக்கொண்டது.. மிகவும் அப்பாவியான ஒரு பூனைக்குட்டியைப் போல..!!

மணிமாறன் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்.. அவரிடம் உயிர் இன்னும் மிச்சமிருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது.. அவரது தொண்டைக்குழி ‘விழுக் விழுக்’ என்று துடித்தது.. ஒரு கை மட்டும் ‘வெடுக் வெடுக்’ என வெட்டிக்கொண்டு கிடந்தது..!!

ஆதிராவுக்கு ஒன்றுமே புரியவில்லை.. ‘ஏன்.. என்னாச்சு அந்த புலிக்கு.. எதற்காக இப்படி செய்கிறது..?’ என்பது மாதிரியாக அவளுக்குள் கேள்விகள்.. வித்தியாசமாக பார்த்தாள்..!!

அவள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே.. மணிமாறனின் தலைக்கருகே வந்து நின்றது அந்த உருவம்.. முகத்தில் கூந்தல்க்கற்றையோடு, சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்..!! அதைப்பார்த்ததுமே திக்கென்று இருந்தது ஆதிராவுக்கு.. நெஞ்சுக்குள் ஏதோ பந்து ஒன்று அடைத்துக்கொண்ட மாதிரியாக ஒரு உணர்வு..!! அதிர்ச்சியில் அவளது உதடுகள் ‘ஓ’வென்று திறந்துகொள்ள.. வாய்விட்டு அலறக்கூட தோன்றாமல் உறைந்துபோய் நின்றிருந்தாள்..!!

அந்த உருவம் இப்போது குனிந்தது.. சாகாமல் துடிதுடித்துக் கொண்டிருந்த மணிமாறனை அள்ளி தோளில் போட்டுக்கொண்டது.. திறந்திருந்த காம்பவுண்ட் கேட் நோக்கி மெல்ல நடந்தது..!! படுத்திருந்த புலியும் இப்போது எழுந்துகொண்டது.. தலையை தொங்கப்போட்டவாறு அந்த உருவத்தின் பின்னால் நடந்தது.. மிகவும் விசுவாசனமான ஒரு வேலைக்காரனைப் போல..!!

ஆதிரா நடப்பதை எல்லாம் நம்பமுடியாதவளாய்.. இமைகளை விரித்துவைத்து ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள்..!! கேட்-க்கு அருகே சென்றதும் அந்த உருவம் சற்று நின்றது.. அப்படியே சரக்கென திரும்பி, ஆதிராவை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தது..!! ஆதிராவுக்கோ தண்டுவடத்தில் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு.. பக்கென்று இருதயத்தை யாரோ இறுகப்பற்றியது போலொரு உணர்வு..!!

ஓரிரு வினாடிகள்தான்..!! அந்த உருவம் மீண்டும் அந்தப்பக்கம் திரும்பியது.. தோளில் மணிமாறன், காலுக்கடியில் காட்டுப்புலி.. கேட்-க்கு வெளியே நடந்தது.. காட்டுக்குள் சென்று மறைந்தது..!!

10

அத்தியாயம் 21

அடுத்தநாள் காலை அகழி கிராமம் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது.. ‘விர்ர்ர்ர்.. விர்ர்ர்ர்..’ என காவல்துறை வாகனங்கள் ஊருக்குள் புழுதி கிளப்பி பறந்து கொண்டிருந்தன..!! நடந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஊர்ஜனங்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.. ஆங்காங்கே கூட்டம்கூட்டமாய் சேர்ந்து ரகசியக்குரலில் பேசிக்கொண்டனர்..!!

“பச்சைப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு.. இப்பிடியொரு பாதகத்தை பண்ணிருக்கானே இந்தப் பாவிப்பய..!! இவனுக்குலாம் இப்பிடித்தான் வேணும்..!!”

“எனக்கு ஆரம்பத்துலயே அந்தப்பய மேல ஒரு டவுட்டப்பா.. அவன் முழியுஞ்சரியில்ல.. பேச்சுஞ்சரியில்ல..!! இப்ப இல்ல.. ரொம்பநாளுக்கு முன்னாடியே என் பொஞ்சாதிட்டகூட சொல்லிட்டு இருந்தனப்பா..!!”

“ஐயயே அந்தப்படத்தை சொல்லல..!! செவப்பு ரோஸான்னு பழைய படம்.. கமலும் சிரிதேவியும்..!!”

“மாட்டுக்கு இருக்குற மாதிரி.. பேய்க்கும் பெருசா கொம்பு இருக்குமா தாத்தா..??”

“குறிஞ்சி பேரைச்சொல்லி ஆட்டம் போட்டுட்டு இருந்திருக்கான்.. ஆடுனது போதும்னு அவளே வந்து தூக்கிட்டு போய்ட்டா..!! கொள்ளைல போக..!!”

பங்குனிப் பொங்கலின் இறுதிநாளன்று.. ஊர்மக்களின் தலையில் இடியாக வந்து இறங்கியிருந்தது அந்த சம்பவம்..!! திருவிழாவை தொடர்ந்து நடத்துவதா, வேண்டாமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது..!! ஊர் முக்கியஸ்தர்களின் கூட்டம், உடனடியாக அதிகாலையிலேயே கோயிலில் கூடியது.. ஆளாளுக்கு ஏதேதோ சொல்லி பெரும் சலசலப்புக்கு பிறகு..

“என்ன ஆனாலும் சரி.. திருவிழாவை நல்லபடியா நடத்தியே ஆகணும்.. இல்லனா சாமிக்குத்தம் ஆய்ரும்..!! அப்புறம் ஏதாவது ஒண்ணுன்னா எங்கிட்ட ஓடியாரக்கூடாது சொல்லிட்டேன்..!!” என்று முகிலன் கோவத்தை உதிர்த்த பின்னர்..

“ஐயா சொல்றதுதான் சரி.. என்னதான் இருந்தாலும் ஆத்தா கோவத்துக்கு ஆளாவக்கூடாதுல..!!” என்று ஊர்மக்கள் ஒப்புக்கொண்டனர். ஆனபோதிலும், மனதுக்குள் சந்தோஷம் என்பது துளியும் இல்லாமலே, கடைசிநாள் விழாவுக்கு தயாராயினர்.

விஷயம் காட்டுத்தீயாக எல்லா ஊருக்கும் பரவியிருந்தது.. அன்றைய மாலை செய்தித்தாள்களில், முதல்பக்க ஒதுக்கீடுக்கு சென்னையில் விவாதம் நடந்துகொண்டிருந்தது..!! ஆதிராவின் வீட்டுக்கு முன்பாக ஐந்தாறு பத்திரிக்கையாளர்கள் குழுமியிருந்தனர்.. கதவு எப்போது திறக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.. கணவனுடன் ஆதிரா வெளிப்படவும், ஓடிச்சென்று அவர்களை சூழ்ந்துகொண்டனர்.. இனிப்புப்பண்டத்தை ஈ மொய்ப்பது மாதிரி..!! கேள்விக்கணைகளால் அவளை துளைத்தெடுத்தனர்..!!

“மிஸ் ஆதிரா.. அந்த சைக்கோட்ட நீங்க எப்படி மாட்டுனிங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா..??”

“அவனோட டெட்பாடி இன்னும் கெடைக்கலை.. அதைப்பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க..??”

“உயிர் போகப்போகுதுன்ற நெலமைல உங்க உணர்வுகள் எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா..??”

“அவர் உங்களை பாலியல் பலாத்காரம் செஞ்சிட்டதா சொல்றாங்களே.. அது உண்மையா..??”

11

பத்திரிக்கையாளர்களின் கேள்விகள் சிபிக்கு எரிச்சல் மூட்டின..!!

“ஹலோ.. அவ இப்போ யார்ட்டயும் பேசுற நெலமைல இல்ல.. பயங்கர ஷாக்ல இருக்கா.. அவளை கொஞ்சம் நிம்மதியா இருக்கவிடுங்க.. ப்ளீஸ்..!! புரிஞ்சுக்கங்க.. உங்களுக்கு ரிப்போர்ட் வேணும்னா போலீஸை காண்டாக்ட் பண்ணுங்க..!! வழிவிடுங்க.. ப்ளீஸ்ஸ்ஸ்..!!”

சூழ்ந்திருந்தவர்களை சமாளித்து.. ஆதிராவை அணைத்தவாறு பாதுகாப்பாக கூட்டிச்சென்று காரில் ஏற்றினான் சிபி.. அவசரமாய் காரை ஸ்டார்ட் செய்து, சர்ரென வேகமெடுத்து கிளப்பினான்..!!

“மேடம்.. ஒரே ஒரு கேள்வி மேடம்.. ஒரே ஒரு கேள்வி.. ஜஸ்ட் ஆன்சர் திஸ்..!!” லஜ்ஜையில்லாமல் காரின் பின்னால் ஓடினார்கள் பத்திரிக்கையாளர்கள்.

“ஹ்ம்ம்ம்.. எங்கிட்ட கேட்டா எல்லாக்கதையும் புட்டுப்புட்டு வைப்பேன்.. எந்தப்பய கேக்குறான்..!!” சலிப்பாக சொன்னது, வீட்டுக்கு வெளியே தனியே அமர்ந்து பல்குத்திக் கொண்டிருந்த பெருசு ஒன்று.

கார் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது.. கவனத்தை சாலையில் செலுத்தி காரோட்டிக்கொண்டிருந்தான் சிபி.. கண்களை மூடி சீட்டில் தலை சாய்த்திருந்தாள் ஆதிரா.. நேற்றிரவு நடந்த சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து இன்னுமே அவள் மீண்டிருக்கவில்லை.. இருதயத்தில் இப்போதும் அந்த பதைபதைப்பு மிச்சமிருந்தது..!!

“அப்பா என்ன சொன்னாரு..??” கண்களை திறக்காமலே கணவனிடம் கேட்டாள் ஆதிரா.

“என்ன சொல்வாரு.. உடனே கெளம்பி மைசூர் வர சொன்னாரு..!! என்னைத்தான் ரொம்ப திட்டினாரு..!!” சாலையில் இருந்த கவனம் சிதறாமலே சொன்னான் சிபி.

“ம்ம்ம்..!!”

“இந்த போலீஸ், ப்ரஸ்லாம் பெரிய டார்ச்சர்தான் ஆதிரா.. கொஞ்சம் பொறுத்துக்கோ.. சரியா..??” சிபியின் குரலில் ஒரு கனிவு.

“ம்ம்.. சரித்தான்..!!”

மேலும் பத்துநிமிட பயணத்திற்கு பிறகு.. கார் மணிமாறனின் வீட்டை வந்தடைந்தது..!! வீட்டுக்கு வெளியே.. காம்பவுண்ட் கேட்டை சுற்றி கணிசமான அளவு ஊர்மக்கள் கூடியிருந்தனர்.. மணிமாறனின் குரூரபுத்திக்கு தங்களது குடும்பப்பெண்களை காவு கொடுத்திருந்த சொந்தபந்தங்கள், அவரை கரித்துக் கொட்டினர்.. காறி உமிழ்ந்தனர்..!!

ஆதிராவும், சிபியும் கூட்டத்தை விலக்கி வீட்டுக்குள் நுழைந்தனர்.. உள்ளே நிறைய காக்கி சட்டைகளை காணமுடிந்தது..!! காக்கிசட்டை அணியாத மற்றொரு குழு.. நேற்று மணிமாறன் கடித்துக்குதறப்பட்ட புல்வெளியை ஆய்வு செய்துகொண்டிருந்தது..!! ஊர்மக்களை உள்ளேவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த காவலர்.. ஆதிராவை மட்டும் அடையாளம் கண்டுகொண்டு உள்ளே அனுமதித்தார்..!!

“இன்ஸ்பெக்டர் தோட்டத்துல இருக்காரு மேடம்..!!” என்றார்.

ஆதிராவும் சிபியும் கோரைப் புற்களில் கால்பதித்து நடந்து.. வீட்டுக்கு பின்புறமாக சென்றனர்..!! தோட்டத்தில் இரைச்சல் இன்னும் அதிகமாக இருந்தது.. மணல் அள்ளுகிற பொக்லைன் இயந்திரம் பிரதானமாக காட்சியளித்தது..!! காற்றில் ஒரு துர்நாற்றம்.. தோட்டத்து பூஞ்செடிகள் எல்லாம் பிடுங்கி எறியப்பட்டிருந்தன.. கூர்மையான தனது கரத்தால் தோட்டத்து மண்ணை, தோண்டி தோண்டி அள்ளிக்கொண்டிருந்தது பொக்லைன்..!! ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட ஏழெட்டு பிணங்கள் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.. அழுகி, சிதைந்துபோன உயிரற்ற உடல்கள்..!!

“இனிமே இதுதான் உன் இடம்.. வேற எங்கயும் போகணும்னு நெனைக்க கூடாது..!! சமத்தா இங்கயே இருக்கணும்.. என்கூடவே இருக்கணும்.. எப்போவும்..”

ஆதிரா மணிமாறனை முதன்முதலாக சந்தித்தபோது.. அவர் தோட்டத்து செடிகளுடன் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது..!! அதெல்லாம் செடிகளிடம் பேசினாரா.. அல்லது.. செடிகளுக்கு அடியில் உறங்கிய பிரேதங்களிடம் பேசினாரா என்று ஆதிராவுக்குள் இப்போது ஒரு கேள்வி..!!

சுற்றிநின்ற காவலர்களுக்கு மையமாக, மஃப்டி உடையில் காட்சியளித்தார் இன்ஸ்பெக்டர் வில்லாளன்.. முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தார்.. எல்லோருக்கும் ஏதேதோ ஆணையிட்டுக் கொண்டிருந்தார்..!! அவரிடம் ஆதிராவின் வருகையை ஒரு காவலர் உரைக்கவும்.. உடனே இவர்கள் பக்கமாக திரும்பிப் பார்த்தார்..!!

Comments

Scroll To Top