மலரே என்னிடம் மயங்காதே – 9

(Tamil Hot Stories - Malarae Ennidam Mayangathae 9)

Raja 2014-02-18 Comments

“ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்..”

“நீ சிணுங்குறப்போ செம செக்ஸியா இருக்குறடி..!!” நான் இப்போது அவளது செழுமையான புஜத்தை, அழுத்தமாக பற்றி பிசைய, கயல் வலியில் கத்தினாள்.

“ஆஆஆவ்…!! கையை எடுங்கப்பா.. வலிக்குது..!!”

அவள் சலிப்பாய் சொல்லிக்கொண்டே, தன் தோளை சுற்றியிருந்த எனது கையை எடுத்து விட்டு, என்னிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். நானும் புன்னகைத்தவாறு மீண்டும் அவளது கை விரல்களுடன் எனது விரல்களை கோர்த்துக் கொண்டேன்.

“முதல்ல உங்களுக்கு ஒரு ஸ்வெட்டர் வாங்கணும்.. இல்லனா.. என்னை பாடா படுத்திடுவீங்க..!!”

“ஹாஹ்ஹாஹ்ஹா..!!”

அவள் சொன்னதை கேட்டு நான் அப்போது கேலியாக சிரித்தேன். ஆனால் போகும் வழியில் அடுத்ததாக வந்த ஒரு ஸ்வெட்டர் ஷாப்பை பார்த்ததும், ‘எனக்கு ஸ்வெட்டர் வாங்கியே தீர வேண்டும்’ என்று கயல் அடம் பிடிப்பாள் என நான் நினைத்தே பார்க்கவில்லை. ‘வேணாம் கயல்..’ என நான் முதலில் தயங்கினேன். ஆனால் அவள் விடவில்லை. வேறு வழியில்லாமல் அவளுடன் அந்த ஷாப்பிற்குள் நுழைந்தேன்.

இருந்த ஸ்வெட்டர்களை எல்லாம் இரண்டு பேரும் புரட்டி புரட்டி பார்த்தோம். அப்புறம் சந்தன நிறத்தில் இருந்த ஒரு ஸ்வெட்டரை எடுத்து கயல் என்னிடம் நீட்டினாள்.

“இது நல்லாருக்குப்பா.. இதை எடுத்துக்குங்க..!!”

“இதுவா..? எனக்கு இந்த கலர் பிடிக்கலை கயல்.. இதே இதுல வேற கலர் இருக்கான்னு பாரு..”

“இல்ல இல்ல.. எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.. இதைத்தான் நீங்க எடுத்துக்கணும்..!!”

“அப்படி என்ன இதுல உனக்கு பிடிச்சிருக்கு..?”

“இந்த எம்ப்ராய்டரி..!!”

கயல் தொட்டுக் காட்ட, அப்போதுதான் நான் அதை கவனித்தேன். அந்த ஸ்வெட்டரில்.. இடது பக்கத்தில்.. இதயம் இருக்கும் இடத்தில்.. க்ரே கலரில்.. அந்த எம்ப்ராய்டரி..!! மீன் உருவம் பொறிக்கப்பட்ட எம்ப்ராய்டரி..!! கயலுக்கு ஏன் அந்த ஸ்வெட்டர் அவ்வளவு பிடித்து போனது என, பட்டென எனக்கு புரிந்து போனது. கயல் என்றால் மீன் என்று அர்த்தம் என்பது உங்களுக்கு தெரியும்தானே..?

நான் என் மனைவியை ஏறிட்டு காதலாக பார்த்தேன்.. அவளும்..!! அழகாக, மெலிதாக புன்னகைத்தேன்.. அவளும்..!! கயலிடம் வேறு பேச்சும் பேசவில்லை.. கடைக்காரனிடம் பேரமும் பேசவில்லை..!! அந்த ஸ்வெட்டரையே வாங்கிக்கொண்டு, கடையில் இருந்து வெளியே வந்தோம். நாங்கள் வெளியே வருவதற்கும், சுட்ட சோளத்தை சுவைத்துக்கொண்டே பன்னீரும், மலரும் எதிரே வருவதற்கும் சரியாக இருந்தது.

அன்று இரவு பனிரெண்டு மணி.. ஹோட்டல் அறை.. இரவு விளக்கின் மந்தமான வெளிச்சம்..!! நானும் கயலும் இரண்டாவது முறையாக இன்பத்தின் உச்சத்தை தொட்டு மீண்டு வந்திருந்தோம். கயல் பாத்ரூமுக்குள் புகுந்திருக்க, தண்ணீர் கொட்டும் சப்தம் மட்டும் வெளியே கேட்டுக் கொண்டிருந்தது. களைத்துப் போயிருந்த நான் கட்டிலில் நிர்வாணமாக படுத்திருந்தேன். கயலின் பெண்மை எனக்குள் ஏற்படுத்தியிருந்த சுகம், என் உடலை விட்டு வெளியேற மறுத்து, இன்னும் உள்ளேயே உறைந்திருந்தது.

உடம்பில் இப்போது லேசாக குளிரெடுக்க ஆரம்பித்தது. இத்தனை நேரம் நானும் கயலும், உடைகளை உதறி உடல்களை உரசிக்கொண்டு கிடந்த போது, மேனியெங்கும் ஏறியிருந்த ஒரு உன்னத வெப்பம்.. மெல்ல மெல்ல இப்போது நீங்க ஆரம்பித்தது. சற்றுமுன் அவிழ்த்துப் போட்ட உடைகளை, இப்போது நான் எடுத்து அணிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஷார்ட்ஸ்.. டி-ஷர்ட்.. அப்புறம் கயல் வாங்கி தந்த அந்த ஸ்வெட்டர்..!! கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டேன். கயல் வந்து என் மீது சாய்ந்து கொள்வதற்காக காத்திருந்தேன்.

சில வினாடிகளிலேயே பாத்ரூமுக்குள் இருந்து வெற்று மார்புடன் கயல் வெளிப்பட்டாள். வெளியே வந்ததுமே ஒரு மாதிரி வெட்கமும், குறும்புமாய் என்னை பார்த்து புன்னகைத்தாள். நானும் பதிலுக்கு புன்னகைத்தேன். எங்கள் இருவருடைய புன்னகையிலும்.. காதலும், காமசுகத்தில் விளைந்த திருப்தியும் கலந்து கிடந்தது..!! கட்டிலில் வந்து அமர்ந்தவள், வாட்டர் கேன் திறந்து, நிறைய தண்ணீரை தொண்டைக்குள் வார்த்துக் கொண்டாள். அவள் குடித்து முடிக்கும் வரை அவளது தொண்டைக்குமிழ் ஏறி இறங்குவதை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் குடித்து முடித்ததும் குறும்பாக கேட்டேன்.

“ரொம்ப தாகமோ..??”

“ம்ம்ம்.. ரொம்ப டயர்டாயிடுச்சு..!!”

“நீ என்ன பண்ணின.. டயர்ட் ஆகுறதுக்கு..? நீ சும்மாதான படுத்திருந்த.. எல்லா வேலையும் நாந்தான பார்த்தேன்..??” சொல்லிவிட்டு நான் கண்சிமிட்ட, அவள் அழகாக வெட்கப்பட்டாள்.

“ச்சீய்.. அசிங்க அசிங்கமா பேசாதீங்க..!!”

“ஓ..!! அம்மணிக்கு அசிங்க அசிங்கமா பண்றது மட்டுந்தான் புடிக்குமோ..??”

“ஐயோ… ச்சை… உங்களை…”

என்று போலியான கோபத்துடன் கயல் என் மீது பாய்ந்தாள். ‘ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்..’ என்று செல்லமாக சிணுங்கியவாறே, என் மார்பில் முஷ்டியை மடக்கி குத்தினாள். நானும் ‘ஹ்ஹா.. ஹ்ஹா.. ஹ்ஹா..’ என்று சிரித்தவாறு, அவளை வளைத்து இழுத்து என்னோடு அணைத்துக் கொண்டேன். அவளுடைய பழுத்த மார்புகள் ரெண்டும், என் நெஞ்சில் பஞ்சு மூட்டைகளாய் அழுந்தி ஒத்தடம் கொடுத்தன. இதமும் சுகமுமாய் இருந்தது எனக்கு..!!

கயல் என் மார்பில் முகம் சாய்த்து படுத்துக் கொண்டாள். நான் அவளுடைய நெற்றியில் ‘இச்.. இச்.. இச்..’ என முத்தமிட்டவாறே இருந்தேன். எனது கை அவளது வெற்று முதுகை தடவிக் கொண்டிருக்க, அவளது விரல்கள் என் மார்பை தேய்த்துக் கொண்டிருந்தன. கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல், அப்படியே அமைதியாக கிடந்தோம். அப்புறம் அந்த அமைதியை குலைத்த வண்ணம், கயல் திடீரென சொன்னாள்.

“இது நான்தான் தெரியுமா..?”

“எ..எது..?” நான் புரியாமல் கேட்டேன்.

கயல் இப்போது முகத்தை நகர்த்தி, என் மார்பின் இடது புறத்தில் ‘இச்ச்..!!!’ என்று முத்தமிட்டாள். அப்புறம் ஆட்காட்டி விரலால் ஸ்வெட்டரில் இருந்த அந்த மீன் எம்ராய்டரியை, வட்டமிட்டுக் கொண்டே காதலும் ஏக்கமுமாய் சொன்னாள்.

“இந்த மீன்..!! இது நான்தான் தெரியுமா..?? திஸ் இஸ் கயல்..!!!! நான் மட்டுந்தான் இங்க இருக்கணும்.. எப்போவும்..!!”

உருக்கமாக சொன்ன என் மனைவியின் மீது, உள்ளத்துக்குள் காதல் எனக்கு பீறிட்டு கிளம்பியது. என் கண்கள் கூட லேசாய் கலங்கின. கயலை வாரி இழுத்து, என்னோடு அணைத்துக் கொண்டேன். அவளுடைய உதடுகளில் அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்தேன். என்னுடைய அன்பின் ஆவேசத்தில், அவள் ஆனந்தமாய் திணறிக் கொண்டிருந்தாள். இப்போது நான் என் மனைவியை பார்த்து உறுதியான குரலில் சொன்னேன்.

“உன்னைத் தவிர வேற யாருக்கும் இங்க இடம் இல்லடி அம்மு.. எப்போவும்..!! இது சத்தியம்..!!”

சொல்லிக்கொண்டே நான் என் வலது கையை கயலின் தலை மீது வைத்தேன். அவள் கண்களில் ஈரம் மின்ன.. காதலும், பெருமிதமுமாய் என்னை பார்த்தாள். சத்தியம் செய்த எனது கையை எடுத்து.. அவளது இரண்டு கைகளுக்குள்ளும் வைத்துக் கொண்டாள். இதழ்களை குவித்து.. ‘இச்.. இச்.. இச்..’ என என் கைக்கு முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள்.. நெடுநேரம்..!! அப்புறம் என் மார்பில் தலை சாய்த்து நிம்மதியாக உறங்கிப் போனாள்.

பழைய நினைவுகளில் இருந்து நான் மீண்டு வந்தேன். ஆல்பத்தை மூடி ஓரமாக வைத்தேன். கயல் இப்போதும் நிம்மதியாக உறங்கித்தான் போயிருக்கிறாள்.. நிரந்தரமாகவும்..!! கயல் எந்த மாதிரி ஒரு தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தி சென்றிருக்கிறாள் என்று, உங்களால் இப்போது உணர்ந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். மலர் என் மீது மாசற்ற அன்பு வைத்திருக்கிறாள் என்பதில் எனக்கும் சந்தேகம் இல்லை. ஆனால்.. கயலுக்கென்று முடிவான என் இதயத்தை.. இன்னொருத்தியிடம் பிய்த்துக் கொடுக்க என் மனம் ஒப்பவில்லை. மலராகவே மனதை மாற்றிக் கொண்டால் நல்லது என்று தோன்றியது. ‘மலர் மாறிவிடுவாள்.. எல்லாம் நல்லபடியாக நடக்கும்..’ என்று மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேன். சற்று நிம்மதியாக இருந்தது. உறங்கிப் போனேன்.

அடுத்த நாள் காலையில், ‘காஃபி போடவா..? டீயா..?’ என்று முகமெல்லாம் மலர்ச்சியாய் புன்னகைத்த மலரை பார்க்கும்போது, நிஜமாகவே மிகவும் உற்சாகமாக இருந்தது. இரண்டு நாட்களாய் இருந்த இறுக்கம் தளர்ந்து, இப்போது சகஜ நிலைக்கு திரும்பியது மாதிரி தோன்றியது. ‘இப்படியே சில நாட்கள் நகரட்டும்.. மலர் கொஞ்சம் கொஞ்சமாய் தன் மனதை மாற்றிக் கொள்ளுவாள்.. அவளாக மாறாவிட்டாலும் நாமே பேசி பேசி, அவளுடைய மனதை கரைக்க முயற்சி செய்யலாம்..’ என்று நினைத்தேன். ‘காஃபி..!!’ என்றேன், நானும் புன்னகைத்தவாறே.

அப்புறம் வந்த இரண்டு மூன்று வாரங்கள் சுமுகமாகவே கழிந்தன. மலர் ஏற்படுத்திய பிரச்னைக்கு முந்தைய நாட்கள், எங்கள் வாழ்வில் மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தன. மலரிடமும், பன்னீரிடமும் எனக்கு எப்போதும் இருக்கும் அந்த இலகுவான, ஸ்னேஹமான சூழ்நிலை திரும்பவும் வந்தது. பகலில் பணியிடத்தில் பன்னீரிடம் கலகலப்பாக பேசிக்கொண்டேன். மாலை வீட்டுக்கு வந்ததும், மூன்று பேரும் அபியுடன் மனமகிழ விளையாடினோம். பன்னீருடைய வேடிக்கையான, நகைச்சுவையான பேச்சை கேட்டு சிரித்துக்கொண்டே, இரவு உணவு அருந்துவோம். வார இறுதி விடுமுறை நாட்களில், நான்கு பேருமாய் கோயிலுக்கோ, ஹோட்டலுக்கோ, பீச்சுக்கோ சென்று வருவோம். மிகவும் இதமாய் கழிந்தன அந்த இரண்டு மூன்று வாரங்கள்..!!

பெரிதாக முக்கியத்துவம் இல்லாதது போல தோன்றினாலும், அந்த நாட்களில் நான் ஒரு விஷயத்தை கவனிக்க ஆரம்பித்திருந்தேன். மலர் என்னிடம் நடந்து கொள்ளும் முறைகள்..!! கண்ணிலோ, வார்த்தையிலோ காதலை காட்ட மாட்டேன் என்று அவள் சொல்லியிருந்தாலும், அவளது செய்கைகள் அனைத்திலும் என் மீதான காதலும், கனிவும் செறிந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. Mulai Tamil Hot Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top