கண்ணாமூச்சி ரே ரே – 38

(Tamil Hot Stories - Kannamoochi Rae Rae 38)

Raja 2014-06-15 Comments

Tamil Hot Stories – “குறிஞ்சியை பத்தி ஆராய்ச்சி பண்ண போறேன்னு சொல்லிட்டு.. இந்த ரெண்டு பொண்ணுகளும் புதுசா எதையோ கண்டு பிடிச்சிடுச்சுங்களோ.. அதனால ஏதாவது ஆபத்தோன்னு தோணுது..!!”

“அல்ரெடி எனக்கும் அந்த டவுட் வந்துடுச்சு..!!!”

16

“ம்ம்..!!”

“ஹ்ம்ம்..!! அடுத்து எங்க ஆதிரா..?? வீட்டுக்கா.. இல்ல வேற எங்கயும் போகனுமா..??”

“சிங்கமலை வரை போயிட்டு வீட்டுக்கு போலாமா..??”

“சிங்கமலைக்கா.. அங்க எதுக்கு..??”

“காலைல தாமிரா வரைஞ்ச ஒரு ஓவியத்தை பார்த்தேன் கதிர்..!! அதே மாதிரி ஓவியத்தை சிங்கமலைல நான் பாத்திருக்குறேன்.. இப்போ அதை திரும்ப பாக்கணும் போல இருக்கு..!! புதுசா ஏதாவது ஞாபகம் வருதா பாக்கலாம்..!!”

“ஓ..!! சரிங்க.. போலாம்..!!”

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இருவரும் காரில் கிளம்பினார்கள்.. சிங்கமலையை நோக்கி பயணித்தார்கள்..!! சிங்கமலையின் உச்சி வரைக்கும் காரில் செல்ல முடியாது.. ஒரு கி.மீ தொலைவிலேயே காரை நிறுத்திவிட்டு, இருவரும் நடந்தேதான் சிங்கமலை உச்சியை அடைந்தார்கள்..!!

சிங்கமலையில்.. சிங்கமுக சிலைக்கு பக்கவாட்டில்.. மலையை குடைந்து உருவாக்கப் பட்டிருந்தது அந்த குகை.. மதியநேரத்தில் கூட சுத்தமாக வெளிச்சமற்றுப் போய் காட்சியளித்தது..!! கையோடு எடுத்து வந்திருந்த டார்ச்லைட்டின் வெளிச்சத்திலேதான்.. குகைச்சுவர்களில் வரையப்பட்டிருந்த அந்த உளிச்சித்திரங்களை.. ஆதிரா கதிருக்கு காட்டினாள்..!!

குறிஞ்சியின் வாழ்க்கை நிகழ்வுகளை குறிப்பால் உணர்த்துவதுபோல பொறிக்கப்பட்ட சித்திரங்கள்..!! கல்யாணமாகி கணவனுடன் அகழிக்கு வருகிற குறிஞ்சி.. அவர்களது தாம்பத்யம், இல்வாழ்க்கை.. கணவனின் பிரிவு.. புவனகிரியின் ஆக்கிரமிப்பு.. தீர்த்தபதியின் நட்பு.. ஊர்க்கூட்டம்.. தாமிரா வரைந்து வைத்திருந்த அதேவகை சித்திரம்.. தீப்பற்றி எரிகிற உடலுடன் ஆற்றில் குதிக்கிற குறிஞ்சி..!! முக்கியமான நிகழ்வுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருந்தன..!!

அவற்றை கவனமாக பார்த்துக் கொண்டிருந்த ஆதிராவின் முன்பாக.. திடீரென தாமிரா தோன்றினாள்.. ஒருவருடம் முன்பாக அக்காவுக்கு உரைத்ததையே இப்போதும் உரைத்தாள்..!!

“நல்லா பாரு.. நான் சொன்னப்ப நம்பலைல.. பாரு இதெல்லாம்..!! நானா இதெல்லாம் வரைஞ்சேன்..?? யாரோ விஷயம் தெரிஞ்சவங்கதான் இதெல்லாம் வரைஞ்சிருக்காங்க.. நம்ம பாட்டனார் எழுதி வச்சதோடவும், நான் சொன்னதோடவும் எவ்வளவு கரெக்டா மேட்ச் ஆகுது பாரு..!! நான்தான் சொன்னேன்ல.. குறிஞ்சி ரொம்ப அப்பாவிக்கா.. நல்லவ..!!” அக்காவிடம் சொல்லிக்கொண்டே, கையிலிருந்த கேமராவால் அந்த சித்திரங்களை, புகைப்படச் சுருளுக்குள் சிறைபிடித்தாள் தாமிரா..!!

“இத்தனை வருஷமா இந்த ஊர்ல இருந்திருக்கேன்.. இதெல்லாம் என் கண்ணுலேயே பட்டதே இல்ல ஆதிரா..!!” கதிர் திடீரென பேசி ஆதிராவை நனவுக்கு கொண்டுவந்தான்.

“ஹ்ம்ம்.. உங்களுக்கு மட்டும் இல்ல கதிர்.. இந்த ஊர்ல யார் கண்ணுக்குமே இதெல்லாம் தெரியல.. எனக்கும் சேர்த்துதான் சொல்றேன்..!! தாமிரா ஒருத்திக்குத்தான் எல்லாம் தெரிஞ்சிருக்கு..!!”

17

பேசிக்கொண்டே இருவரும் அந்த குகையை விட்டு வெளியே வந்தார்கள்.. மலைச்சரிவில் இறங்கி, கார் இருந்த திசையை நோக்கி மெல்ல நடந்தார்கள்..!! கதிர் சற்றே விரைவாக முன்னால் நடக்க.. ஏதோ ஒரு சிந்தனையுடன் ஆதிரா அவனுக்கு பின்னால் நடந்து கொண்டிருந்தாள்..!! அப்போதுதான் அவளுடைய செல்ஃபோன் கிணுகிணுத்தது..!!

ஆதிரா கைப்பை திறந்து செல்ஃபோனை வெளியே எடுத்தாள்.. ஏதோ அன்னோன் நம்பரில் இருந்து கால் வந்திருந்தது.. எதுவும் யோசிக்காமல் கால் பிக்கப் செய்து காதில் வைத்தாள்..!!

“ஹலோ..!!” என்றாள்.

“க்க்ர்ர்க்க்…க்க்கர்ர்ர்க்க்க்க்… க்க்கர்ர்ர்க்க்க்க்… க்க்ர்ர்க்க்…!!!!”

அடுத்தமுனையில் அந்த ஓசை.. எந்த மாதிரியான ஓசை என்றே புரிந்துகொள்ள முடியாத மாதிரியான ஒருவகை வினோத ஓசை..!!

“ஹலோ.. யாரு..??”

“க்க்ர்ர்க்க்… கண்… க்க்ர்ர்க்க்… க்க்கர்ர்ர்க்க்க்க்… ர்ர்ர்ர்ர்ர்ஈஈ..!!!!”

அந்த ஓசையை கேட்டு ஆதிரா இப்போது எரிச்சலானாள்..!!

“ஹலோ.. யாருன்னு கேக்குறேன்ல..?? யாரு வேணும் உங்களுக்கு..??”

என்று குரலை உயர்த்தி கத்தினாள்.. அவள் அவ்வாறு கத்தியதும், அடுத்த முனையில் இப்போது அந்த ஓசை கொஞ்சம் பிசிறில்லாமல் ஒலித்தது.. ஆதிராவும் சற்று காதை உன்னிப்பாக்கி கேட்க.. ஒலித்த வார்த்தைகள் அவளுடைய காதில் தெளிவாக வந்து விழுந்தன..!!

“க்க்க்க்கண்ணாமூச்சி.. ர்ர்ர்ர்ரே.. ர்ர்ர்ர்ரே..!!”

அவ்வளவுதான்..!!!! அந்த வார்த்தைகளை கேட்டு ஆதிரா அப்படியே அதிர்ந்து போனாள்..!! முகத்தில் எக்கச்சக்கமாய் ஒரு திகைப்பு கொப்பளிக்க.. அந்த செல்ஃபோனையே மிரட்சியாக பார்த்தாள்..!!

ஓரிரு வினாடிகள்..!! பிறகு ஏதோ ஞாபகம் வந்தவளாய்.. பதற்றத்துடன் செல்ஃபோனை இயக்கி கால் ஹிஸ்டரி எடுத்துப் பார்த்தாள்..!! அகழி வந்த முதல் நாளன்று.. அவளது செல்ஃபோனுக்கு வந்த அதே கரகர குரல் கால்.. அதே எண்ணில் இருந்துதான் இந்த காலும் வந்திருந்தது..!! யாராக இருக்கும் என்று குழப்பமாக நெற்றி தேய்க்க ஆரம்பித்தாள்..!!

அதற்குள்ளாகவே.. அவளது முகமாற்றத்தை கவனித்திருந்த கதிர்.. இப்போது அவளை நெருங்கியவாறே கேட்டான்..!!

“எ..என்னாச்சுங்க ஆதிரா..??”

“யா..யாரோ எனக்கு கால் பண்ணி விளையாடுறாங்க கதிர்..!!”

“யார் அது..??”

“யார்னு தெரியல.. ஸம் அன்னோன் நம்பர்..!!”

“ஓ.. என்ன விளையாடுறாங்க..??”

“எ..என்ன சொல்றாங்கன்னே புரியல.. கரகரன்னு ஒரே சத்தம்..!!”

“ம்ம்..!! நீங்க திரும்ப கால் பண்ணி பாத்திங்களா..??”

“இல்ல..!!”

“பண்ணி பாருங்க..!!”

ஆதிரா இப்போது அந்த எண்ணுக்கு திரும்ப டயல் செய்து பார்த்தாள்..!! ‘நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்போது உபயோகத்தில் இல்லை’ என்று பதில் வந்தது..!! அந்த பதிலில் ஆதிரா இன்னும் குழம்பிப் போனாள்..!!

“என்னாச்சுங்க..??” கதிர் ஆர்வமாய் கேட்டான்.

“இந்த நம்பர் இப்போ யூஸ்ல இல்லைன்னு வருது..!!”

“ஓ..!! எங்க.. அந்த நம்பரை கொஞ்சம் சொல்லுங்க..!!”

ஆதிரா சொல்ல சொல்ல.. கதிர் தனது செல்ஃபோனில் அந்த எண்ணை டைப் செய்து கொண்டான்.. டைப் செய்த வேகத்தில் அப்படியே டயல் செய்து பார்த்தான்..!! ஆதிராவுக்கு கிடைத்த அதே ரெஸ்பான்ஸ்தான் அவனுக்கும் கிடைத்தது.. அவனுமே குழம்பிப் போனான்..!!

“எனக்கும் அதேதான் சொல்லுது..!!”

சொல்லிவிட்டு காலை கட் செய்ய சென்ற கதிர்.. எதேச்சையாகத்தான் தனது செல்ஃபோன் டிஸ்ப்ளே பார்த்தான்.. பார்த்ததுமே பக்கென்று ஒரு அதிர்ச்சியை உள்வாங்கினான்.. கண்ணால் காண்பதை நம்ப முடியாமல், இமைகளை அகல விரித்து அந்த செல்ஃபோனையே உற்றுப்பார்த்தான்..!!

“என்னங்க ஆச்சு..??”

ஆதிரா கேட்க, கதிர் இப்போது தனது செல்ஃபோன் ஸ்க்ரீனை அவள்பக்கமாக திருப்பி காட்டினான்.. திக்கித் திக்கி திணறலாக சொன்னான்..!!

“நீ..நீங்க தந்த நம்பர்.. உ..உங்களோட ஓல்ட் நம்பர் ஆதிரா..!!”

இப்போது ஆதிராவும் அரண்டுபோய் அந்த செல்ஃபோனையே வெறித்தாள்..!!

“வாட்..????”

OLYMPUS DIGITAL CAMERA

அத்தியாயம் 17

ஆதிரா உச்சபட்சமானதொரு குழப்பத்தில் உழன்று தவித்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..!! அகழி வந்ததிலிருந்தே நடந்த சில சம்பவங்கள் அவள் மனதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தன..!! இப்போது, அவளது கைபேசிக்கு வந்திட்ட மர்மமான அழைப்பு.. அவளது பழைய எண்ணிலிருந்து வருகிறது என்பதை அறிந்ததும்.. மனதில் ஏற்பட்டிருந்த அந்த கலக்க அதிர்வுகள் இன்னுமே வீரியமடைந்திருந்தன.. புத்திக்கு புலப்படாத ஒரு குழப்பச்சுழலுக்குள் சிக்கித் தவிப்பது போன்றொரு உணர்வு..!!

தனது பழைய கைபேசி எண்ணை ஆதிரா கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தாள்.. அதுவுமல்லாமல், அழைப்பு வந்த இரண்டுமுறையுமே அந்த எண்ணை சற்று கவனித்துப்பார்க்கவும் தவறியிருந்தாள்..!! அதனால்.. பார்த்ததுமே அவளுடைய பழைய எண் என்பது, சட்டென அவளுக்கு உறைக்கவில்லை..!!

இப்போது கதிர் சொன்னபிறகு.. அந்த எண்ணை ஓரிரு வினாடிகள் உற்று நோக்கியபிறகு.. ஒருவருடத்திற்கு முன்பு அவள் உபயோகித்த எண்தான் அது என்கிற உண்மை.. அவளது மூளையை பலமாக அறைந்தது..!! அந்த உண்மை புத்திக்கு புலப்பட்டதுமே.. அவளது தலைக்குள் கிர்ர்ர்ரென்று ஒரு குடைச்சல்.. மயக்கம் வரும்போல உடலில் ஒரு தடுமாற்றம்.. கண்களையும் முகத்தையும் ஒருமாதிரி சுருக்கிக் கொண்டாள்..!!

“எ..எப்படி கதிர் இது.. எ..என்னோட பழைய நம்பர்ல இருந்து.. எ..எனக்கு ஒன்னும் புரியல..!!”

“எனக்கும் எதுவும் புரியலைங்க ஆதிரா..!! கால் பண்ணினா ‘நாட் இன் யூஸ்’ன்னு வேற வருது..!!”

“ம்ம்ம்ம்..!!”

“மைசூர் போனதுல இருந்தே இந்த புது நம்பர்தான் யூஸ் பண்றீங்களா..??”

“ஆமாம்..!!”

“உ..உங்களோட பழைய ஸிம்மை என்ன பண்ணுனிங்க..??”

“அ..அது.. என்னோட பழைய மொபைல் தொலைஞ்சு போனப்போ.. அந்த ஸிம்மும் சேர்ந்து தொலைஞ்சு போயிருக்கனும்..!!”

“ஓ..!! மொ..மொபைல் எப்படி தொலைஞ்சு போச்சு..??”

“தெ..தெரியலை கதிர்.. எனக்கு ஞாபகம் இல்ல.. ஒருவருஷமா நடந்த எதுவுமே எனக்கு சுத்தமா ஞாபகம் இல்ல.. அந்த மொபைல் எப்படி தொலைஞ்சு போச்சுன்னு கூட மறந்துடுச்சு..!!” ஆதிரா அவ்வாறு பரிதாபமாக சொல்லவும், கதிர் அவளது இயலாமையை ஓரளவுக்கு புரிந்துகொண்டான்.

“ஒ..ஒருவேளை சிபிக்கு தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்கா..?? அவர்ட்ட கேக்கலாமா..??”

“இ..இல்ல.. அவருக்கும் தெரியல.. அல்ரெடி நான் கேட்டுட்டேன்..!! ‘தொலைஞ்சு போச்சு’ன்னு மட்டுந்தான் நான் அப்போ அவர்ட்ட சொல்லிருக்கேன்.. எப்படி தொலைஞ்சு போச்சுன்னு சொல்லலைன்னு சொன்னார்..!!”

“ம்ம்ம்ம்.. அந்த நம்பர்ல இருந்து எப்படி.. ஒரே கொழப்பமா இருக்கு ஆதிரா..!!”

“எ..எனக்குந்தான் கதிர்..!!”

குழம்பிய மனநிலையுடனே இருவரும் சிங்கமலையில் இருந்து புறப்பட்டார்கள்.. காரை நிறுத்தியிருந்த சாலையை அடையும் மலைச்சரிவில் இறங்கி, மெல்ல நடைபோட்டார்கள்..!! சுற்றிலும் பச்சைப் பசேலென, சூரிய வெளிச்சம் குறைவான பாதை..!! அடர்த்தியாய் வளர்ந்திருந்த மரங்கள்.. ஆங்காங்கே முளைத்த முட்புதர்கள்..!! அந்த முட்புதர்களை.. அனிச்சை செயலாய் கைகொண்டு விலக்கியவாறே.. ஆதிரா மலைச்சரிவில் இறங்கிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய காலில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தில்.. அவ்வப்போது ‘சுருக்.. சுருக்’ என்று ஒரு வலி..!! Sunni Tamil Hot Stories

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top