ஐ ஹேட் யூ பட் – 40

(Tamil Hot Stories - I Love You But 40)

Raja 2013-11-07 Comments

அசோக் பேசிமுடித்து அமைதியானான். ப்ரியாவின் முகத்தையே ஆசையாக பார்த்தான். அவளும் இப்போது அசோக்கையே அன்பு சொட்ட பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் வார்த்தைகளை தொலைத்தவர்களாய், அப்படியே ஒருவரை ஒருவர் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கைவிரல்கள் மட்டும் ஒன்றோடொன்று பிண்ணிக்கொண்டு கிடந்தன. எவ்வளவு நேரம் என்பதை அவர்கள் அறியவில்லை. அப்புறம் டேபிள் மீதிருந்த டெலிபோன் கனைத்துத்தான் அவர்களுடைய கவனத்தை கலைக்கக் வேண்டி இருந்தது. டிஸ்ப்ளே பார்த்த ப்ரியா, அசோக்கிடம் திரும்பி அவசரமாக சொன்னாள்.

“ஹேய்.. யு.எஸ். கால்டா..!! பேச ஆரம்பிச்சா ரொம்ப நேரம் ஆகும்னு நெனைக்கிறேன்..!!”

“ஓ..!!”

“நீ வேணா கெளம்பு.. நாம நாளைக்கு பேசலாம்.. காலைல வீட்டுக்கு வர்றேன்.. சரியா..??”

“ம்ம்.. சரி ப்ரியா..!!” சொல்லிக்கொண்டே அசோக் எழுந்தான்.

“கவனமா போ.. குட்நைட்..!!”

“ம்ம்.. குட்நைட் ..!!”

புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக் அந்த அறையிலிருந்து வெளியேறினான். அவன் வெளியேறியதும், ப்ரியா ரிஸீவர் எடுத்து காதில் வைத்துக்கொண்டு ‘ஹலோ..!!’ என்றாள்.

அத்தியாயம் 25

அன்று இரவு.. அசோக் நீண்ட நேரம் தூக்கம் வராமல்.. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்..!! ப்ரியாவின் நினைவுகளே அவனுடைய நெஞ்சில் அலை அலையாய் வந்து மோதிக் கொண்டிருந்தன. அவளுடய கனிவான பேச்சு.. காதலான பார்வை.. கவின்மிகு புன்னகை..!! ‘என் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள்.. எனக்காக எப்படியெல்லாம் உருகுகிறாள்.. நானுந்தான் அவளை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கிறேன்.. ச்சே.. பாவம் அவள்..!!’

கோவிந்தும், நேத்ராவும் கூட அடிக்கடி அவன் மனதில் வந்து போனார்கள். ‘அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு காதல் வைத்திருக்கிறார்கள்.. என்ன அழகாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்துக் கொள்கிறார்கள்.. அடுத்தவரின் வளர்ச்சியிலும், சந்தோஷத்திலும் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார்கள்..?? காதலிப்பவர்களின் நிலையை உயர்த்திப் பார்ப்பதுதானே உண்மையான காதலாக இருக்க முடியும்..?? ப்ரியாவின் நிலை உயர்ந்தபோது, அதற்காக நான் ஏன் மகிழ்ந்து போயிருக்க கூடாது..?? அந்த மகிழ்ச்சி எனக்கு இல்லாமல் போனதால்தானே எல்லா பிரச்சினையும்..??’

தீவிர சிந்தனை அவனுடைய உறக்கத்தை திருடியிருந்தது. பிறகு அவனையும் அறியாமல் தூக்கத்தின் பிடியில் சிக்கிக்கொள்ள, பின்னிரவு இரண்டு மணி ஆயிற்று. எரிச்சலெடுக்கும் விழிகளுடன், காலையில் சற்று தாமதமாகவே எழுந்தான். எழுந்ததுமே குளித்துவிட்டு, ஆபீசுக்கு கிளம்பி தனது அறையை விட்டு வெளியே வந்தான்.

“என்ன.. இன்னைக்கு தொரை ஒன்பது மணி வரை தூங்கிட்டாரு..??” செல்வி காபியை நீட்டிக்கொண்டே கேட்டாள்.

“நைட்டு சரியா தூக்கம் இல்ல அண்ணி..!! ப்ரியா இன்னும் வரலையா..??”

“இன்னும் வரலைடா.. ஆளைக்காணோம்.!!”

அசோக் காபியை எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்கு சென்றான். ப்ரியாவின் முகத்தை உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது. டேபிள் முன்பாக அமர்ந்துகொண்டான். ஓரமாக மூடி வைக்கப்பட்டிருந்த அவனது லேப்டாப்பை தன் பக்கமாக இழுக்க, டேபிள் மீதிருந்த ஒரு புத்தகம் தவறி கீழே விழுந்தது. அந்த புத்தகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் ஒன்றும் வெளியே நழுவி விழுந்தது. குனிந்து அதை எடுத்தான். ப்ரியாவின் புகைப்படம்..!! முன்பொரு நாள் ராஜேஷ் அவனிடம் காட்ட நினைக்க, அதை பார்க்காமலே விசிறி எறிந்தானே.. அதே புகைப்படம்..!! மஞ்சள் நிற புடவையுடன் மந்தகாசமாக புன்னகைக்கிற ப்ரியாவின் புகைப்படம்..!!

அசோக் ப்ரியாவை கையில் அள்ளிக்கொண்டான். காபியை உறிஞ்சிக்கொண்டே அவளுடைய அழகு கொஞ்சும் முகத்தை சிறிது நேரம் ஆசையாக பார்த்தான். அவனுடைய மூளை தனியாக ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தது. அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு எழுந்தான். நடந்து ஹாலுக்கு வந்தான். சோபாவில் அமர்ந்து ந்யூஸ் பேப்பர் புரட்டிக்கொண்டிருந்த ராஜேஷின் முன்பாக வந்து நின்றான். தனக்கு முன் நிழலாட ராஜேஷ் நிமிர்ந்து பார்த்தான். தம்பி என்று தெரிந்ததும், சற்றே குழப்பமாக நெற்றியை சுருக்கி..

“என்னடா..??” என்றான்.

“எனக்கு உடனே கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு..!!”

“என்னது..???”

“நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணை.. ஒரு வருஷத்துக்குள்ள செலக்ட் பண்ணி.. உனக்கு சொல்றேன்னு சொன்னேன்ல..??”

“ம்ம்..”

“இவதான் அந்தப்பொண்ணு..!!” அசோக் கையிலிருந்த ஃபோட்டோவை அண்ணனிடம் நீட்ட, அதை பார்க்காமலே ராஜேஷ் டென்ஷனாக சீறினான்.

“இங்க பாருடா.. நீ இழுத்த இழுப்புக்குலாம் இனி எங்களால ஆட முடியாது..!! ப்ரியாதான் பொண்ணுன்னு நாங்க எல்லாம் முடிவு பண்ணிட்டோம்.. அந்தப்பொண்ணும் உன் மேல உயிரையே வச்சிருக்குறா.. அவளை விட வேற நல்ல பொண்ணு யாருடா உனக்கு கெடைப்பா..?? நல்லா சொல்றேன் கேட்டுக்கோ.. அவளை கல்யாணம் செய்துக்குறதா இருந்தா.. எங்கிட்ட சொல்லு.. இல்ல.. உன் இஷ்டந்தான் உனக்கு முக்கியம்னா.. நீ என்ன வேணா பண்ணிக்கோ.. எவளை வேணா கட்டிக்கோ.. எப்படியோ போ.. எங்ககிட்ட சொல்லிட்டு இருக்காத..!!”

“ஹாஹா.. மொதல்ல ஃபோட்டோவை பாத்துட்டு அப்புறம் கத்துடா.. லூஸு..!!” அசோக் சிரிப்பாக சொல்ல, அப்புறந்தான் ராஜேஷ் ஃபோட்டோவையே பார்த்தான். உடனே அவன் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. Pundai Nakkum Tamil Hot Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top