மலரே என்னிடம் மயங்காதே – 4

(Tamil Hot Sex Stories - Malarae Ennidam Mayangathae 4)

Raja 2014-02-13 Comments

Tamil Hot Sex Stories – “பரவால்ல.. வாங்கிக்கோ..”

“ம்ம்ம்.. சரித்தான்..!!”

“மொழம் எத்தனை ரூபாம்மா..?”

1

“பதினஞ்சு ரூபாதான் ஸார்..”

“சரி.. ஒரு ரெண்டு மொழம் குடுங்க..”

நான் பர்ஸ் திறந்து பணம் நீட்ட, அந்தப் பெண்மணி இரண்டு முழம் பூ அளந்து, பிளேடால் கட் செய்தாள். அதை பந்தாக உருட்டி மலரிடம் நீட்டிக்கொண்டே, வாயெல்லாம் பல்லாக சொன்னாள்.

“மஹாலட்சுமி மாதிரி இருக்குற கண்ணு.. உன் பேர் என்ன தாயி..?”

“ம..மலர்..!!”

“அதுசரி.. பேர்ல பூவை வச்சிக்கினுதான்.. கூடைல இருக்குற பூ வேணான்னியா..?”

அந்தப் பெண்மணி சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தாள். ஆனால் அவள் அடித்த ஜோக்குக்கு, எங்கள் இருவரிடமும் லேசான ஒரு புன்முறுவல் மட்டுமே வெளிப்பட்டது.

மீண்டும் நடந்து வீட்டுக்கு வந்தோம். மலர் இட்லி, தேங்காய் சட்னி சமைத்திருந்தாள். அபியின் பிறந்த நாள் என்று, அடிஷனலாக கேசரி செய்திருந்தாள். நாக்கில் படும்போது கேசரி இனிப்பாகவே இருந்தது. தொண்டையில் இறங்கும்போதுதான்.. கயலின் நினைவுகளை சேர்த்துக்கொண்டு இறங்க.. கசந்தது..!! கஷ்டப்பட்டு சாப்பிட்டு விட்டு, காரில் நான் ஆபீசுக்கு கிளம்பினேன்.

வேளச்சேரியில் இருந்து தரமணி செல்லும் சாலையில் இருக்கிறது எங்கள் கம்பெனியின் ப்ரொடக்ஷன் யூனிட்.. பள்ளிக்கரணையில் இருந்து காரில் கிளம்பினால், கால் மணி நேரத்தில் கம்பெனி காம்பவுண்டுக்குள் புகுந்து விடலாம். இரண்டாயிரம் பேருக்கு மேல் எம்ப்ளாயிகளாக உள்ள கம்பெனி..!! 25 மில்லியனுக்கு மேல் டர்ன் ஓவர் செய்கிற கம்பெனி..!! ஃபோர்ட்.. ஸ்வராஜ் மஸ்தா.. டொயோட்டா.. மஹிந்திரா.. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்.. எல்லாம் எங்கள் மதிப்பு மிக்க கஸ்டமர்கள்..!!

ஆபீசில் அன்றும் வழக்கமான அலுவல்கள்தான். ஆனால் வழக்கத்தை விட அதிகமாக கயலின் நினைவுகள் நெஞ்செல்லாம் அடைத்திருக்க.. கவனம் சிதறியது..!! அடிக்கடி தலையை பிடித்துக் கொண்டு வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். லீவ் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விடலாமா என்று கூட தோன்றியது. அந்த மாதிரி ஒரு அமைதியில்லா மனநிலையுடனே நான் அலுவல்கள் கவனித்தேன்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது மாதிரி அமைந்தது, அன்று டைரெக்டர் உடனான மேனேஜர்ஸ் மீட்டிங். கார் என்ஜினில் உள்ள, க்ராங்க் ஷாஃப்டின் இயக்கத்துக்கு உதவக் கூடிய ஒரு பேரிங்-தான், என்னுடைய யூனிட்டில் பெருமளவு உற்பத்தியாகும் காம்போனன்ட். என்னுடைய யூனிட்டில் இருந்து உற்பத்தியாகி சென்ற பேரிங்குகள், குவாலிட்டி டிப்பார்ட்மன்ட்டில் எக்கச்சக்கமாய் ரிஜக்ட் செய்யப்பட்டு விட.. டைரெக்டரோ எனக்கு ரிவிட் அடித்தார்..!! உச்ச பட்ச டென்ஷனுக்கு நான் உள்ளானேன்..!!

மீட்டிங் முடிந்து.. திரும்ப எனது கேபினுக்குள் நுழைந்து.. ஃபைல்களை புரட்டிப் பார்க்க.. மணி என்ற லேபரின் கவனக்குறைவுதான்… ரிஜெக்ஷன் ரேட் அதிகமாக முக்கிய காரணம் என்று கண்டுபிடிக்க முடிந்தது..!! என் மனதில் இருந்த சோகம், விரக்தி, இயலாமை எல்லாம்.. மணியின் மீது கடுங்கோபமாக உருவெடுத்தது..!! ஆத்திரத்துடன் ப்ரொடக்ஷன் ப்ளான்ட்டுக்குள் நுழைந்தேன். யாரிடமோ பல் இளித்து பேசிக்கொண்டிருந்த மணியை, பயங்கர கோபத்துடன் நெருங்கினேன்.

அவன் என் முகத்தை பார்த்ததிலே சற்று மிரண்டு போயிருந்தான். அவனிடம் ஸ்க்ரூ கேஜ் தூக்கிப் போட்டு, ஒரு காம்போனன்ட்டை அளந்து, சரியான அளவு சொல்ல சொன்னேன். அவன் தடுமாறினான்..!! அளந்து பார்த்து, 0.05 எம்.எம் தவறாக சொன்னான். அவ்வளவுதான்..!! நான் காட்டுத்தனமாக கத்த ஆரம்பித்தேன். அதிகமாய் அவனுடைய தன்மானத்தை சிதைக்கும் வார்த்தைகள்..!! மொத்த ப்ளான்ட்டும் திரும்பி எங்கள் இருவரையும் பார்த்தது. மணியோ அவமானம் தாங்காமல் தலையை குனிந்து கொண்டான்.

“பேசுடா..!! வாயில என்ன கொழக்கட்டையா வச்சிருக்க..? மரம் மாதிரி நிக்கிறான் பாரு..!! சம்பளம் வாங்குறேல..? ஒழுங்கா வேலை பாக்கனும்னு அறிவில்ல..? துன்ற சோறுலாம் எப்டிடா செரிக்குது உனக்கு..??”

நான் உஷ்ணமான வார்த்தைகளை கக்கிக்கொண்டிருந்தேன். இப்போது பக்கத்து மெசினில் ட்ரில்லிங் போட்டுக் கொண்டிருந்த பன்னீர் என்னை நெருங்கினார். பன்னீர் எங்கள் கம்பெனியில் ஒரு சீனியர் லேபர்..!! இன்னும் ஐந்தாறு வருடங்களில் ரிடயர்மன்ட்..!! தொழிற்சங்கத்தில் முக்கியமான பதவியில் இருப்பவர். என்னை சமாதானம் செய்யும் குரலில் பேசினார்.

2

“சரி விடுங்க ஸார்..!! இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுடுங்க.. இனிமே கவனமா இருப்பான்..!! நான் பாத்துக்குறேன் ஸார்.. நீங்க போங்க..!!”

பன்னீரின் சாந்தமான முகமும், சமாதானமான பேச்சும் எனது வேகத்தை வெகுவாக குறைத்தது. எனது முகத்திலும் வார்த்தையிலும் கொப்பளித்த கோபம், கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது. மணியின் முகத்தையும், பன்னீரின் முகத்தையும் மாறி மாறி சில வினாடிகள் பார்த்து விட்டு, நான் அமைதியாக திரும்பி நடந்தேன்.

என்னுடைய கேபினுக்குள் புகுந்து தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தேன். மனதில் ஒரு உறுத்தல்..!! மணி மீது கோபம் கொள்ள காரணம் இருந்தது உண்மைதான். ஆனால் அந்த கோபத்தை வெளிபடுத்திய விதம் கண்மூடித்தனமானது என்று, என் மூளையில் தெளிவாக உறைத்தது. நான் இதுவரை இந்த மாதிரி நடந்து கொண்டதில்லை. எனது பர்சனல் வாழ்க்கையின் கோபதாபங்களை பணியிடத்தில் காட்டியதே இல்லை. கஷ்டமாக இருந்தது..!!

“உள்ள வரலாமா..?”

குரல் கேட்டு நான் நிமிர்ந்து பார்த்தேன். கதவை திறந்து உள்ளே எட்டிப் பார்த்தபடி பன்னீர் நின்றிருந்தார். அதுவரை சோர்ந்து போய் சேரில் அமர்ந்திருந்த நான், இப்போது சற்று சுதாரித்து.. நிமிர்ந்து அமர்ந்து கொண்டேன்.

“ம்ம்.. வா..” பன்னீருக்கு நான் அனுமதி அளிக்க, அவர் உள்ளே நுழைந்தார்.

“என்னாச்சு உனக்கு..??” என்று கேட்டவாறு எதிரில் கிடந்த சேரில் அமர்ந்தார்.

“எ..என்னாச்சு… ஒ..ஒன்னுல்லையே..” நான் சமாளிக்கும் விதமாக சொன்னேன்.

“அப்புறம் எதுக்கு அங்க வந்து காட்டுக் கத்தல் கத்துன..?”

“அவன் என்ன பண்ணிருக்கான்னு தெரியும்ல..?”

“தெரியும் அசோக்கு.. அவன் புதுசா கண்ணாலம் ஆனவன்.. கொஞ்சம் கவனம் இல்லாம இருக்குறான்.. அவனை நான் பாத்துக்குறேன் விடு..!! உனக்கு என்னாச்சுன்னுதான் கேக்குறேன்..!!”

“ப்ச்.. டைரக்டர் என்னை புடிச்சு.. காட்டு காட்டுன்னு காட்டிட்டாரு பன்னீர்.. இவனுக பண்ணுற தப்புக்குலாம்.. நான் திட்டு வாங்க வேண்டி இருக்கு..”

“இருக்கட்டும்.. ஆனா அது ஒன்னும் புதுசு இல்லையே.. டெயிலி நடக்குறதுதான..? வழக்கமா உன் ரூமுக்குள்ள கூப்பிட்டுதான புத்தி சொல்லுவ..? இன்னைக்கு என்னாச்சு..? ஏன் அப்படி நடந்துக்கிட்ட..? ப்ளான்ட்ல எல்லாம் உன்னையே மெரண்டு போய் பாத்தானுக தெரியுமா..?”

“……”

நான் பதில் பேசாமல் அமைதியாக இருந்தேன். பன்னீர் என் முகத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தார். முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டவில்லை அவர். கூர்மையாக பார்த்தார். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் அவர் மெல்ல உதடுகள் பிரித்து மெலிதாக புன்னகைக்க, நானும் இப்போது புன்னகைத்தேன். அவர் இப்போது சற்றே இறுக்கம் தளர்ந்த குரலில் சொன்னார்.

“ம்ம்ம்.. இன்னைக்கு ஏன் நீ இப்படி இருக்குறேன்னு எனக்கு புரியுது.. உன்கிட்ட எனக்கு கொஞ்சம் தனியா பேசணும்..”

“பேசு.. இங்க வேற யாரு இருக்குறா..?” நானும் இப்போது இலகுவான குரலில் சொன்னேன்.

“இப்போ வேணாம்..”

“ஏன்..??”

“ஏனா..? நான் என்ன உன்னை மாதிரியா..? எனக்கு நெறைய வேலை இருக்குதுப்பா..!!” தன் மேனேஜரான என்னிடமே நக்கல் அடித்தார் பன்னீர்.

“ஓ..!! அப்போ நான் என்ன வெட்டியா உக்காந்திருக்குறனா..?”

“அதை நான் வேற என் வாயால சொல்லனுமா..? சும்மா இந்த கம்பூட்டர் பொட்டியை தட்டிக்கினே.. காசை சொளையா அள்ளுறேல நீ..? உன்னலாம் லேத் ஓட்ட விடனும்.. அப்போ தெரியும் உனக்கு.. வேலைனா என்னான்னு..?”

“ஹ்ஹ.. ஹ்ஹ.. இங்க பாரு.. இதுலாம் வேற யார்கிட்டயாவது போய் சொல்லு..!! நாங்களும் எல்லாம் ஓட்டிருக்குறோம்.. எல்லாம் ஓட்டிட்டுத்தான்.. இன்னைக்கு மேனேஜரா வந்து உக்காந்திருக்கோம்..!! சரி.. ஏதோ பேசணும்னு சொன்னியே.. என்ன மேட்டர்னு சொல்லு..!!”

“இங்க வேணாம்.. சாயந்திரம் சரக்கு போட்டுக்கினே பேசலாம்..”

“ம்ம்ம்ம்…. சரக்கா..????? சரி.. ஒரு ஆறு மணிக்கா கெளம்பலாம்..”

“ஆறு மணிக்கா..? எனக்கு நாலு மணிக்கே ஷிஃப்ட் முடிஞ்சிடும்..!! ரெண்டு மணி நேரம் நான் என்ன பண்றது..?”

“கம்பெனிக்கு வெளில வெயிட் பண்ணு..”

“சும்மா தண்டத்துக்கு வெளில உக்காந்திருக்க சொல்றியா..? எனக்கு ரெண்டு மணி நேரம் O.T போட்டுக் கொடு..!! சும்மா இருக்குற நேரத்துல வேலை செஞ்சா.. துட்டாவது கெடைக்கும்..!!”

3

“ஹாஹா..!! சரி போ.. பிரபாகர்ட்ட சொல்லி.. உனக்கு O.T போட சொல்றேன்..”

“தேங்க்ஸ் அசோக்கு..”

“வெறும் தேங்க்ஸ் மட்டுந்தானா..?”

“வேற என்ன வேணும்..?”

Comments

Scroll To Top