மலரே என்னிடம் மயங்காதே – 10

(Tamil Hot Sex Stories - Malarae Ennidam Mayangathae 10)

Raja 2014-02-19 Comments

மலர் என்னுடைய கோபத்தில் வெலவெலத்து போயிருந்தாள். அதிர்ச்சியில் உறைந்து போய் சிலையாய் நின்றிருந்தாள். அவளுடைய கண்களில் இருந்து மட்டும், அருவி மாதிரி கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

“ஸாரித்தான்.. என்னை மன்னிச்சுடுங்க.. சத்தியமா இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்..!!”

கெஞ்சலாக ஒலித்த மலரின் குரலை மதியாமல் அவளை நான் கடந்து சென்றேன். கதவை அறைந்து சாத்தி வீட்டிலிருந்து வெளியேறினேன். காரை கிளப்பி ஆத்திரமாய் ஆக்சிலரேட்டரை மிதித்தேன். எங்கே செல்கிறோம் என்ற எண்ணம் சிறிதுமில்லாமல்.. எதிரே வந்த வளைவுகளில் எல்லாம்.. ‘சரக்.. சரக்..’ என காரை திருப்பினேன்..!!

மனம் முழுதும் கோபத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ‘எதற்கிந்த கோபம்.. ஏன் இவ்வளவு ஆத்திரம்..’ என்று கூட சரியாக எனக்கு விளங்கவில்லை. அட்ரினலின் எக்கச்சக்கமாய் சுரந்து உடம்பெங்கும் தறிகெட்டு ஓடியது. மூளை நரம்புகள் எல்லாம் சூடேறி கொதிப்பது மாதிரி தோன்றியது. தலை வலித்தது..!! கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து, ஹை ஸ்பீடில் காரை விரட்டினேன். நோக்கமே இல்லாமல் எங்கேயோ.. தூரமாக.. சென்று கொண்டே இருந்தேன்..!!

அப்புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆளே இல்லாத ஒரு இடத்தை அடைந்ததும், சாலையின் ஓரமாய் காரை ப்ரேக்கிட்டு நிறுத்தினேன். ஸ்டியரிங்கில் முகம் புதைத்து அப்படியே படுத்துக் கொண்டேன். கார்க்கண்ணாடியை மேலே ஏற்றி விட்டுக்கொண்டு, வாய் விட்டு சத்தம் போட்டு அழுதேன்..!! அழுதபடியே தூங்கிப் போனேன்..!!

ஒரு அரை மணி நேரம் அந்த மாதிரி தூங்கியிருப்பேன். அப்புறம் விழிப்பு வந்தபோது இதயத்தின் படபடப்பு வெகுவாக குறைந்திருந்தது. எங்கு இருக்கிறோம் என்று சுற்றி சுற்றி பார்த்தேன். இருட்ட ஆரம்பித்திருந்தது. வீட்டுக்கு செல்லலாம் என்று தோன்றியது. காரை திருப்பினேன். மீண்டும் பள்ளிக்கரணை நோக்கி செலுத்தினேன். இப்போது மிதமான வேகத்தில்.. மிகவும் கட்டுப்பாட்டுடன்..!!

பள்ளிக்கரணையை நெருங்கியபோதுதான் திடீரென அந்த எண்ணம் எனக்கு தோன்றியது. குடிக்க வேண்டும் என்ற எண்ணம்..!! தலை இன்னும் வலித்துக் கொண்டுதான் இருந்தது. மனம் இன்னும் அலைபாய்ந்து கொண்டுதான் கிடந்தது. ஆல்கஹால் உள்ளே சென்றால் கொஞ்சம் அமைதிப்படும் என்று தோன்றியது. என்னுடைய வீடு இருக்கும் ரோட்டுக்கு பேரலல் ரோட்டில் ஒரு பார் இருக்கிறது. அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது அங்கு நான் சென்றிருக்கிறேன். அந்த ரோட்டில்தான் இப்போது காரை செலுத்தினேன்.

என்னவென்று தெரியவில்லை.. சாலை ஒரே கும்பலாக இருந்தது..!! என்றும் காலியாக இருக்கும் சாலை, இன்று ஏன் இவ்வளவு பிஸியாக இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. மெதுவாகவே காரை நகர்த்த முடிந்தது. அந்த மாதிரி உருட்டிக்கொண்டு சென்றே பாரை அடைந்தேன். பாருக்கு எதிர்ப்புற சந்து ஒன்றில் காரை பார்க் செய்தேன். நடந்து வந்து பாருக்குள் புகுந்து கொண்டேன். குவார்ட்டர் விஸ்கி, சிகரெட், சைடிஷ் வாங்கிக்கொண்டு ஓரமாய் கிடந்த டேபிளில் அமர்ந்து கொண்டேன். புகை விட்டபடியே, பொறுமையாக மது அருந்த ஆரம்பித்தேன்.

இன்று மலரிடம் நான் ஆவேசமாய் நடந்து கொண்ட காட்சியே.. மறுபடியும் மறுபடியும் என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது..!! ஒரே குழப்பமாய் இருந்தது..!! ‘யார் மீது தவறு..? என் மீதா..? அவள் மீதா..?’ எதுவுமே புரியாத மாதிரியான குழப்பம்..!! ஆனால் ஒரே ஒரு விஷயம்.. ‘ஸாரித்தான்..’ என்று மலர் வடித்த கண்ணீர் மட்டும் என் மனதை திரும்ப திரும்ப வலிக்க செய்து கொண்டிருந்தது..!!

“ஹலோ ஸார்.. எப்படி இருக்கீங்க..??”

குரல் கேட்டு நான் திரும்பி பார்த்தேன். ஷ்யாம் நின்றிருந்தான். பக்கத்து வீட்டு ஆண்ட்டியின் மகன். மலர் கூட இவனிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாள் என்று முன்பு சொன்னேனே. அவன்தான்..!! இவனுக்கு குடிப்பழக்கம் கிடையாதே..? இவன் என்ன செய்கிறான் இங்கே..? நான் குழப்பத்தை வெளியே காட்டாமல், இயல்பாக அவனை பார்த்து புன்னகைத்தேன்.

“ம்ம்ம்.. நல்லா இருக்கேன்பா.. நீ எப்படி இருக்குற..?”

“நானும் நல்லா இருக்குறேன் ஸார்…”

“நீ என்ன இந்தப்பக்கம்.. நீயும் ட்ரிங்க்ஸ்லாம் சாப்பிட ஆரம்பிச்சுட்டியா..?”

“ஐயையோ..!! அதெல்லாம் இல்ல ஸார்.. பிரண்டு ஒருத்தன் கம்பெனி வேணும்னு கூப்பிட்டான்.. கூட வந்தேன்..!! இப்போத்தான் கெளம்பினான்.. உங்களை பாத்தேன்.. அதான்.. அப்படியே பேசிட்டு போகலாம்னு..!! உக்காராலாமா..??”

“ம்ம்ம்.. உக்காரு உக்காரு..!!”

எனக்கு எதிரே கிடந்த சேரில் ஷ்யாம் அமர்ந்தான். அவனுக்கு ஒரு பெப்சி வாங்கிக்கொண்டான். நான் விஸ்கியை பொறுமையாக சிப்ப, அவன் பெப்சியை ஸ்ட்ராவில் உறிஞ்சினான்..!! இருவரும் கொஞ்ச நேரம் பொதுவாக ஏதோ பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு உடலுக்குள் போதை சுறுசுறுவென ஏற ஆரம்பித்த போதுதான்.. அவன் மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

“ஸார்.. நான்.. உ..உங்ககிட்ட ஒரு மேட்டர் சொல்லணும்..!!”

“என்ன மேட்டர்..?” நான் புகையை ஊதிக்கொண்டே கேட்டேன்.

“சொன்னா நீங்க தப்பா எடுத்துக்ககூடாது..!!”

“இல்ல.. எடுத்துக்க மாட்டேன்.. சொல்லு..”

“நா..நான்.. நான் மலரை லவ் பண்றேன் ஸார்..!!” அவன் தயங்கி தயங்கி சொல்ல, அதைக்கேட்டு நான் அதிர்ந்து போனேன். ஏற்றிய போதையில் பாதி குப்பென இறங்கிய மாதிரி இருந்தது.

“ஷ்..ஷ்யாம்.. எ..என்ன சொல்ற நீ..?”

“ஆமாம் ஸார்..!! நான் மலரை லவ் பண்றேன்.. இது அவங்களுக்கும் தெரியும்..!!”

“ஓ..!!”

“ரொம்ப நாளாவே அவங்க மேல எனக்கு இன்ட்ரஸ்ட்.. கிட்டத்தட்ட உங்க வீட்டுக்கு அவங்க வந்ததுல இருந்தே..!! ஆனா.. ரெண்டு மாசம் முன்னாடிதான் என் காதலை அவங்ககிட்ட சொன்னேன்..”

“அ..அவ என்ன சொன்னா..?”

“அவங்க வேற ஒருத்தரை விரும்புறதா சொல்லி.. நாகரிகமா மறுத்துட்டாங்க..!!”

“ஓ..!! அவ யாரை விரும்புறா..?”

“ஹ்ஹாஹ்ஹா..!! என்ன ஸார் தெரியாத மாதிரி கேக்குறீங்க..? ஆக்சுவலா அன்னைக்கு அவங்க யாருன்னு சொல்லல.. எனக்கும் தெரியாமத்தான் இருந்தது..!! ஆனா.. மலரை பொண்ணுபாக்க வந்தப்போ நடந்த மேட்டர்.. அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கும் தெரியும் ஸார்..!! அப்புறந்தான் அவங்க யாரை லவ் பண்றாங்கன்னு எனக்கும் தெரிஞ்சது..!!”

“ஓ..!!” என்று லேசாக அதிர்ந்தவன், ‘உனக்கும் தெரிஞ்சு போச்சா..?’ என்று மட்டும் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

“மொதல்ல எனக்கு மலர் மேல கொஞ்சம் எரிச்சலா கூட இருந்தது.. அந்த முகம் தெரியாத காதலன் மேல கொஞ்சம் கோவமா இருந்தது..!! அவன்கிட்ட தோத்துப் போயிட்டோமேன்னு ஒரு ஆத்திரம்..!! ஆனா.. ஆனா இப்போ அது யாருன்னு தெரிஞ்சப்புறம்.. எனக்கு கொஞ்சம் கூட கோவமே வரல..!! உங்ககிட்டதான் நான் தோத்துப் போயிருக்கேன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு சந்தோஷமாத்தான் இருக்குது..!! அதே மாதிரி.. மலர் மேல இருந்த மதிப்பும் இப்போ ரொம்ப ரொம்ப அதிகம் ஆயிடுச்சு..!!”

“ம்ம்ம்..” அவன் என்ன சொல்ல வருகிறான் என்று இன்னும் எனக்கு குழப்பமாகவே இருந்தது. Pundai Tamil Hot Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top