கண்ணாமூச்சி ரே ரே – 47

(Sex Stories In Tamil - Kannamoochi Rae Rae 47)

Raja 2014-06-27 Comments

Sex Stories In Tamil – “இதுவரை எல்லா பொண்ணுகளையும் நானா போய்த்தான் தூக்கிட்டு வந்திருக்கேன்.. செவப்பு ட்ரஸ், விக்லாம் போட்டுக்கிட்டு.. அலைஞ்சு திரிஞ்சு கஷ்டப்பட்டு..!! இந்த அகல்விழி ஒருத்திதான் தானா வந்து தனியா எங்கிட்ட மாட்டுனவ..!! பாவம்.. கல்யாணம்னு சொல்லிட்டு சந்தோஷமா வந்தா.. இங்க கருமாதி நடக்கப் போறது தெரியாம..!! ஹாஹாஹாஹா..!!”

85

“……………………………………”

“ஆனா சும்மா சொல்லக்கூடாது.. எனக்கு நாலஞ்சு நாள் செம கம்பனி குடுத்தா..!! வாழணும்னு அவ்வளவு ஆசை.. உசுரை விட்டுடாம அஞ்சுநாள் இழுத்துட்டு கெடந்தா..!! ஹாஹா..!!”

மணிமாறனின் வார்த்தைகளில் புதைந்திருந்த குரூரம், ஆதிராவை வெடவெடக்க வைத்தது.. அவளது இதயத்துடிப்பின் வேகம், இப்போது எக்கச்சக்கமாய் ஏறிப்போயிருந்தது..!!

“பாக்கலாம்.. நீ எத்தனை நாள் தாக்குப்பிடிக்கிறன்னு..!!” இளிப்புடன் சொல்லிக்கொண்டே, ஆதிராவின் புஜத்தை பற்றி தூக்கினார்.

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

மிரண்டுபோய் சப்தம் எழுப்பிக்கொண்டே, விழுக்கென்று துள்ளி, அவரது பிடியில் இருந்து நழுவினாள் ஆதிரா.. மணிமாறனின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.. உதட்டில் ஒரு மிருதுவான புன்னகையை கசியவிட்டவாறே, புறங்கையை வீசி, ஆதிராவின் கன்னத்தில் ‘ரப்ப்ப்..’பென்று ஒரு அறைவிட்டார்..!! அவ்வளவுதான்.. ஆதிரா சுருண்டுபோய் தரையில் வீழ்ந்தாள்..!!

வீழ்ந்தவளை அள்ளி நாற்காலியில் விசிறினார்.. அவளது எதிர்ப்பு இப்போது வெகுவாக குறைந்து போயிருந்தது.. உடலின் சக்தி உறிஞ்சப்பட்டவளாய் சோர்ந்துபோய் காட்சியளித்தாள்.. மயக்கம் வருவதுபோல அவளுக்குள் ஒரு உணர்வு..!! நிலைகொள்ளாமல் தள்ளாடிய தலையை திருப்பி.. அருகில் நின்ற மணிமாறன் என்ன செய்கிறார் என்று பார்த்தாள்..!!

அந்த மரமேஜையின் மீது இரண்டு ட்ரேக்கள் இருந்தன.. அந்த இரண்டு ட்ரேக்கள் நிறையவும் கூர்தீட்டப்பட்ட சில கருவிகள்.. ஆணிகள், ஊசிகள், உளி, குறடு, கத்தி, சுத்தியல், அரம், திருப்புளி..!! எதைத் தேர்வு செய்யலாம் என்பது போல எல்லாவற்றையும் தடவிப்பார்த்த மணிமாறன்.. பிறகு அந்த உளியை கையில் எடுத்துக்கொண்டு, ஆதிராவின் பக்கமாக திரும்பினார்..!! அவளுக்கோ முதுகுத்தண்டில் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு..!!

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!” பதறியடித்து துள்ளினாள்.

மணிமாறன் அவளுடைய கழுத்தை கொத்தாகப் பற்றினார்.. நாற்காலியோடு சேர்த்து அவளை அழுத்தி பிடித்தார்.. நகரமுயன்ற அவளது கால்களை, தனது காலால் மிதித்து நசுக்கினார்..!! ஆதிரா குலைநடுங்கிப் போனாள்.. அவளது இமைகள் மிரண்டுபோய் விரிந்துகொண்டன.. அவளது மார்புகள் ரெண்டும் ‘சர்ர் சர்ர்ர்’ரென்று விம்மி பதறின..!!

“என்ன இது.. சின்னப்புள்ள மாதிரி.. எங்க ஓடிறலாம்னு நெனைக்கிற..?? ம்ம்..??”

மணிமாறன் சொல்லிக்கொண்டே அந்த உளியை அவளது கண்ணுக்கருகே கொண்டுசெல்ல.. ஆதிரா படக்கென இமைகளை இறுக்கி மூடிக்கொண்டாள்.. ‘ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்..’ என்று முனகினாள்.. மூச்சிரைத்தாள்.. துடித்தாள்..!!

மணிமாறன் இரண்டு விரல்களால் ஆதிராவின் இமைகளை விரித்து பிடித்தார்.. வேறு வழியில்லாமல் திறந்துகொண்ட அவளது விழிக்கருகே உளியை நீட்டினார்.. நெருக்கமாக கொண்டு சென்றார்..!! பீதி நிறைந்திட்ட ஆதிராவின் கருவிழி.. கூர் தீட்டப்பட்ட பளபளப்புடன் அந்த சிறுஉளி.. இரண்டுக்கும் இடையே சில மில்லி மீட்டர்களே இடைவெளி..!!

“உனக்கும் தாமிராவுக்கும் ஒரே மாதிரியான கண்ணு.. நல்லா பெருசா.. அழகா.. கோலிகுண்டு மாதிரி..!!”

கருவிழிக்கு வெகுஅருகே நீட்டப்பட்டிருந்த உளியை, ஆதிரா மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்.. அவளது நாசிக்கருகே சட்டென அந்த வாசனை மாற்றத்தை உணர்ந்தாள்.. அத்தனை நேரம் அந்த அறையை நிறைத்திருந்த துர்நாற்றம் நீங்கி, சரசரவென ஒரு இனிய நறுமணம் அங்கே பரவுவதை, உடனடியாக அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது.. அது.. அந்த வாசனை.. மனதை மயக்குகிற மகிழம்பூவின் வாசனை..!!

86

மணிமாறனோ அந்த வாசனை மாற்றத்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்..!!

“ஆங்.. வந்ததுல இருந்தே உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு நெனச்சுட்டு இருந்தேன்..!! உன் தங்கச்சி தாமிரா இருக்காள்ல.. அவ..” அவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, அவரது பேச்சை தடைசெய்கிற வகையில்..

“க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்ககர்ர்ர்ர்ர்..!!!!!” அறைக்கு வெளியே இருந்து அந்த சப்தம்.. ஏதோ காட்டுவிலங்கின் உறுமல் மாதிரி..!!

மணிமாறன் சற்றே நிதானித்தார்.. ஆதிராவை பிடித்திருந்த பிடியை கொஞ்சம் தளர்த்தியவர், காதுகளை கூர்மையாக்கி அந்த சப்தத்தை கவனித்தார்..!!

“க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்ககர்ர்ர்ர்ர்..!!!!!”

அந்த சப்தம் இப்போது இன்னுமே தெளிவாக கேட்டது.. ஆனால் அது என்ன சப்தம் என்று மணிமாறனுக்கு பிடிபடவில்லை..!! தொடர்ந்து அந்த சப்தம் கேட்டுக்கொண்டே இருக்க.. ஓரிரு வினாடிகள் யோசித்த மணிமாறன், பிறகு கையிலிருந்த உளியை பட்டென ட்ரேயில் போட்டார்..!! கையுறைகளையும், கழுத்தில் கட்டியிருந்த துணியையும் அவிழ்த்து மேஜையில் விசிறினார்.. மெல்ல நடந்து சென்று படிக்கட்டு ஏறினார்.. கதவை திறந்து வெளியில் பார்வையை வீசினார்..!! அவ்வாறு பார்வையை வீசிய அடுத்தநொடியே.. வெளியே அவர் கண்ட காட்சியில் அப்படியே பக்கென அதிர்ந்து போனார்..!!

அந்த கதவிலிருந்து நீண்டிருந்த நீளமான காரிடாரில்.. அங்கிருந்து சற்றே தூரமாக.. காரிடாருக்கு குறுக்குவாட்டில் படுத்திருந்தது அந்த காட்டுப்புலி..!! அந்த புலிக்கருகே.. காரிடாரின் மையமாக.. தலையை குனிந்தவாறு நின்றிருந்தது, சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்..!!

அசைவெதுவும் இல்லாமல் அந்த உருவம் அப்படியே உறைந்துபோய் நின்றிருக்க.. அதன் காலடியில் படுத்திருந்த புலிதான் வாயை அகலமாக திறந்து உறுமிக் கொண்டிருந்தது..!!

“க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்ககர்ர்ர்ர்ர்..!!!!!”

கண்ணால் காண்பதை மணிமாறனால் நம்பவே முடியவில்லை.. அதிர்ச்சியில் திக்கித்துப்போய் அசையாமல் நின்றிருந்தார்..!! அந்த புலி இப்போது எழுந்தது.. தலையை சுழற்றி “க்க்க்கர்ர்ர்ர்ர்..” என்று ஒருமுறை கர்ஜித்தது.. வரிவரியாய் இருந்த உடம்பை ஒருமுறை குலுக்கிவிட்டுக்கொண்டது.. இவரை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தது..!!

மணிமாறன் இப்போது சற்றே சுதாரித்துக் கொண்டார்.. ஏதோ விபரீதம் என்று உணர்ந்துகொண்ட அவரது மூளை பட்டென சுறுசுறுப்பானது.. அறைக்கதவை சாத்திவிட சொல்லி அவருக்கு ஆணையிட்டது..!! அதேநேரத்தில்.. நடந்து வந்துகொண்டிருந்த வரிப்புலி கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து.. அறையை நோக்கி ஓடிவர ஆரம்பித்தது..!! சட்டென தரையில் இருந்து எழும்பி, சரக்கென ஒரே பாய்ச்சலாய் பாயவும்.. மணிமாறன் கதவுகளை படக்கென சாத்தவும் சரியாக இருந்தது..!! கதவுகள் மூடிக்கொள்வதற்கு முன்பாக.. அந்த புலியின் ஒற்றைக்கால் மட்டும் உள்ளே நீண்டு.. அதன் கூரிய நகங்கள் மணிமாறனின் முகத்தை பிறாண்டியன..!!

“ஆஆஆஆஆஆ…!!”

கதவை மூடிய மணிமாறன், தடுமாறிப்போய் கீழே சரிந்தார்.. படிக்கட்டில் கடகடவென உருண்டு தளத்தில் வந்து விழுந்தார்..!! ஆதிராவுக்கு எதுவும் புரியவில்லை.. உள்ளே வந்து விழுந்த மணிமாறனை குழப்பமும், திகைப்புமாக பார்த்தாள்..!!

“த்த்தட்ட்டார்ர்ர்.. த்த்தட்ட்டார்ர்ர்.. த்த்தட்ட்டார்ர்ர்..!!!”

அந்த புலி சற்றும் சளைக்காமல்.. அறைக்கதவின் மீது திரும்ப திரும்ப பலமாக மோதிக்கொண்டே இருந்தது.. முட்டி முட்டியே கதவை திறந்துவிட முயன்றது..!! வலுவற்ற அந்த கதவும் எந்த நேரமும் திறந்துகொள்வது போல.. தளர்ந்துகொண்டே சென்றது..!!

அத்தனை நேரம் மிக நிதானமாக இயங்கிக்கொண்டிருந்த மணிமாறன் இப்போது படக்கென சுறுசுறுப்பானார்.. அவசரம் தொற்றிக் கொண்டவராய் எழுந்து ஓடிவந்தார்.. மரமேஜையின் ட்ராவை இழுத்தார்.. உள்ளிருந்து அந்த கைத்துப்பாக்கியை எடுத்தார்.. பதற்றத்தில் நடுங்குகிற விரல்களோடு தோட்டாக்களை நிரப்பினார்..!! ஒருசில தோட்டாக்கள் அவரது கையிலிருந்து நழுவி.. தரையில் விழுந்து ‘டங்.. டணார்ர்ர்..!!’ என்று சப்தம் எழுப்பின..!! ஆதிரா எல்லாவற்றையும் அதிர்ச்சியாக, மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

87

“ப்பட்டாடார்ர்ர்ர்…!!!!!”

கதவு திறந்துகொண்டது.. கைத்துப்பாக்கியுடன் மணிமாறன் திரும்பினார்.. வாசலில் தோன்றிய புலி, அங்கிருந்தே ‘சர்ர்ர்ர்’ரென இவர் மீது பாய்ந்தது..!! புலியோடு சேர்ந்து தரையில் சரிந்தார் மணிமாறன்..!!

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

புலியை பார்த்த அதிர்ச்சியில், ஆதிரா மிரண்டுபோய் சப்தம் எழுப்பும்போதே.. பதட்டத்துடன் துப்பாக்கியின் விசையை இழுத்தார் மணிமாறன்..!!

“ட்ட்டுமீல்..!!!”

பெரும் சப்தத்துடன் துப்பாக்கி வெடித்தது.. வெளிப்பட்ட தோட்டா புலியை தாக்காமல், சுவரை பெயர்த்தது..!!

“க்க்க்கர்ர்ர்ர்ர்..”

கோபமாக உறுமிய புலி தனது வலுவான காலை தூக்கி மணிமாறனை ஓங்கி அறைந்தது.. அறைந்த வேகத்தில் ஐந்தடி தூரத்தில் போய் விழுந்தார் மணிமாறன்.. அவரது கையிலிருந்த துப்பாக்கி எங்கோ பறந்தது..!! வெலவெலத்துப்போன மணிமாறன் சரக்கென எழுந்தார்.. படிக்கட்டில் அவசரமாய் ஏறி தடதடவென வெளியே ஓடினார்..!!

நடந்ததை பார்த்த ஆதிரா திக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள்.. கத்தக்கூட தோன்றாமல் வாயடைத்துப்போய் உறைந்திருந்தாள்..!! அந்த புலி இப்போது மெல்ல ஆதிராவின் பக்கம் திரும்பியது.. கூர்மையான பற்களை வெளிக்காட்டி “க்க்க்கர்ர்ர்ர்ர்..” என்று ஒரு கர்ஜனை செய்தது..!!

பிறகு.. அவளை கண்டுகொள்ளாமல் திரும்பி, மெதுவாக படியேறியது.. வாசலை அடைந்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து ஓடியது.. சற்று தொலைவில் ஓடுகிற மணிமாறனை நாலுகால் பாய்ச்சலில் விரட்ட ஆரம்பித்தது..!! நீளமான வராண்டா.. முகத்தில் பீதியுடன் ஓடுகிற மணிமாறன்.. அவரை வெறியுடன் விரட்டுகிற காட்டுப்புலி.. இருவரையும் ஓடவிட்டு அவர்களுக்கு பின்னால், காற்றில் படபடக்கிற சிவப்பு அங்கியுடன் நிதானமாக நடந்துசெல்கிற அந்த உருவம்..!!

Comments

Scroll To Top