ஐ ஹேட் யூ பட் – 27

(Sex Stories In Tamil - I Hate U But 27)

Raja 2013-10-25 Comments

அதேநேரம் அவளுடைய மனதுக்குள் ஒருவித குழப்ப விவாதமும் நடந்து கொண்டிருந்தது. ‘நான்கு மாதங்கள் முன்பே எனது ஃபோட்டோ அங்கே போயிருக்கிறது என்றால்.. அசோக் என் ஃபோட்டோவை பார்த்தானா இல்லையா..?? இல்லை.. பார்த்திருக்க மாட்டான்.. பார்த்திருந்தால் அந்த செய்தி எப்போதோ என்னிடம் வந்து சேர்ந்திருக்குமே..?? அதுசரி.. நான்கு மாதங்களாக அவர்கள் ஏன் அப்பாவை தொடர்பு கொள்ளவில்லை..?? திடீரென ஏன் தொடர்பு கொண்டார்கள்..??’

அந்த கடைசி கேள்வி மனதில் எழுந்ததும், அன்று அவளுக்கும் அசோக்கிற்கும் நடந்த சண்டையும், அதன்பிறகு அவன் ஃபோனில் அண்ணனை அழைத்து பேசியதும் அவளுடைய நினைவுக்கு வந்தது..!! உடனே படபடவென பாதி கேள்விகளுக்கு விடை தெரிந்து போனமாதிரி இருந்தது..!! ‘ஆமாம்.. அப்படித்தான் இருக்கவேண்டும்.. முன்பு ஏதோ ஒரு காரணத்துக்காக என் ஃபோட்டோவை பார்க்காமலே, அசோக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறான்.. அப்புறம் அன்று அவன் பேசியதும், அவனுடைய அண்ணன் அப்பாவை திரும்ப தொடர்பு கொண்டிருக்கிறார்.. அசோக் அன்று சொன்னதை வைத்து ‘மாப்பிள்ளைக்கு சம்மதம்’ என்று அவரும் இவரிடம் சொல்லியிருக்கிறார்.. கூட்டி கழித்து பார்த்தால், அசோக்கிற்கு இன்னும் விஷயமே தெரியாது போலிருக்கிறது..!!’

ப்ரியா நெற்றியை கீறிக்கொண்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள். சடசடவென சில முடிவுகள் எடுத்தாள். ‘அசோக்கின் சம்மதம் தெரிந்து கொள்ள அப்பாவை எதிர்பார்க்க தேவை இல்லை.. நாமே நாளை அவனிடம் மனம் விட்டு பேசி விட வேண்டியதுதான்.. அவனுக்கு என் மீது கோபம் இருக்கலாம்.. இத்தனை நாளாய் அவனிடம் நடந்து கொண்ட முறைக்காக தயக்கமில்லாமல் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்.. அவன் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறேன் என்று வெட்கமில்லாமல் சொல்லிவிட வேண்டும்.. என்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளடா என்று மனம் விட்டு பேசிவிட வேண்டும்..!!’

அந்த மாதிரி தெளிவாக ஒரு முடிவெடுத்ததும், ப்ரியாவின் மனம் குழப்பம் நீங்கி அமைதியானது. மீண்டும் அசோக்கை பற்றிய காதல் நினைவுகள் மனதை நிறைக்க ஆரம்பித்தன. அவனுடைய புகைப்படத்தை மார்பின் மீது போட்டுக்கொண்டு, கண்கள் மூடி கல்யாணக்கனவு காண ஆரம்பித்தாள்.

அத்தியாயம் 17

இரவு தூங்க தாமதம் ஆனாலும், காலையில் சீக்கிரமே ப்ரியா எழுந்துவிட்டாள். எப்போதும் பெங்களூர் குளிருக்கு அவசர அவசரமாய் தலையில் தண்ணீர் மொண்டு ஊற்றுபவள், அன்று ஆற அமர அரை மணி நேரமாக குளித்தாள். குளிர்ந்த நீர் உடலில் ஏற்படுத்துகிற ஜில்லென்ற சிலிர்ப்பை இமைகள் மூடி ரசித்தாள். நீரில் நனைந்த தன் அங்கங்களை ஒவ்வொன்றாக கூர்ந்து கவனித்தாள். அவளது அங்கங்கள் அனைத்தும் திடீரென அழகாய் மாறிவிட்டதாக அவளுக்கு தோன்றியது. அனைத்துக்கும் சொந்தக்காரனை மனதில் நிறுத்தி.. கண்கள் மூடி.. கைகள் விரித்து.. ஷவரில் இருந்து சிதறுகிற நீரில்.. சுகமாய் நனைந்தாள்..!!

வெளியே வந்து உடை அணிந்து கொண்டாள். அவள் புடவை அணிந்து கொள்வது மிகவும் அரிது. பெரும்பாலும் சுடிதார்தான்.. அதையும் அக்கறை இல்லாமலே உடுத்திக் கொள்வாள்..!! அன்று ஏனோ அவளுக்கு புடவை அணிந்து செல்லவேண்டும் போலிருந்தது. ஆரஞ்சு நிறத்தில் ஒரு புடவையை எடுத்து அணிந்து கொண்டாள். அதே நிறத்தில் ப்ளவுசும்..!! கோதுமை நிறத்தில் மின்னும் அவளது தேகத்திற்கு அந்த நிறப்புடவை இன்னும் வண்ணம் கூட்டியது.

கண்ணாடி முன் நின்று நீண்ட நேரமாய் அலங்காரம் செய்து கொண்டாள். தலையை பின்னாமல் காற்றில் அலைபாய விட்டாள். மெலிதாக மேக்கப் போட்டுக் கொண்டாள். கொஞ்சமாய் உதட்டுச்சாயம் பூசிக்கொண்டாள். புருவத்திற்கு மையிட்டாள். இமைகளை கூர் தீட்டினாள். எப்போதும்போல குட்டியாய் ஒரு ஸ்டிக்கர் பொட்டை நடுநெற்றியில் ஒட்டிக்கொண்டாள். எல்லாம் முடிந்ததும் திருப்தி அடைந்தவளாய், உடலை முன்னும் பின்னும் திருப்பி திருப்பி கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளுடைய கற்பனையில் இருந்து கிளம்பி கண்ணாடியில் தோன்றிய அசோக்கிடம், மனதாலேயே பேசினாள்.

‘ஒய்.. திருடா.. ஈகோ புடிச்ச இடியட் மடையா..!! புடிச்சிருக்கா என்னை.. ப்ரியாவை பிடிச்சிருக்கா உனக்கு..?? பாரு.. எவ்ளோ அழகா இருக்கேன் பாரு.. எல்லாம் யாருக்குன்னு சொல்லு பார்ப்போம்.. உனக்குத்தாண்டா லூசு..!! ஹ்ம்ம்ம்… என்னடா சொல்லப்போற இன்னைக்கு.. லவ் பண்றேன்னு சொன்னா என்ன சொல்வ.. ம்ம்..?? மவனே.. முடியாதுன்னு மட்டும் சொல்லு.. அப்டியே அந்தக்கண்ணை நோண்டி எடுத்துடுறேன்..!! ஹாஹாஹாஹா… உன்னை லூசுன்னு சொல்லிட்டு நான் லூசு மாதிரி உளறிட்டு இருக்கேன் பாரு.. உன்னால என்னென்னலாம் பண்றேன்..??’

“என்னம்மா பண்ற..??” வரதராஜனின் குரல் ப்ரியாவை நனவுலகுக்கு மீட்டு வந்தது.

“ஒண்ணுல்ல டாடி.. இதோ வந்துட்டேன்..!!”

“சீக்கிரம் வாம்மா.. டைமாச்சு..!!”

“இதோ.. ஒரு நிமிஷம் டாடி..!!”

ப்ரியா மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன் உடலை பார்த்து கொண்டாள். அவசரமாய் பேக் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். செல்போன் எடுத்துக்கொண்டாள். அறையை விட்டு வெளிப்பட்டாள். அலங்காரம் செய்த அழகு சிலையாக வெளிவந்த மகளை பார்த்து, வரதராஜன் ஒருகணம் பிரம்மித்துப் போனார். மறுகணமே முகம் மலர்ந்து புன்னகைத்தார்.

“என்னம்மா.. இன்னைக்கு புதுசா புடவைலாம்..??”

“ஏன் டாடி.. நல்லா இல்லையா..??”

“ஐயோ.. பிரம்மாதமா இருக்கும்மா.. மகாலக்ஷ்மி மாதிரி இருக்குற..!!”

“நெஜமாவா..?? புடவைல நான் நல்லாருக்கனா..??”

“என் பொண்ணுக்கு என்னம்மா கொறைச்சல்.. அவ என்ன ட்ரஸ் போட்டாலும்.. தேவதை மாதிரி இருப்பா..!!” வரதராஜன் மகளை மனதார புகழ,

“ஹையோ.. போங்க டாடி..!!” பிரியா நாணத்தில் முகம் சிவந்தாள்.

“ஹாஹா..!! ஹ்ம்ம்.. இப்போ எனக்கு எல்லாம் புரியுது..!!”

“என்ன புரியுது..??”

“இன்னைக்கு ஏன் இந்த ஸ்பெஷல் அலங்காரம்னு..!!”

“ஏ..ஏன்..??”

“ஆபீஸ்ல இன்னைக்கு மாப்ளையை சந்திச்சு பேசுற மாதிரி ப்ளான்.. கரெக்டா..??”

“ஐயோ.. அ..அதெல்லாம் ஒன்னும் இல்ல டாடி.. நா..நான் சும்மா… சாதாரணமாத்தான் இதெல்லாம்..!!” பிடுங்கித் தின்னுகிற வெட்கத்துடன் ப்ரியா தடுமாற்றமாக சொன்னாள்.

“ஹாஹா.. சரிம்மா விடு..!! ம்ம்ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம்..!!”

“என்ன டாடி..??”

“ஃபோன்ல பேசுறதை விட.. இன்னைக்கு நேர்லயே அவங்க வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வரலாம்னு இருக்கேன்மா.. போயிட்டு வரவா..??”

“சரி டாடி.. போயிட்டு வாங்க..!!” Bra Kalattum Sex Stories In Tamil

– தொடரும்

ஐ ஹேட் யூ பட் – 27

What did you think of this story??

Comments

Scroll To Top